Wednesday 1 March 2017

தாழ்த்தப்பட்டவர் சரித்திரம்


பா.நீலகண்டன்

பண்டைத் தமிழகத்தின் ஜாதி அமைப்பைக் குறித்து ஆராயப்புகும் ஒருவனுக்குக் கிடைக்கும் முதன்மை ஆதாரம் இலக்கியமே. தாழ்த்தப்பட்ட மக்கள் இலக்கியங்களில் தலை மக்களாக இடம் பெறலாகாது என்ற இலக்கிய மரபு ஒன்று இருந்து வந்த அன்றையச் சூழலில் அவர்களைப் ஫ற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் மிக அரிதாகவே காணப்படு~ கின்றன. சிற்சில சொற்களையும் உவமைகளையும் ஆதார~ மாகக் கொண்ட ஆய்வை நடத்த வேண்டியுள்ளது.தமிழ் இலக்கிய வரலாற்றின் துவக்க காலத்தில் இருப்பது தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் அகத்திணையியல், மரபியல் இரண்டும் ஜாதி அமைப்புக் குறித்த சில செய்தி~ களைத் தெரிவிக்கின்றன. பிரிவு பற்றிப் பேச வந்த அகத்~ திணையியல் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நான்கு பிரிவினரைச் சுட்டுகின்றது. இந்நால்வரும் "ஏவல் மரபினர்" (தொல் அகத்திணையியல்.26) எ஁ன்றும் குறிக்கப்~ படுகின்றனர். அதாவது "பிறரை ஏவிக்கொள்ளும் தொழில் தமக்குளதாகிய தன்மையை உடையவர்கள்" என்று இதற்கு நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார். இதிலிருந்து நான்கு 63 குலத்தினரின் ஏவலுக்குக் கீழ்ப்பட்டுக் குற்றேவல் செய்த ஒரு பிரிவினர் சமுதாயத்தில் இருந்தனர் என்பது புலனா~ கிறது. அவர் யார்?மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவினர்஖்஖ான மரபும் தொழி~ லும் வரையறுத்த மரபியல், அதனை அடுத்து, `அன்னராயினும் இழிந்தோர்க்கு இல்லை' (தொல்.மரபியல்:84) என்கிறது. இங்கு `இழிந்தோர் என்பதற்கு "நான்கு குலத்தினும் இழிந்த மாந்தர்" என இளம்பூரணர் உரை எழுதுகிறார். இந்த இழிந்த மக்கள் யார்?<நடுவண் ஐந்திணைக்குரிய தலைமக்களைப் பற்றிக் கூறிய பிறகு, அதன் புறத்தவாகிய கைக்கிளை, பெருந்~ திணைக்குரிய மக்களைப் பற்றி அகத்திணையியலில் பேசப்~ படுகிறது. "அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்து என்மனார் புலவர்"இதை முன்னெழுப்பிய இரு கேள்விகளுக்கான ஐயங்களுக்~ கான விடையாக஼க் கொள்வோம். இங்கு அடியோர் என்ப~ வரைப் பிறருக்குக் குற்றவேல் செய்வோர் ' எனவும், வினை~ வலர் என்பவரைப் `பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்லோர் எனவும் நச்சினார்க்கினியர் விளக்கி உரைக்கிறார். இவர்கள் ஏன் அதனைந்திணைக்கு உரியர் அல்லர் என்பதற்கு இளம்பூரணர் நீண்டதொரு விளக்கம் தருகிறார்; அகத்~ திணையாவன அறத்தின் வழாமலும், பொருளின் வழாம~ லும், இன்பத்தின் வழாமலும் இயலல்வேண்டும். அவை~ யெல்லாம் பிறருக்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும் அவர் நாணுக்குறைபாடு உடையவர் 64 ஆகலானும், குறிப்பறியாது வேட்கை வழியே சாரக் கருது~ வராகலானும், இன்பம் இனிய நடத்துவார் பிறர் ஏவல் செய்யாதார் என்பதனாலும் இவர் புறப்பொருட்டு உரியர் ஆயினார்" என்கிறார். இது பிறருக்குக் குற்றேவல் செய்வோரின் சமூகப் பொருளாதார நிலையை விளக்கு~ வதோடு அன்றைய இலக்கியங்கள் மேட்டுக்குடியினரின் இலக்கியங்களே என்ற உண்மையையும் தெளிவுபடுத்து஖ிறது. ஆக, பொருளாதார ஆதிக்கமும் சமூக மதிப்பும் கொண்டோர் ஒரு பக்கம்; அவர்களுக்கு அடித்தொழில் செய்தோர் ஒரு பக்கம் என்஼்று அன்றையச்சமூகம் பிளவு~ பட்டுக்கிடந்த஼து என்பது புலனாகிறது. அடிமை, இழிந்தோர் என்ற சொற்஖ள் குற்றேவல் செய்தோரின் சமூக இழி~ நிலையைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.சங்க இலக்கியங்களில் துடியர் பறையர் என்போர் பேச஬்படு~ கின்றனர். துடி, பறை என்னும் தோல் கருவிகளை இயக்கு~ பவர்கள் இவர்கள். இவர்கள் "இழிசினர் "என்றும் "இழி~ பிறப்பாளர்"என்றும் இலக்கியங்களில் இழித்துரைக்கப்படு~ கின்றனர்.துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின" (புறம்: 287)"பூக்கோல் இன்று என்று அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே" (புறம்: 289)"இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி' (புறம்:170)கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று (புறம்: 82) 65 இழிசினர் என்றும் இழிபிறப்பாளர் என்றும் அழைக்கப்படும் இவர்களின் தொழில் பறை மற்றும் துடியறைதல், தோல் பொருட்களைப் பழுதுபார்த்தல் என்று தோல்தொழிலோடு ஒட்டியதாகத் தெரிகிறது.புலையன் என்பது ஏசத்தக்க இழிசொல்லாக இலக்கியத்தில் சில இடங்களில் கையாளப்படுகிறது. (கலி:72:4; 311:2) பறையர் துடியர் பாணர் ஆகியோரும் புலையர் என அழைக்கப்படுகின்றனர்....... புலையன் பேழ்வாய்த் தண்ணைமை இடந்தொட்டன்ன அருவி இழிதரும் பெருவரை நாடன் (நற்றிணை: 345:5-7)"மலையமா ஊர்ந்து போகிப் புலையன் பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கவர்" (நற்றிணை77:1-2)புதுவன ஈகை வளம்பாடிக் காலின் பிரியாக் கவிதைப் புலையன்தன் யாழின்" (கலித்: 95:9-10)இவர்கள் மட்டுமின்றி இழிதொழிலைச் செய்யும் வேறு சிலரும். உதாரணமாக சுடுகாடு காக்கும் வெட்டியான் துணி வெளுக்கும் வண்ணான் ஆகியோரும் புலையன் புலைத்தி என்ற பொதுப் பெயராகலேயே அழைக்கப்படுகின்றனர். "கள்ளி போகிய களரி மருங்கின வெள்ளி னிறுத்த பின்றைக் கள்ளொடு புல்லகத்திட்ட சில்லவிழ் வல்சி புலையனேவப் புல்மேல் அமர்ந்துண்டு அழல்வாய்ப் புக்க முன்னும் பலர்வாய்த்திராஅர் பகுத்துண்டோரே" (஫ுறம்:360:16-2) 66 "அடியியல் விழவின் அழுங்கல் மூதூர் உடையோர் பான்மையின் பெருங்கை தூவா வறனில் புலைத்தி எல்லின் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கம்" (நற்.90:1-4)ஆக, அன்றை௟ச் சமூக அமைப்பில் பறையர்,துடியர், பாணர், வண்ணார், வெட்டியான் போன்ற வேலைப் பிரிவினர் இழி~ நிலைச் சாதியினராகக் கருதப்பட்டனர் எனக்கொள்ளலாம். அன்றைய விவசாயத் தொழில் சாதியினராக விளங்கியவர்~ கள் இவர்களா? இது பற்றி உறுதியாக஼க் கூறமுடியாவிடினும் சில யூகங்களை முன்வைக்கச் சங்க இலக்கியம் இடமளிக்கிறது. நெல்கதிரை அறுவடை செய்யும் மக்கள் பறையை முழக்கிக் கொண்டே அறுவடை செய்ததாக இலக்கியங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇக் கண்மடல் கொண்ட தீந்தேன் இரிய" (புறம்:348)வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல்புள் இரிய" (புறம்:350)<வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்" (அகம்: 204)வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச் செங்கண் எருமை இனம்பிரி பொருத்தல்" (மலைபடு:471-2)ஒலிந்த பகன்றை விளைந்த கழனி வன்மைவினைநர் அரிபறை" (மதுரை.காஞ்: 261-62) பறையறைவர்கள் இழிந்தவர்கள், புலையர்கள் என்னும்~ போது, இங்கு அறுவடைத் தொழிலில் ஈடுபட்டவர்களும் இழிநிலை மக்களாக இருக்க வேண்டும். 67 மதுரைக்காஞ்சியில் வன்கைவினைஞர் (அதாவது வலிய கை~ யினால் தொழில் செய்பவர்கள் என்ற பொருளில் ) எனச் சுட்டப்படுவது போல வேறு சில இடங்களில் நெல் வயல்~ களின் களை பறிப்பவர்களும் அவ்வாறே சுட்டப்படுகின்றனர். அத்தோடு கடைசியர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.கைவினை மாக்கள்தம் செய்வினை முடிமார் சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட நீடின வரம்பின் வாடிய விடினும் கொடியரோ நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும். (குறுந்:309)கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர் சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் மலங்குமிளிர் செருவில் தனம்பு தடிந்திட்ட பழன வாளைப் பரூரக்கண் துணியல் புது நெல்வெண்சோற்றுக்கண்ணுறையாக விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி நீடு கதிர்க் கழனி சூடு தடுமாறும் வன்கை வினைஞர் " கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்தீ தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச் செங்கண் நெடுங்கயல் சின்மொழிக் கடைசியர் வெங்கண தொலைச்சிய விருந்தின் பாணி" (சிலம்பு10:127-131) இவை முன்குறிப்பிட்ட யூகத்தை வலியுறுத்துவனவாக அமைகின்றன. அதாவது விவசாயத் தொழிலில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபட்டவர்஖ளின் `கடைநிலை' மக்களே என்பது "கடைசியர்" என்று சொல்லால் புலனாகிறது. சங்க காலத்தில் பண்ணை அடிமைகள் இருந்தனரா என்ப஼தற்கான 68 தற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லையெனினும், இக்~ கடைசியர் தங்கள் சமூக நிலையில் அடிமைகளின்று பெரிதும் வேறுபட்டிருக்கவில்லை எனக் கொள்ள இட~ முண்டு" என்கிறார் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி!இலக்கியங்கள் சுட்டும் `உழவர் ' என்ற சொல்லுக்கு உரியவர்~ களாக விவசாயத் தொழிலில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபடும் இக்கீழ் மக்களைக் கருத இடமில்லை. மருத நிலங்~ களில் வாழும், உழுதுண்பாராகிய சிறுநிலை உடைமையாளர்~ களே 'உழவர் ' என்று சுட்டப்படும் சொல்லுக்கு உரியவர்~ களாகத் தெரிகிறார்கள்.ஈரச் செவ்வி உதவின வாயினும் பல்லெருத்துள்ளும் நல்லேருது நோக்கி வீறுவீறாயும் உழவன் போல" (புறம்:289:1-3)வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக் கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் எரிமருள் பூஞ்சினை இனைச்சிதர் ஆர்ப்ப நெடுநெல் அடைச்சிய கழனியேர் புகுத்துக் குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர அரிகால் போழ்ந்த தெரிபகட்குழவர்" (அகம்:41:1-6)நிலம், ஏர், எருது ஆகிய உற்பத்திச் சாதனங்க஼ளை உழவர் உடைமையாகக் கொண்டிருந்தனர். இதனடிப்படையில் விவசாய உற்பத்தியல் உடல் உழைப்பில் ஈடுபட்ட `கடை~ நிலை' மக்கள் நிலஉடைமையற்றவர்களாக இருந்தனர் எனவும் கொள்ளலாம். 69 சங்க இலக்கியங்களில் புலையர், பறையர் ,கடைசியர் என்று சுட்டிச் சொல்லப்பட்டவர்கள் தாழ்ந்த சாதியினரே; நில உடைமையற்ற விவசாயக் கூலிகளே; இன்றைய பள்ளர் பறையர் சாதியினரின் முன்னோர்களே என்ற முடிவுக்கு வருவதற்கான ஆதாரங்கள் இடைக்கால இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.சீவக சிந்தாமணி ஏமாங்க஼த நாட்டின் வளம் பற்றிக் கூறும் போது, நஞ்சை நிலத்தில் நிகழும் விவசாய உற்பத்தி பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. அங்கு உழவு முதல் அறு~ வடை ஈறாக உள்ள விவசாயத் தொழிலைச் செய்பவர்஖ள் `கடைசியர் ' என்றே அழைக்கப்படுகின்றனர்."சேறமை செருவினுள் செந்நெல் வான்முளை வீறொடு விளைகெனத் தொழுது வித்துவார் நாளிது பதமெனப் பறித்து நாட்செய்வார் கூறிய கடைசியர் குழாங்கொண் டேகுவார் (பா. எண் 45) கடைசியர் பெண்கள் களை பறிக்கும் தொழிலின் ஊடே மது அருந்திக் களித்தாக மற்றொரு பாடல் கூறுகிறது.வளைக்கையால் கடைசியர் மட்டு வாக்கலின் திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக் களிப்ப உண்டு இள அனங் கன்னி நாரையைத் திளைத்தலின் பெடைமயில் தெருட்டுஞ் செம்மற்றே" (பா.எ:50)சேக்கிழாரின் ஆதனூர் புலைப்பாடி வருணனை புலையர்~ களின் வாழ்க்கைச் சூழலை யதார்த்தமாகச் சித்திரிக்கிறது.மற்றவ்வூர்ப் புறம்பணையின் வயல்மருங்கு பெருங்குலையில் சுற்றம் விரும்பி கீழ்மைத் தொழிலுழவர் கிளைதுவன்றிப் பற்றிய கொடிச்சுரைமேல் படர்ந்த பழங்கூரையுடைப் புற்குரம்பைச் சிற்றில பல நிறைந்துளதோர் புலைப்பாடி.கூர்உகிர் மெல்லடியளகின் குறும்பார்ப்புக் குழுச்சுழலும் வார்பயில் முன்றிலினின்ற வள்ளுகிர நாய்த்துன்ற பறழ் கார் இருப்பின் சரிசெறிகைக் கருஞ்கிறார் கவர்ந்தோட ஆர்சிறுமென குரைப்படக்கு மரைக்கசைத்த விருப்புமணிவன்சிறுதோல் மிசைஉழத்தி மக஼உறக்கும் நிழல்மருதுந் தன்சினைமென் படையொடுங்குந் தடங்குழிசிப் புதைநீழல் மென்சினைய வஞ்சிகளும் வசிப்பறை தூங்கின மாவும் புன்சிறுநா௟்ப் புனிற்றுமுழைப் புடைத்தெங்கும் முடைத்தெங்கும்செறிவலித்திண் கடைஞர் வினைச்செயல்புரி வைகறையாமக் குறியளக்க அளைக்குஞ் செங்குடுமி வாரமச் சேக்கை வெறிமலர்த்தண் சினைக்காஞ்சி விரிநீழல் மருங்கெல்லாம் நெறிகுழல் புன்புலைமகளில் நெற்குறு பாட்டொலி பரக்கும்புள்ளுந்த஼ண் புனல்கலிக்கும் பொய்கையுடையப் புடையெங்குந் தள்ளுந்தாள் நடையசையத் தளையவிழ் பூங்குவளை மது விள்ளும் பைங்குழல் கதிர்நெல் மிலைச்சி புன்புலைச்சியர்கள் கள்ளுண்டு களிதூங்கக் கறங்குபறையுங் கலிக்கும்(பா:6-10)top: 0.4em; text-align: -webkit-auto;">புலையர்கள் இங்கு`புன்புலை மகளிர்' என்றும் புன்புலைச்சி~ யர்கள் என்றும் அழைக்கப்படுவதிலிருந்து அவர்களின் சமூக இழிநிலையை உணரலாம். இவர்களே செறிவலித்திண் கடைஞர் இப்படித்தாகிய கடைஞர் இருப்பின் என்று கடைஞர், கடைசியர் எனவும் சுட்டப்படுகின்றனர். இவர்~ களுக்கான குடியிருப்புகள் உயர்சாதியார் இருந்த ஊருக்குப் 71 புறத்தே வயல்களுக்கு நடுவேயான மேட்டுநிலத்தே தனித்து அமைந்து இருந்தது என்பதைப் `புறம்பணையின் வயல் மருங்கு.... புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்துளதோர் புலைப்பாடி' என்ற வரிகள் உணர்த்துகின்றன. உயர்சாதி நில உடைமையாளர் வீடுகளைப் `புயலடையும் மாடங்கள்' என வருணிக்கும் சேக்கிழார் புலையர்களின் குடியிருப்பைப் `பைங்கொடிச் சுரைமேல் படர்ந்த பழங்கூரையுடைப் புற் குரம்பைச் சிற்றில் ' என அதன் ஏழ்மை நிலை தோன்றச் சித்திரிக்கிறார். இது இரு வர்க்கத்திற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வைத் தெளிவாக வெளிப்படுத்து஖ிறது. `கீழ்மைத் தொழில் உழவர்' என்பது இவர்களே விவசாயக் கூலிகளாக விளங்கியதை மெய்ப்பிக்கும். இது தவிர மாடறுக்கும் தொழிலுடைய இவர்஖ள் அதிலிருந்து கிடைக்கும் தோல், நரம்பு, கோரோசனை முதலாய பொருட்களை உயர்சாதி~ யார் கோயில்களுக்கு அளித்து வந்தனர். தோலும் விசிவாரும் பேரிகை முதலாய கருவிகளுக்கும் ,நரம்பு வீணைக்கும், யாழுக்கும், கோரோசனை அர்ச்சனைக்கும் பயன்படுத்தப்~ பட்டன. இவ் ஊர் கோயில் பணியைச் செய்து வருபவருக்கு ஊர்ப்போதுவிலிருந்து `பறைத்துடவை'என்னும் பறைத் தொழில் மான்யம் அளிக்கப்பட்டது.top: 0.4em; text-align: -webkit-auto;">"ஊரில்஼விடும் பறைத்துடவை உணவு உரிமையாகக் கொண்டு சார்பில் வரும் தொழில் செய்வார் தலைநின்றார் தொண்டினால் கூரிலைய முக்குடுமிப் படையண்ணல் கோயில்தொறும் பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும்top: 0.4em; text-align: -webkit-auto;">போர்வைத்தோல் விசிவாரென்று இனையனவும் புகலுமிசை நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலைவகையில் சேர்வுற்ற தந்திரியும் தேவர்பிரான் அர்ச்சனைகட்கு ஆர்வத்தினுடன் கோரோசனையும் இவை அளித்துள்ளார்." 72 என்ற நந்தனைக் குறித்த அறிமுக வரிகளால் அறியலாம். இவர்஖ள் கோயில்களுக்கு உள்ளேயும், உயர்சாதியார் குடி~ யிருந்த ஊர்களுக்கு உள்ளேயும் செல்ல அனுமதி மறுக்கப்~ பட்ட உண்மைக்கு நந்தனே சான்று.top: 0.4em; text-align: -webkit-auto;">நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலும் இப்பறையர்களின் தொழில் விரிவாக எடுத்துரைக்கப்படும்.top: 0.4em; text-align: -webkit-auto;">"நாத்து நரம்புகளைச்-சுமப்பதும் உழுவதும் நஞ்சை வயலைச் சுற்றி-வருவதும் வளம்பெறப் பாத்திகட்டி விதை-தெளிப்பதும் பறிப்பதும் பாயுமடையைத் திறந்து- விடுவதும் அன்றியில்.....top: 0.4em; text-align: -webkit-auto;">சேரியண்டையில் குடியிருப்பதும் பதறுகள் சிதறித் தூற்றி நெல்-அளப்பதும் பார்ப்பதும் ஊரை வளைத்துத் தமுக-கடிப்பதும் மதுக்குடம் உண்டு களித்துநா-முறங்குவது அன்றியில்.......top: 0.4em; text-align: -webkit-auto;">ஆண்டைமார்களிடும்-பணிவிடை செய்வதும், அருகில் நின்றுகும்பிடுவதும் நடுவதும் தாண்டி நடந்து கோல்-பிடிப்பதும் அளப்பதும் தனித்துச் சுடலைதினம்-காப்பதும் அன்றியில்.... இது பறையர் வகுப்பாரின் தொழிலையும் சமூகக் கடமை~ யையும் தெளிவாக விவரிக்கிறது.top: 0.4em; text-align: -webkit-auto;">இதுவரை இலக்கியத்திலோ பிறவற்றிலோ இடம்பெறாத `பள்ளர்' என்ற வகுப்பாரைப் பற்றிப் பள்ளு இலக்கியங்கள் பேசுகின்றன. பள்ளு இலக்கியங்கள் கி.பி.பதினேழாம் நூற்~ றாண்டுக்குப் பிற்பட்டவைகள். இவைகளில் காலத்தால் முந்திய஦ு முக்கூடற்஫ள்ளு, இப்பள்ளு இலக்கியங்களில் பேசப்~ படும் பள்ளர்கள் விவசாயத் தொழிலாளர்கள்; கடைநிலை 73 மக்கள் இவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை காணும் முன் பள்ளு இலக்கியம் காட்டும் உற்஫த்தி உறவுமுறை ஫ற்றிக் காணலாம்.top: 0.4em; text-align: -webkit-auto;">முக்கூடற்பள்ளு இரண்டு வர்க்கங்களை முதன்மைப் படுத்து~ கிறது. உருவமற்ற நிலப்பிரபுவான இறைவனின் பிரதிநிதி~ யாய் இருந்து நிலத்தைக் கண்காணிக்கும் பண்ணை விசாரிப்~ பான்; விவசாய உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் பள்ளர்~ கள் என்ற இரு வர்க்கத்தினர். நிலம் முக்கூடலில் கோயில் கொண்டுள்ள அழகர் ஆகிய திருமாலுக்குச் சொந்தமானது.top: 0.4em; text-align: -webkit-auto;">"முக்கூடல் அழகர் பண்ணை" (பா:36) "கத்தர் திருமுக்கூடல் கண்ணர் பண்ணை"(பா.91) "முக்கூடல்பரமனார் அழகர் தம் பண்ணை"(பா.113) "அடிக்குள் அடங்கும் படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே." (பா.129)top: 0.4em; text-align: -webkit-auto;">ஆகிய வரிகள் இதை மெய்ப்பிக்கும் இடைக்காலங்஖ளில் தேவதானம் முதலான பெயர்களில் மன்னர்களால் கோயில்~ களுக்கு வழங்கப்பட்ட நிலவகையாக இதுவும் இருக்கலாம். இந்நிலங்களைப் பள்ளருக்குப் பிரித்துக் கொடுத்து, உற்~ பத்தியை மேற்பார்வையிடுபவனே பண்ணை விசாரிப்பான். இவன் கோயிலின் பிரதிநிதியாகவோ ,விசயநகரப் பேரரசுக் காலத்தில் மன்னனால் நியமிக்கப்பட்ட பாருபட்டயக் கார~ னாகவோ இருக்கலாம்.top: 0.4em; text-align: -webkit-auto;">பண்ணைகளில் நேரடியான உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் பள்ளர்கள். இவர்கள் கோயில் என்னும் உருவமற்ற ஆனால் நிறுவன வடிவமான நிலப்பிரபுவுக்குச் சொந்தமான பண்ணையோடு பிணைக்கப்பட்ட பரம்பரைக் கொத்~ தடிமைகள். 74 "பண்ணைஏவலறும் பள்ளியர்"(பா.5) "முத்தமிழ் நாட்டழகர் கொத்தடியான்"(பா.13) என்று இவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதே இதற்குச் சான்று. இந்தக் கொத்தடிமைப் ஫ள்ளர்களுக்~ குள்ளே ஒரு தலைமைப் பள்ளன். அவன்஼தான் முக்கூடல் பள்ளுவில் வரும் வடிவழகக் குடும்பன. இவன் பண்ணை விசாரிப்பானால தலைவனாக நியமிக்கப்படுவதாகத் தெரி~ கிறது.top: 0.4em; text-align: -webkit-auto;">.....top: 0.4em; text-align: -webkit-auto;">பள்ளர்்களுக்கெல்லாம் தலைமையைப் பள்ளனாக இருக்கும் வடி வழகக்குடும்பன், கோயில் நிலத்தை எல்லாம் சேரிப் பள்ளர்~ களுக்குப் பிரித்துக் கொடுத்துச் சாகுபடி செய்஖ிறான், அறு~ வடையில் அவரவர் செலுத்த வேண்டிய பங்கை வசூலித்துப் பண்ணைக்காரனிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் இவனதே. முக்கூடல் பள்ளுவில் தினச்சக்கரம், பெரிய நம்பி திருமாளிகை, ஏழு திருப்பதிக் கட்டளைகள், வடமேலந்திரன் மடம், ஆகியவற்றுக்குக் குறிப்பிட்ட நெல் அளக்கப்பட்ட செய்தியும், ஆடித்திருநாள் விழாவிற்கு 6000 கோட்டை நெல்லும், பங்குனித் திருநாள் விழாவிற்கு6000 கோட்டை நெல்லும்,மண்டகப்படி சார்த்தும் செலவிற்கு 1000 கோட்டை நெல்லும், உள்ளூர் அந்தணர்க்கு 4000 கோட்டை நெல்லும்,நாள் வழிபாட்டிற்கு 8000 கோட்டை நெல்லும் வடிவழகக் குடும்பனால் அளந்து குடுக்கப்பட்ட செய்தி வரு~ கிறது. விளைச்சலில் பள்ளர் பெறும் பங்கு எவ்வளவு என்ப~ தற்கான சான்று இல்லை, எனினும் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவே கொடுக்கப்பட்டு மீதியனைத்தும் பறிக்கப்~ பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 75 "முப்பழமும் சோறும் உண்ணவே- நடத்திக்கொண்டீர்" என இளையபள்ளி பண்ணை விசாரிப்பானை எதிர்த்துப் பேசுவது இந்த யூகத்துக்கு இடமளிக்கிறது.top: 0.4em; text-align: -webkit-auto;">பள்ளர்கள் தங்களை அடிமை யென்றும், பண்ணை விசாரிப்~ பானை ஆண்டை என்றும் அழைக்கின்றனர். இச்சொல்லாட்சி ஆண்டான்- அடிமை யென்னும் நிலப்பிரபுத்துவ உறவுமுறை~ யின் கொடுமையை வெளிப்படுத்துகிறது.top: 0.4em; text-align: -webkit-auto;">"பக்கமே தூரப் போயும் தக்க சோறென வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர்" என்ற குடும்பன் கூற்று பள்ளர்கள் தீண்டத்தகாதவர்஖ளாக நடத்தப்பட்ட சமூக நடைமுறையைப் புலப்படுத்தும். குடும்பனைச்top: 0.4em; text-align: -webkit-auto;">"சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே" என மூத்தபள்ளி பண்ணை விசாரிப்பானிடம் முறையிடுவது அடிமைகளைப் பண்ணைவிசாரிப்பான் சவுக்கால் அடிக்கும் வழமுறை நிலவியதை மெய்ப்பிக்கும். அடிமையின் காலில் மரக்கட்டையை மாட்டி அப்பால் இப்பால் நகர முடியாதபடி விலங்கிடுவது மற்றொரு வகைத் தண்டனை.top: 0.4em; text-align: -webkit-auto;">".... கண்சிவந்து பண்ணைக்காரணங்கே வந்த பள்ளன்தன் காலில் மரக்குட்டை சேர்த்தானே " (93) முக்கூடல் பள்ளுவில் வடிவழகக் குடும்பன், பண்ணை விசாரிப்~ பானால் இவ்வாறு தண்டிக்கப்படுகிறான். இவ்வுறவு முறை~ யின் கோரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆவணங்களில் இன்னும் தெளிவாக வெளிப்படுகிறது.top: 0.4em; text-align: -webkit-auto;">அதற்குமுன் வரலாற்றில் இதுவரை இலக்கியத்திலோ கல் வெட்டுக்களிலோ செப்பேடுகளிலோ சட்டப்படாத இப் 76 பள்ளர் யார் என்ற கேள்விக்கு விடை காணலாம். இது குறித்து வரலாற்று அறிஞர்களிடையே பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அவை குறித்துக் கேசவன் விரி~ வாக ஆய்கிறார்.top: 0.4em; text-align: -webkit-auto;">நிலஉடைமையாளர்களான வேளாளர்கள் தம் பண்ணைகளில் பள்ளர்களையே கூலிக்கு அமர்த்தியிருந்~ தனர் என்றும் இவர்஖ளைப் பாண்டிய மண்டலத்திற்கு வேளாளர்களே கொண்டு வந்து குடியமர்த்தினர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதைக் கூறுபவர் எட்கார்தர்ஸ்டன்top: 0.4em; text-align: -webkit-auto;">வேளாளர்களுக்குள்ளே இழிநிலை அடைந்த ஒரு பிரிவினர் பள்ளர் என்னும் நிலைக்குத் தாழ்ந்தனர் என்பது மற்றொரு கருத்து. இக்கருத்தைத் தங்கராஜ் பின்வருமாறு விளக்கு~ கிறார். "உத்தேசமாக 14,15 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே பண்ணை விவசாய முறையும் பண்ணையாள் (வேலைக்காரர்) அமர்த்திச் செயல்பட்ட விவசாய முறையும் வளர்ந்திருக்க வேண்டும். தமிழ் நாட்டில் பெருமளவு நிலவுடைமையும் பண்ணைமுதலாளிகள் உருவானதும் இக்காலத்திற்குப் பின்னரே எனக் க஼ொள்ளலாம். நிலஅபகரிப்பு, நிலம் வாங்கல் விற்றல் குத்தகை வாரம்-கடன் போன்ற நிலம் சம்பந்தப்~ பட்ட வழக்கங்கள் இக்காலத்திற்஖ுப் பின்னரே உருவாகி~ யிருக்க வேண்டும். இதனால் அதிக அளவு நிலம் சேர்த்த வேளாளர்கள் தங்களுக்குத் துணை வேலையும் பண்ணை வேலையும் செய்ய அவர்஖ளுக்குள்ளேயே நிலம் சேர்க்க முடியாது போனவர், நிலத்தைப் ஫றிகொடுத்தவர், நிலத்தை அடமானம் வைத்துவிட்டுத் திருப்ப முடியாது போனவர், நிலமே இல்லாது இருந்தவர், ஏழையாயிருந்தவர் ஆகியவர்~ களைக் கூலிக்கு அமர்த்தியிருந்தனர். நிலவுடைமை வாழ்க்~ கையில் அபலையாகிவிட்ட வேளாளர், நிலவுடைமையில் வெற்றி பெற்ற வேளாளர்களிடமே குத்தகை-வாரம் முதலிய 77 முறையில் நிலம்பெற்று பயிர்த்தொழில் செய்திருக்கின்~ றனர். இவ்வகை வேளாளரே காலப் போக்கில் தனிக்குலத்~ தினராக அதாவது ஜாதியினராக உருவாகியுள்ளனர்.top: 0.4em; text-align: -webkit-auto;">இவ்விரு கருத்தையும் கேசவன் மறுக்கிறார்."பள்ளர்கள் ஒரு குடியேற்றம் பிரிவினர் என்்று கூறும் தர்ஸ்டன் எந்தக் காலத்~ தில் இக்குடியேற்றம் நடந்தது என்றும், எந்த இடத்திலிருந்து இவர்கள் குடியேற்றப்பட்டனர். என்றும் விளக்கவில்லை. மேலும் தமிழகத்தில் குறிப்பாகத் தஞ்சை மதுரை நெல்லை மண்டலங்களில் பல்வேறு ஜாதியினரின் குடியேற்றங்஖ள் நடந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றனவே தவிர பள்ளர் சாதியினரின் குடியேற்றத்திற்கு வரலாற்று ஆதாரம் இல்லை. தங்கராஜ் கூறுவதைப் போல கி.பி.14,15 ஆம் நூற்றாண்டு~ களுக்குப் பின்தான் தமிழகத்தில் வாங்கல் ,விற்றல், குத்தகை வாரம்,கடன் போன்ற நிலம் தொடர்பான வழக்கங்கள் உருவானவை என்றில்லை. அதற்கும் முந்தைய காலங்களி~ லேயே நாம் இவற்றைக் காண்கிறோம். வாரம், காட்டுக்குத்~ தகை, மேல்வாரம், கீழ்வாரம் எனும் சொற்கள் குத்தகை~ யைத் தெரிவிக்க஼ின்றன. நிலம் விற்பனைக்கும் வாங்கலுக்கும் கல்வெட்டுச் செய்திகள் ஆதாரமாக உள்ளன. எனவே கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே இத்தகைய வழக்கங்கள் நடந்தேறின் என்றறிகிறோம்.top: 0.4em; text-align: -webkit-auto;">மேலும் அக்காலத்தில் பள்ளர்கள் குத்தகை பெறும் உழவர்~ களாக இருந்ததே இல்லை. பள்ளுப் பாடல்களில் வரும் பள்ளர்கள் குத்தகை பெறுபவர்஖ள் அல்லர்; பண்ணை அடிமைகளே. கி.பி. 1843 க்கு முன் ஫ள்ளர்கள் மேல்ஜாதி நிலவுடைமை மக்களுக்குப் பண்ணை அடிமைகளாகவே இருந்~ தனர்."பள்ளர்கள் எவ்வித விதிவிலக்கும் இன்றி விவசா௟த்~ தொழிலிலேயே ஈடுபட்டுள்ளனர். இதற்கு முந்திய காலங்஼களில் 78 எவ்்வித ஐயத்துக்கும் இடமின்றி இவர்கள் நிலமற்ற கட்டுண்ட அடிமைகளாகவே இருந்தனர். எனினும் இன்று அவர்களின் 22 சத௉வீதம் பேர் பண்ணையாட்஖ளாக உள்ளனர். 38 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் குத்தகை~ யாளர்களாக உள்ளனர். 39 சதவீதத்தினர் நாட்கூலியாக உள்ளனர். ஒரே ஒரு நபர் மட்டுமே மிகச் சிறிய நிலத்தை உடைமையாக்கி விவசாயம் செய்்கிறார்" என்஖ிறார் த஼ஞ்சை மாவட்டம் கும்பா பேட்டை கிராமத்தை ஆய்வு செய்தசமூக~ வியலறிஞர் கத்லீன் கஃப். இது தஞ்சைக்கு மட்டுமின்றித் தமிழகத்திற்கே பொருந்தும் எனலாம். எனவே அண்மைக் காலத்திய சமூக வரலாற்று நிகழ்வுகளை 3,4 நூற்றாண்டு~ களுக்கு முந்தைய சமூக நிகழ்வு஖ளோடு அப்படியே பொருத்த முடியாது. எனவே, குத்தகைதாரர்களான வேளாளர்஖ள் இழிநிலை யடைந்து பள்ளர்களாக உருவாகியிருக்க வாய்ப்~ பில்லை என்கிறார் கேசவன்.top: 0.4em; text-align: -webkit-auto;">கி.பி. 1500 வரை வரலாற்று ரீதியாகத் தீண்டாமை குறித்து ஆராய்ந்த டாக்டர் அனுமந்தன் பள்ளர்களின் தோற்றம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கிறார்: கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டை மண்டலத்தை வேளாளர்கள் தாக்கி அங்கே குடியமர்ந்த போது பல்லவர்~ களை ஒடுக்கினர். அந்நேரத்தில் வேளாளர்களின் மேலா~ திக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்வகுப்புப் பல்லவர்கள் சோழர் படையில் சேர்ந்து படையாச்சி என்றழைக்கப்~ பட்டனர் என்றும், தாழ்நிலைப் பல்லவர்கள் அடிமையாக மாறிப் பள்ளர்களாக உருமாறினர் என்றும் இவர் கருத்துத் தெரிவிக்கிறார்.top: 0.4em; text-align: -webkit-auto;">ஆனால் பிற்காலச் சோழர் காலத்தில் எழுந்த மெய்க்கீர்த்தி~ கள், கல்வெட்டுகள் ஆகியவற்றில் பள்ளர் என்ற சமூகப் பிரி~ வினர் காணப்படவில்லை. ஜாதி முறைகளைச் சொல்லும் கல் 79 வெட்டுகூட அந்தணரிலிருந்து புல்லுப்பறிக்கிற பறமன்வரை என்றுதான் கூறுகிறதே தவிர பள்ளர் இனத்தைக் குறிப்பிட~ வில்லை. நிகண்டுகளிலும் இலக்கியங்களிலும்கூட குறிப்புக்~ கள் இல்லை. எனவே டாக்டர் அனுமந்தன் கருத்தை ஏற்றுக் கொள்வதற்கில்லை என மறுக்கும் கேசவன் முடிவில் தமது கருத்தை முன் வைக்கிறார்.top: 0.4em; text-align: -webkit-auto;">கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் விசயநகரப் நகரப் பேரரசின் ஒரு பகுதியாக மாறிய தமிழகத்திற்குள் ஏராளமான குடியேற்றங்஖ள் நடந்தேறின. கம்மவார்களும், நாயக்கர்களும் ரெட்டியார்களும் , நிலஉரிமை பெற்றுச் சிற்~ சில பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களில் சிலர் ஆயக்கார அமைப்பின் அதிகாரிகளாகவும் ஆனார்கள். இவர்~ கள் மட்டுமின்றி கைவினைஞர்களும் ,பணியாளர்களும் குடிய~ மர்த்தப்பட்டனர்... கைவினைஞர்களாகவும், பணியாளர்~ களாகவும் இருந்த சேணியர், சாலியர், வண்ணார்,ஒட்டர் தொம்பரவர், சக்கிலியர் ஆகியோரின் குடியேற்றத்தினால் ஏற்கனவே இவர்களது தொழில்களைச் செய்து வந்த மக்கள் மத்தியில் ஒருவித வேலைப்பிரிவினை தொடங்கியிருக்கலாம். முந்தைய குடிமக்கள் தம் தொழிலை முழுவதும் கைவிட்டு, வேறு தொழிலைச் செய்திருக்கலாம். அல்லது தம் தொழில்~ களில் ஏதாவது ஒன்றை மட்டும் ஖ுறிப்பாக எடுத்துக்கொண்டு ஏனைய தொழில்களை விட்டிருக்கலாம்.top: 0.4em; text-align: -webkit-auto;">அன்றைய தமிழகத்தில் தோல்தொழில், சங்கு ஊதுதல் மாடு , அறுத்தல், பண்ணை அடிமை வேலை செய்தல் போன்ற~ வற்றைப் பறையரே செய்தனர். குடியேற்றப்பட்ட தெலுங்குச் சக்கிலியர்கள் பிணம் எடுத்தல், மாடு அறுத்தல் தோல், செருப்பு தைத்தல் போன்ற தொழில்களைச் செய்~ தனர். சக்கிலியர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டதற்கான சான்று இல்லை. ஆயினும் சக்கிலியர் தொழில்களுக்கும் 80 பறையர் தொழில்களுக்கும் சில ஒற்றுமைத் தன்மைகள் உண்஼டு. மாடறுத்தல், தோல்தொழில் போன்றன இவ்விரு ஜாதியினருக்கும் பொதுவான தொழில்களாக இருந்த஼ன. இத்தன்மை பறையர்஖ளுக்குள்ளே ஒருவித வேலைப் பிரிவினையை உண்டுபண்ணியிருக்கலாம்.top: 0.4em; text-align: -webkit-auto;">அதாவது சக்கிலியர் குடியேற்றத்திற்குப் பின்னால் பறையரில் ஒரு பிரிவினர், இருவருக்கும் இடையே இருந்த பொதுவான தொழிலைக் கைவிட்டு, இருவரையும் வேறுபடுத்தும் தொழி~ லான பண்ணை அடிமைத்தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருக்~ கலாம். காலம் செல்லச் செல்லப் பண்ணை அடிமைத் ~ தனத்திலேயே இருந்து, பண்ணைத் தொழிலை மட்டுமே கவனிக்கக்கூடிய சாதியினராக உருவெடுக்கக் காரணமா~ யிருந்தது எனலாம். வேறு தொழில்களையும் விட்டு விடாது செய்து கொண்டிருந்தவர்கள் பறையர்களாகவே இருந்தனர். வயல்களில்- பள்ளஙகளில் மட்டுமே தொழில் செய்த வேலைப் பிரிவினர் பள்ளர் எனப்பட்டனர் எனலாம் என்கிறார் கேசவன்.top: 0.4em; text-align: -webkit-auto;">ஆக பள்ளர்கள் கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டு கால அளவில் தமிழகத்தில் அன்றிருந்த பறையர் இனத்தில் இருந்து பிரிந்த ஜாதியினர் என்ற முடிவை ஒப்புக்கொண்டால், இடைக் காலத்திலும், பண்டைக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தின் கடைநிலையிலிருந்த ,இழிநிலையிலிருந்த, மக்கட் பிரிவின~ ரான கடைசியர், இழிசினர், புலையர் பறையர் ஆகியோரின் வாரிசுகளே இவர்களும் என்பது தெளிவாகிறது.top: 0.4em; text-align: -webkit-auto;">பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து மக்கள் தொகை அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்குகின்றன. இவைகள் பள்ளர்-பறையர் ஜாதியர் பற்றிய பல தெளிவான செய்திகளைத் தருகின்றன. அப்஼~ 81 போதைய தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் பள்ளர் பறையர் வகுப்பார் 16 சதவீதத்தினர்; இவர்களில் 642 சதவீதத்தினர் விவ஼சாயத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் பள்ளர் பறையர் ஜாதியார் பெற்றிருந்த இடத்தை மலையாள நாட்டில் செருமர்களும் கன்னட நாட்டில் கோலேயாஸ்களும் தெலுங்கு நாட்டில் மலாஸ்களும் வகித்து வந்தனர். செருமர்களில் 93.5 சதவீதத்தினரும்,கோலேயாஸ்களில் 65.7 சதவீதத்தினரும் மலாஸ்களில் 75.5 சதவீதத்தினரும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.top: 0.4em; text-align: -webkit-auto;">இப்புள்ளி விவரங்஖ளில் இருந்து சில உண்மை஖஼ளை அறிய~ லாம்.i.தமிழகத்தின் மொத்த மக்கட் தொகையில் பள்ளர் பறையர் வகுப்பார் ஒரு கணிசமான அளவில் இருந்துவந்துள்~ ளனர். ii. விவசாய உற்பத்தியில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபட்டவர்கள் இத்தாழ்த்தப்பட்ட மக்களே, iii. தமிழகத்~ தில் மட்டுமின்றித் தென்னிந்தியா முழுவதிலுமே தாழ்த்தப்~ பட்ட மக்களே விவசாய உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளனர் iv. ஜாதிக்கும் தொழிலுக்கும் இடையே ஒரு பிரிக்கமுடியாத பிணைப்பு இருந்து வந்துள்ளது என்பன போன்ற உண்மை~ கள் இப்புள்ளி விபரங்களிலிருந்து பெறப்படுகின்றன. இதனாலேயே பள்ளர்-பறையர் வகுப்பார் `விவசாயத் தொழிற் சாதியினர் என்று சமூகவியலாளர்களால் அழைக்கப்படுகின்றனர்.top: 0.4em; text-align: -webkit-auto;">பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூக அமைப்பின் உற்஫த்தி உறவில் இவர்களுடைய இடம் என்ன? `பண்ணையாள்' என்று அழைக்கப்பட்ட இவர்கள் சமூகமாகவோ தனிப்பட்ட நிலையிலோ நிலத்தோடு பிணைக்கப்பட்டிருந்தானர். நில~ வுடைமையாளரின் குடும்பம் முழுவதும் அழிந்தால் ஒழிய இவர்களுக்கு விடுதலை கிடையாது. அப்போதும் ஏழ்மை 82 விரட்ட ஓரிடத்திலிருந்து விடுபட்டு மற்றோர் இடத்தில் கொத்தடிமையாயினர். அப்படியானவர்கள் நிலவுடைய~ யாளிரின் தனிச்சொத்தாகக் கருதப்பட்டனர். இவர்஖ளை விற்கவோ அடகுவைக்கவோ வாடகைக்கு விடவோ நில~ வுடையமையாளருக்கு உரிமை உண்டு. நிலத்தோடு சேர்த்தும் தனியாகவும் இவர்கள் விற்கப்பட்டனர். ஒரு அடிமை 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மாவட்டத்திற்கு ஏற்ப விலை போனதாகத் தெரிகிறது.top: 0.4em; text-align: -webkit-auto;">நிலவரி ஒன்றே அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக அமைந்~ திருந்த ஆரம்ப காலக்கட்டங்களில் பண்ணைகளை விட்டுத் தப்பியோடிய கொத்தடிமைகளை பண்ணையார்஖ளுக்கு மீட்டுத்தரும் முயற்சியில் மாவட்டக் கலெக்டர்களே ஈடு~ பட்டனர். 1830 இல் திருச்சி மாவட்டக் கலெக்டர் சேலம் மாவட்டக் கலெக்டருக்கு நிலத்திலிருந்து தப்பியோடிய பத்துப் பள்ளர்களை மீட்டுத்தரக் கோரி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; பள்ளர்கள் நிலத்தின் அடிமை஖ள் ; நிலத்தைவிட்டு வெளியேறும் உரிமை அவர்களுக்கு கிடை~ யாது நிலவுடைமையாளரான பிராமணர் அவர்களுடைய உதவியின்றி நிலத்தைச் சாகுபடி செய்ய இயலாது. அவருக்கு அடிமைகளை மீட்டுத் தராவிடில் நிலமும் பாழாகும். அரசாங்கமும் நஶ்டமடையும்" என்று குறிப்பிட்டுள்ளார். நீதி மன்றங்களும்கூட, அடிமைமுறை மரபுவழிப்பட்ட நடை~ முறை என்று பண்ணையாட்களை விற்கும் அடகுவைக்கும் பண்ணையார் உரிமைக்குச் சாதகமாகவே ஆரம்பக்காலங்~ களில் தீப்பளித்தன.top: 0.4em; text-align: -webkit-auto;">அடிமைகள் அவர்கள் செய்த சிறுசிறு தவறுகளுக்குக் கூடக் கடுமையாக஼த் தண்டிக்கப்பட்டனர். தாமஸ்பாபர் என்பவர் 1823 இல் சென்னையிலிருந்த கம்பெனியின் தலைமை நீதி மன்றத்திற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் 83 அடிமைகள் அவர்஖ள் செய்த சிறு தவறுகளுக்குத் தண்டனை~ யாக மூக்கறுக்கப்படுவது வழக்கமாக இருந்தது எனக் குறிப்~ பிடுகிறார்.top: 0.4em; text-align: -webkit-auto;">தவறு செய்த, தப்பியோட முயன்ற அடிமைகள் கட்டி வைத்துச் சவுக்கால் அடிக்கப்பட்டனர். விலங்கிடப்பட்டனர். விலங்கு பூட்டப்பட்ட நிலையிலேயே வேலையும் வாங்கப்~ பட்டனர். சில இடங்஖ளில் மாட்டுச் சாணத்தையும் மாட்டு மூத்திரத்தையும் குடிக்கச் செய்தனர். இத்~ தண்஼டனை முறைகள் இவர்கள் கால்நடைகளுக்கு நிகராக்க கருதப்பட்ட உண்மையைப் புலப்படுத்தும்.top: 0.4em; text-align: -webkit-auto;">தீண்டத்தகாத இம்மக்கள் கொடுமையான சமூக இழிவு~ களுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தனர். இவர்கள் உயர்சாதி~ யாரைத் தொடக்கூடாது; உயர்சாதியார் தெருவழியே நடக்கக்கூடாது; மண்பாத்திரங்களையன்றிப் பிற பாத்திரங்~ களை உபயோகிக்கக்கூடாது; காலில் செருப்பணியக்கூடாது: ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் கூட தங்஖ள் மார்புப் பகுதியை மறைக்கும் வண்ணம் ஆடை எதுவும் அணியக்~ கூடாது என்பன போன்ற சமூகக் கட்டுப்பாடுகள் சாதியின் பெயரால் இவர்கள் மேல் திணிக்கப்பட்டிருந்தன.top: 0.4em; text-align: -webkit-auto;">பள்ளர் பறையர் இங்கு எந்த அளவுக்குக் கொடுமையாக இழிவாக நடத்தப்பட்டனர் என்பதற்கு 32 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்து இந்துக்களின் நடைமுறை, வழக்கம் மற்றும் சடங்குகள் குறித்து ஆராய்ந்துள்ள `டூபோய்ஸ்' என்ற ஆங்கிலேயரின் கூற்றை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்; பறையர்கள் எங்கும் சொந்தச் சாகுபடி செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. பிற சாதி~ யாருக்குத் தங்கள் உழைப்பை விற்பதே அவர்களுக்கு விதிக்கப்பட்டது. தங்கள் கடுமையான உழைப்புக்குப்பதிலாக மிகச் சிறிய அளவு கூலியையே அவர்கள் பெற்றனர். இவர்஼களின் 84 முதலாளிகள் தங்கள் சந்தோஶத்திற்காகக்கூட இவர்களை அடிக்கலாம்; அல்லது வேறு வகைத் துன்பங்களை அளிக்கலாம். இந்த அப்பிராணிகளுக்கு அதை எதிர்த்து முறையிடவோ பரிகாரம் தேடவோ உரிமை கிடையாது. பறையர்கள் இந்தியாவின் பிறவி அடிமை஖ள், நம் காலனி நாடுகள் ஒன்றில் அடிமையாக இருப்பதா அல்லது இங்கு பறையனாக இருப்பதா என்ற இரு சோகமான நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் தயக்க~ மின்றி முந்தியதையே தேர்ந்தெடுப்பேன்" என்கிறார் அவர்.top: 0.4em; text-align: -webkit-auto;">பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இ஼இந் நிலைமைகள் சிதையத் துவங்குகின்றன. 1843 இல் `அடிமை ஒழிப்புச் சட்டம்'வந்தது. இச்சட்டத்தின் மூலம் `சுதந்திரம்' அடைந்த அடிமைகள் மலேசியா, இலங்கை என்று ரப்பர்த் தோட்டங்களிலும், தேயிலைத் தோட்ட஛ங்களிலும் மாற்று வேலை பெற்றுச் சென்றனர். அங்கு ஓரளவு சேமித்த பணத்~ துடன் சொந்த ஊர் திரும்பியவர்கள் சிறு நிலத்தை உடைமையாக்கிச் சொந்த விவசாயம் செய்தனர்.top: 0.4em; text-align: -webkit-auto;">பொருளாதார நிலையில் போலவே, சமூக நிலையிலும் பல மாற்றப் போக்குகள் நிகழ்ந்தன. `தீண்டமை ஒழிப்புச் சட்டம்' வந்தது. கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன. பழைய புதிய சமூக அமைப்புச் சிதைந்து, அச்சிதைவிலிருந்து உருவாகி வந்த சமூக அமைப்பில் இவர்~ களும், சமூக விழிப்புணர்வும் எழுச்சியும் கொண்ட புதிய சக்தியாக உருவாகி வந்தனர். இதன் உச்சக்கட்ட வெளிப்~ பாடுகளாக தமிழ்நாட்டில் தஞ்சாவூரிலும் (1948), ஆந்திர நாட்டில் தெலிங்கானாவிலும் போராட்டங்கள் வெடித்தன. சமூக நிலையிலும் பொருளாதாரர நிலையிலும் தங்களை 85 அடிமைப்படுத்திய உயர்சாதி நில உடைமையாளர்களை எதிர்த்துத் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய ஆயுதந்~ தாங்கிய போராட்டங்கள் இவை. நில உடைமையாளர்~ களை நிலத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு, அநேக கிராமங்~ களை இவர்கள் கைப்பற்றி `சோசலிச' அடிப்படையிலான நிர்வாகம் செய்தனர். இப்போராட்டங்களில் பங்கேற்றவர்~ களில், தலைமையேற்று நடத்தியவர்களில் பெரும்பாலோர் அரிசனங்஖ளே.top: 0.4em; text-align: -webkit-auto;">கிராமப்புற மக்கட்தொகையிலும், கிராம விவசாய உற்பத்தி~ யிலும் இன்றளவும் பிரதான அங்கம் வகிப்பவர்கள் இப்~ பள்ளர்- பறையர் சாதி௟ினரே. வரலாறு நெடுக அரக்கத்தன~ மான சமூக இழிவுகளுக்கும் பொருளாதாரச் சுரண்்டலுக்~ கும் ஆளாகி வந்துள்ள இம்மக்களே கிராமப்புற பாட்டாளி வர்க்க சக்தியின் ஆணி வேராக இருக்கமுடியும் இவர்களை இவர்களின் தலைமையைப் புறக்கணித்துவிட்டு இங்கு எந்தவொரு சமூக மாற்றத்தையும் நிகழ்த்திவிட முடியாது.

உலகமெங்கும் தனியுடைமையோ ஒடுக்குபவர்களோ ஒடுக்கப்படுபவர்களோ இல்லாத ஒரு சமூக அமைப்பில் இருந்துதான் மனித வரலாறு ஆரம்பமானது” என்பது, மார்க்சீய அறிஞர்கள் ஆராய்ந்து கூறிய உண்மை ஆகும். அக்கூற்றுக்கு ஏற்பவே தமிழகத்திலும் தாய் தலைமை ஏற்றிருந்த கணசமூகத்தில் இருந்துதான் அடிமைச்சமூகமும் நிலப்பிரபுத்துவ சமூகமும் தோன்றின.


    


தமிழகத்தில் பிறநிலங்களைவிட மருதநிலத்தில் சமூக மாற்றம் முன்னதாகவே நிகழ்ந்தது. இங்கு, ‘எல்லாச் சமூக உறவுகளின் வளர்ச்சியையும் நிர்ணயிக்கக்கூடிய உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி பூகோளச் சூழ்நிலைகளின் தன்மையால் தீர்மானிக்கப்படுகின்றது” என்ற மார்க்சீய அறிஞர்களின் கூற்று நம் கவனத்துக்கு உரியதாகிறது.











மருதநிலம் என்பது வயலும் வயல் சார்ந்த பகுதியும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் உழவுத்தொழிலை மேற்கொண்டிருந்தனர். அம்மக்கள் ஊரன், மகிழ்நன், கிழவன், மனைவி, கிழத்தி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், களமர், தொழுவர் எனப்பட்டனர். இவர்களில் ஊரன், மகிழ்நன், கிழவன், மனைவி, கிழத்தி என்போர் மேன்மக்கள் எனப்பட்டனர். இவர்கள் அடிமை எஜமானர்களும் ஆண்டைகளும் ஆவர். கிழவன் என்ற சொல்லுக்கு, நிலத்துக்கும் அடிமைகளுக்கும் உரிமை உடையவன் என்பதே பொருள் ஆகும். உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், களமர், தொழுவர் என்போர் கீழ்மக்கள் எனப்பட்டனர். இவர்கள் அடிமைகள் ஆவர். தொழும்பர் என்ற சொல்லுக்கு அடிமைகள் என்றே தமிழ் நிகண்டுகள் பொருள் கூறுகின்றன.
ஆற்றங்கரையில் அமைந்திருந்த மருதநிலத்தின் நீர் வளம் மற்றும் நிலவளத்துடன் உற்பத்திக் கருவிகளில் ஏற்பட்ட முன்னேற்றமும் மக்கள் பெருக்கமும் அவர்களின் உழைப்பும் சேர்ந்ததால் உற்பத்தியும் விளைச்சலும் அதீதமாகப் பெருகின. விளைச்சலின் பெருக்கத்தை ‘ வேலி ஆயிரம் விளையும்” என்று சங்க இலக்கியங்கள் பெருமையாகப் பேசுகின்றன. இரும்பு உபயோகத்துக்கு வந்திருந்தது. புதிய முன்னேற்ற கரமான உற்பத்திக் கருவிகள் படைக்கப்பட்டன.
‘பிடியுயிர்ப்பன்ன கைகவர் இரும்பு” – புறநானூறு
‘மிதியுலை கொல்லன் முறிகொடிறு – பெரும்பாணாற்றுப்படை 207
‘அரம் பொருத பொன்” – திருக்குறள்
முதலிய தொடர்கள் இதற்குச் சான்றளிக்கின்றன.
13-ஆம் நூற்றாண்டு கண்டதேவி ஹிஜிரா கல்வெட்டு புலையர்,பாணர்,பள்ளர்,பறையர் ஆகிய கீழ் சாதிகள் என குறிப்பிடபட்டுள்ளது.
ஹிஜிரா கல்வெட்டு எண் : 771(கிபி 1300 இல் இருந்து 1330 க்குள்)
இடம் : கண்டதேவி படி எடுக்கப்பட்ட ஆண்டு அல்லது பதியப்பட்ட ஆண்டு -1921
மதுரையில் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி 1290 களில் துவங்குகிறது.(சுந்தர பாண்டிய தேவர்) சுல்தான்கள் மதுரையை தாக்கி பாமினி ஆட்சியை நிறுவுகிறார்கள்.பாண்டிய மன்னர்கள் தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்ய துவங்கிறார்கள். ஆனாலும் காரைக்குடி,திருப்பத்தூர்,தேவகோட்டை பகுதி கள்ளர்களில் சிலர் , ஆங்காங்கே சுல்தான்களின் படையை தாக்கியும்,சூறையாடியும் பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கோபம் கொண்ட சுல்தான் மறவர் படைகள்  வாழ்ந்த கண்டதேவியை ஆண்ட சூரைக்குடி என்னும் விஜயாலயத்தேவரின் வன்னிய சூரைக்குடியை தாக்கி பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கத்தி முனையில் இனிமேல் சுல்தான் ஆட்சியை எதிர்த்து தாக்குதல்,சூறையாடல் நடத்த மாட்டோம் என்று கள்ளர், கருமார்,உள்ளிட்டோர் முன்னிலையில் ஒப்பந்தம் கல்வெட்டாக பெறப்படுகிறது.அப்படி ஒப்பந்தத்தை மீறினால் கீழ்காணும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம் என்பது தான் கல்வெட்டு. 1) எங்கள் மீசையை மற்றும் தாடியை மழித்து கொள்கிறோம். 2) எங்கள் மனைவியை ஒப்படைக்கிறோம். 3) புலையர்,பாணர்,பள்ளர்,பறையர் உள்ளிட்ட
கீழ்சாதியினர் எங்களை பெண் ஓவியமாக வரைந்து அவர்களின் குழந்தைகளின் காலில் கட்டி சுத்தட்டும். என கல்வெட்டு முடிகிறது.
என கல்வெட்டு முடிகின்றது.





கருவிகளின் படைப்புக்கு தேவை ஒரு முக்கிய காரணி ஆகும். வேட்டைக் கருவிகளான வில்லும் அம்பும் மருதநிலத்தில் போர்க்கருவிகளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. கற்கருவிகளின் இடத்தை இரும்புக் கருவிகள் ஆக்கிரமித்துக் கொண்டன. உணவுக்காக விலங்குகளை வேட்டையாடித்திரிந்த மனிதன், அவற்றை மந்தையாகத் திரட்டி மேய்த்துப் பயன்கொள்ளத்தெரிந்து கொண்டான். பயிர் சாகுபடியிலும் வேளாண்மையிலும் ஈடுபட்டான். உணவு உற்பத்தி செய்தான். ஏர் கொழு, கோடரி. அரிவாள் முதலிய வேளாண் கருவிகளோடு கரும்பு யந்திரங்களும் தேர்களும் சகடங்களும் செய்யப்பட்டன. புதிய புதிய போர்க்கருவிகளும் படைக்கப்பட்டன. சகடங்களை ஈர்த்துச் செல்;லக் கால் நடைகள் பயிற்று விக்கப்பட்டன. ஓடங்களும், படகுகளும், பாய்மரக்கலங்களும் செய்யப்பட்டன். ‘கடலோடும் நாவாய்” என்று திருக்குறள் கூறுகிறது.
உற்பத்தியிலும் உற்பத்திக் கருவிகளிலும் ஏற்பட்ட முன்னேற்றத்தால் சமூகமாற்றம் ஓசையின்றி நிகழ்ந்து. சுய நல அடிப்படையிலான உற்பத்திப் பெருக்கத்துக்காக சக மனிதன் அடிமையாக்கப்பட்டான். கால வோட்டத்தில் கணசமூகத்தில் இருந்து அதனினும் முன்னேறிய தான அடிமைச் சமூகம் தோன்றியது. தமிழக வரலாற்றில் முதன் முதலாக வர்க்கங்களும் வர்க்க முரண்பாடுகளும் தோன்றின. அடிமைகள், அவர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் ஆண்டைகள் என்றும் சமூகம் இரண்டு வர்க்கங்களாகப் பிளவுபட்டது.
அடிமைச் சமூகத்தில் அவர்களின் உழைப்பால் உற்பத்தி மிகுதியாகப் பெருகினாலும் அதன் பயன் மக்களைச் சென்றடைய வில்லை. அடிமைகளின் கடின உழைப்பால் தான் அரண்மைனைகளும் வளமனைகளும் கோட்டைகளும் கொத்தளங்களும் கட்டப்பட்டன, அகழிகள் அகழப்பட்டன. ‘ காடு கொன்று நாடாக்கி குளந்தொட்டு வளம் பெருக்கும்” பணிகளையும் அடிமைகளே செய்தனர், ஆனால் ஆண்டைகள் அடிமைகளைச் சுரண்டிக் கொழுத்தனர்;, அவர்களின் சுய நலத்துக்காகவும் சுகபோகத்துக்காகவும் அடிமைகளின் உழைப்பு உறிஞ்சப்பட்டது.
  1. www.gutenberg.org/files/42993/42993-h/42993-h.htm   Cached
    Project Gutenberg's Castes and Tribes of Southern India, ... Kalti (expunged).—A degraded Paraiyan is known as a Kalti.
அடிமைகளான உழைப்பாளிகள் ஆண்டைகள் கொடுத்த பழைய சோற்றை உண்டுதான் பசியாறினர். குடிசைகளில் தான் வாழ்ந்தனர். அக்குடிசைகளுமே ஊருக்கு ஒதுக்குப் புறமான இடங்களில் அமைத்துக் கொள்ளும் படி நிர்பந்திக்கப்பட்டனர். ‘பறழ்பன்றிப பல கோழி உறை கிணற்றுப்புறச்சேரி” என்று பட்டினப் பாலை இது பற்றிக்கூறுகிறது. ‘குட்டிகளையுடைய பன்றிகளையும் பல சாதியாகிய கோழிகளையும் உறைவைத்த கிணறு களையும் உடைய இழிகுலத்தோர் இருக்கும் தெருவுகள்” என்று நச்சினார்க்கினியர் இதற்கு உரை கூறினார். உழைக்கும் மக்கள் அடிமையாக்கி ஒடுக்கப்பட்ட செய்தியைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகவே கூறுகின்றன.
அடிமைகளை ஆண்டைகள் கடுமையாகச் சுரண்டினர். உற்பத்திப் பெருக்கத்துக்காக கடினமாக உழைக்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர். ஆண்டைகள் மற்றும் அரசர்களின் பாதுகாப்புக்காக கோட்டைகள், கொத்தளங்கள், அரண்கள் மற்றும் அகழிகள் அமைத்திடப் போரில் பிடிப்பட்ட கைதிகளை அடிமையாக்கினர். கரிகாற் சோழன் சிங்கள நாட்டை வென்று பிடித்து வந்த கைதிகளை அடிமையாக்கிக் கொண்டு வந்து காவிரிக்குக் கரையமைத்தான் என்பது ஒரு வரலாற்றுச் செய்தியாகும்.
அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் ஆடவரும் மகளிருமான அடிமைகள் பலர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். மகளிர் சமையல் காரிகளாகவும் சலவைக்காரிகளாகவும் நெல்குற்றுவோராகவும் பணிசெய்தனர். இதனை, ‘அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடிமாணுலக்கைப்பரூஉக் குற்றரிசி”
என்று புறநானூறு ( 399 ) கூறுகிறது.
‘களர்ப்படு கூவல் தோண்டி நாளும்
புலைத்தி கழிஇய தூவெள்ளறுவை’ – புறநானூறு : 311
(களர்நிலத்து உண்டாகிய கூவலைத் தோண்டி நாள் தோறும் வண்ணாத்தி துவைத்த வெளுத்த தூய வெள்ளிய ஆடை ) என்று அந்நூல் பேசுகிறது.
செல்வர் மனைகளில் அடிமைகள்
இவையன்றி, செல்வர்மனைகளில் அவர்தம் பிள்ளைகளைப் பேணிவளர்க்கும் பணிகளிலும் அடிமை மகளிர் அமர்த்தப்பட்ருந்தனர். ‘செல்வர்களின் பிள்ளைகள் உருட்டி விளையாடுவதற்காக அடிமைகளான தச்சர்கள் மூன்று கால்களையுடைய சிறு தேர் செய்து கொடுத்தனர். அதனைச் செல்வர்மனைச் சிறு பிள்ளைகள் உருட்டி விளையாடித்திரிந்தனர். அவர்கள் தமது தளர்நடையால் உண்டான வருத்தம் தம்மை விட்டு நீங்கும்படி, பால் சுரந்த முலையினையுடைய செவிலித்தாயாராகிய அழகிய பெண்களைத் தழுவிக் கொண்டு அம்முலையிற் பாலை நிரம்ப உண்டு தமது படுக்கையிலே துயில் கொண்டனர்.” என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
தச்சச்சிறா அர் நச்சப்புனைந்த
வூரா நற்றேர் உருட்டிய புதல்வர்
தளர்நடை வருத்தம் வீட அலர் முலைச்
செவிலியம் பெண்டிர்தம் தழீஇப் பாலார்ந்
தமளித் துஞ்சும் அழகுடை வியனகர்”
என்று பெரும்பாணாற்றுப்படை ( 248 – 52 ) என்று பேசுகிறது.
செல்வர் மனைகளில் அவர்தம் பிள்ளைகளுக்கு அடிமைகளான செவிலியர் தம் முலைப்பாலை உண்பித்துப் பசி போக்கி உறங்கச் செய்தனர் என்ற செய்தியை நமக்குக் கூறிய இலக்கியங்கள், அச்செவிலியரின் பிள்ளைகளின் கதியாதாயிற்று என்று கூறவில்லை.
அடிமைகளான பெண்கள் மழலைப் பருவத்துச் சிறுவர்களுக்கு மட்டுமல்லாது,செல்வர்களின் மனைவியர்க்கும் பணிவிடையும் குற்றேவலும் செய்யப்பணிக்கப்பட்டனர். ஆண்டைகளின் பிள்ளைகளுக்கு, அடிமைகளான செவிலியர்; தம் முலைப்பாலை உண்பித்து உறங்கச் செய்தனர். அவர்கள் மட்டுமல்லாது, அப்பிள்ளைகளுக்குப் பணிவிடை செய்வதற்காகவும் அலங்கரித்து அழகு செய்வதற்காகவும் ஐந்து வகையான அடிமைப் பெண்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இப்பெண்கள் ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓலுறுத்துவாள், நொடிபயிற்றுவாள், கைத்தாயர் எனப்பட்டனர். ‘மானிடமகளிர்க்குத் தாயர்பலரும் கை செய்து பிறப்பிக்கும் அழகு’ என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதற்குச் சான்றளிக்கிறார். ஆண்டைகளின் குழந்தைகளுக்குப் பாலூட்ட நியமிக்கப்பட்ட செவிலி, இவ் ஐவருள் ஊட்டுவாள் எனப்பட்டாள்.
அரண்மனைகளில் அடிமைகள்
அரண்மனைகளில் அடிமைகளான பெண்கள் அரசியர்க்குச் சாத்தம்மியில் கஸ்தூரி அறைத்துக் கொடுத்தனர் என்ற செய்தியை நெடுநல் வாடை (49 – 50) கூறுகிறது.
‘கடியுடை வியனகர் சிறு குறுந்தொழுவர்
கொள்ளுறழ் நறுங்கல் பல கூட்டுமறுக”
(காவலையுடைய அகன்ற மனைகளில் சிறிய குற்றேவல் வினைஞர் கருங்கொள்ளின் நிறத்தையொத்த நல்ல சாத்தம்மியில் பசுங்கூட்டறைத்தனர்) என்பது அந்நூல் கூறும் செய்தியாகும்.
அடிமை மகளிர் அரசியர் முதலான அரண்மனைப் பெண்களுக்குச் சந்தனம், மஞ்சள், கஸ்தூரி முதலான மணப் பொருள்களை அறைத்துக் கொடுத்ததுடன், கவரியும் ஆலவட்டமும் வீசினர். இவையல்லாது, அடிமைப்பெண்களாகிய சேடிகள் அரசியரின் பாதங்களை மென்மையாக வருடிக் கொடுத்து (கால் பிடித்து விட்டு) உறங்கப் பண்ணினர். இதனை, ‘மெல்லியல் மகளிர் நல்லடி வருட” (மெத்தென்ற தன்மையுடைய சேடியர் துயில் உண்டாகுமோ என்று அடியைத்தடவினர்) என்று நெடுநல்வாடை (151) கூறுகிறது.
அரசனாகிய தலைவன் போர் முதலிய காரணங்களால் தலைவியைப் பிரிய நேரிட்ட காலங்களில் பிரிவாற்றாமையால் வருந்துதலுற்ற தலைவியின் பிரிவுத்துயரைப் போக்கும் முயற்சிகளில் பெருமுது பெண்டிராகிய அடிமைகள் ஈடுபட்டனர். நெல்லும் முல்லை மலரும் தூவி அம்மகளிர் நற்சொல் (விரிச்சி) கேட்டலாகிய செயலில் ஈடுபட்டனர். இதனை
அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசையின வண்டார்ப்ப நெல்லொடு
நாழிகொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழலரி தூஉய்க்கை தொழுது
பெருமுதுபெண்டிர் விரிச்சி நிற்ப”
(அரிய காவலையுடைய பழைய ஊர்ப்பக்கத்துப் பாக்கதே படைத்தலைவர் ஏவலால் நற்சொல் கேட்டற்குரிய பெரிய முதிர்ந்த பெண்டிர் நல்ல பூக்களையுடைய இனமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி அவிழ்ந்த பூவை, நாழியிடத்தே கொண்டு போன நெல்லுடனே தூவி தெய்வத்தை வணங்கி நற்சொல் கேட்டனர்) என்று, பெருமுது பெண்டிர் படைத்தலைவர் ஏவலால் நெல்லும் மலரும் தூவி நற்சொல் கேட்ட செய்தியினை முல்லைப் பாட்டு ( 7-11) கூறுகிறது. மேலும்
‘நரை விராவுற்ற நறுமெனக் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
குறியவு நெடியவும் உரைபல பயிற்றி” நெடுநல்வாடை :152 – 154
(நரை கலத்தலுற்ற மெல்லிய மயிரினையுடைய சிவந்த முகத்தையுடைய செவிலித்தாயார்,’இவள் ஆற்றாவொழுக்கம் மிகுகையினாலே, திரண்டு பொருளோடு புணராப் பொய் மொழியும் மெய் மொழியுமாகிய உரைகள் பலவற்றையும் பலமுறை சொல்லி ஆற்றினர்) என்று தலைவியின் பிரிவுத்துயரைப் போக்கும் முயற்சியில் பெருமுது பெண்டிரும் செவிலியரும் ஈடுபட்டதனை இலக்கியங்கள் பேசுகின்றன.
இங்ஙனம் செவிலியர், சேடியர், தாதியர், பெருமுது பெண்டிர் முதலான அடிமைகள் அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் குற்றறேவலும் பணிவிடையும் செய்ய நியமிக்கப்பட்டிருந்தனை இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இப்பெண்களை ‘ அடியோர் பாங்கு” என்று குறிப்பிடுகிறார். (சிலம்பு :16:85) அடியோர் என்பவர் அடிமைகளே என்பதனை “ அடியோர் பாங்கினும்; வினைவலர்பாங்கினும்” என்ற நூற்பா வாயிலாகத் தொல்காப்பியர் வலியுறுத்துகிறார். அடியோர் என்பவர் உரிமையின்றித் தலைமைக்குக்கட்டுப்பட்டு வாழ்ந்தவர் ஆவர். அடியோர் என்ற சொல் அடிமைகள் என்ற பொருளில் கலித்தொகையிலும் குறிக்கப்பட்டுள்ளது.
கொண்டிர் மகளிர்
போரில் தோல்வியுற்ற பகைவர் மனைகளில் இருந்து பிடித்துவரப்பட்ட பெண்கள் அடிமைகளாக்கப்பட்டனர். பகைவர் மனையோராய்ப்பிடித்து வரப்பட்ட மகளிர் “ என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதற்குச் சான்றளிக்கிறார். அப்பெண்கள் சமையல் காரிகளாகவும், சலவைக் காரிகளாகவும் நெல் குற்று வோராகவும், பணியமர்த்தப்படடனர் என்பதை முன்னர்க் கண்டோம். இம்மகளிருள் இளமையும் அழகும் உடையார் அரசர் மற்றும் செல்வர்களின் ஆசைநாயகியர் ஆக்கப்பட்டனர். இதனை,
‘மழையெனமருளும் மகிழ்செய் மாடத்து
இழையணிவரப்பினின்னகை மகளிர்
போக்கில் பொலங்கல நிறையப்பல்கால்
வாக்குபுதரத்தர”
(இழையணிந்த அழகினையுடைய பாட்டாலும் கூத்தாலும் வார்த்தையாலும் அரசனுக்கு இனிய மகிழ்ச்சியைச் செய்யும் பெண்கள் உண்டார் மயங்குதலைச் செய்யும் கள்ளை, மழையென்னும்படி மாடத்திடத்தே பலகாலும் ஓட்டமற்ற பொன்னற் செய்த வட்டில்கள் நிறையத்தந்து உண்பித்தனர்) என்று பொருநராற்றுப்படை அறிவிக்கிறது.
பகைவர் மனையோராய்ப் பிடித்து வரப்பட்ட இப்பெண்கள் கொண்டி மகளிர் எனப்பட்டனர். இவ்வடிமைப் பெண்கள் நீருண்ணும் துறையிலே சென்று மூழ்கிக்கோயில்களைத் தூய்மை செய்யவும் அந்திக் காலத்தே கோயில்களில் விளக்கேற்றவும், தறிகளுக்குப் பூச்சூட்டவும் பணியமர்த்தப்பட்டனர். ‘பொதியிலை மெழுகி விளக்கும் இட்டிருக்க வம்பமகளிரை வைத்தார், அதனால் தமக்குப் புகழ் உளதாம் என்று கருதி” என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் காரணமும் விளக்கமும் கூறினார்.
இக்கொண்டிமகளிர் பரத்தையர் ஆக்கப்பட்ட அவலமும் நிகழ்ந்தது. ‘ கொண்டி மகளிர் “ என்ற தொடர் பரத்தையர் என்ற பொருளில் ‘பயன்பல வாங்கி வண்டிற்றுறக்கும் கொண்டி மகளிர் என்று மணிமேகலையிலும் மதுரைக்காஞ்சியிலும் கூறப்படும் செய்தி மேற் குறித்த கூற்றுக்கு அரண் செய்கிறது எனலாம்.
பெண்களேயல்லாது, ஆண்களும் அரண்மனைகளில் அடிமைகளாகக் குற்றேவல் செய்தனர் என்பதையும் ஆடவரான அவ்வடிமைகள் அரசியர் வாழும் அந்தப்புரம் முதலிய பகுதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தியையும் நெடுநல்;வாடை (106-107) கூறுகிறது.
‘பீடுகெழுசிறப்பின் பெருந்தகையல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பு”
(பெருமை பொருந்தின தலைமையினையுடைய பாண்டியனல்லாது, குறுந்தொழில் செய்யும்; அடிமைகளான ஆண்களும் அணுகவாராத அரிய காவலையுடைய கட்டுக்கள்) என்பது, நூலாசிரியர் கூற்று.
‘கடியுடைவியனகர்” எனப்பட்ட கட்டுக்காவல் மிக்க அரண் மனைகளில் அடிமைகளாகப்பணிபுரிந்த ஆடவர்கள், ஆடவர் என்ற ஒரே காரணத்திற்காக அரசியர் வாழும் அந்தப்புரப் பகுதிக்குள் புகத்தடைவிதித்த அரசர்கள்தான், போர்க்களங்களில் தாம் அமைத்துத்தங்கிய பாசறைகளிலும் பாடிவீடுகளிலும் பணிபுரிந்திடப் பெண்களையும் உடன் அழைத்துச் சென்றனர், அப்பெண்களும் பாசறைகளில் ‘பாடை வேறுபட்ட பலவாகிய பெரிய படைக்கு நடுவே” (நச்சினார்க்கினியர் கூற்று) பணிபுரிய வற்புறுத்தப்பட்டனர் என்ற முரண் நம் சிந்தனைக்கு உரியதாகிறது.
அரண்மனைகளில் குறுந்தொழில் செய்வோராக நியமிக்கப்பட்ட அடிமைகளான ஆடவர்கள் அரசர்களுக்கு ஆலவட்டம், குடை, கொடி, பதாகை முதலியவற்றையும் செய்து கொடுத்தனர்.வடுக பள்ளர் 
==============

பள்ளர்கள் தங்களை வடுக பள்ளர் எனவும் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் எனவும் பழனி கோவில் செப்பேட்டில் தங்களை கொணர்ந்து பழனிக்கு குடியேறியது பழனி நாயக்கர்கள் தான் என குறிப்பிட்டுள்ளனர் 

‘கைவல்கம்மியன் கவின்பெறப்புனைந்த
செங்கேழ்வட்டம்” (கையாற் புனைதல் வல்ல உருக்குத்துகிறவனாலே அழகுறப்பண்ணின சிவந்த நிறத்தையுடைய ஆலவட்டம்) என்று நெடுநல் வாடை (57-58) அது குறித்த செய்தியைக் கூறுகிறது.
அரசர்களின் அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் அடிமைகளான பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் சமையல் காரர்களாகப் பணிபுரிந்தனர்;.
‘கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை
வல்லோன் அட்ட பல்லூன் கொழுங்குறை”
(வளைந்த அரிவாளைக் கொண்ட வடுவழுந்தின வலியுடைத்தாகிய கையினையுடைய மடையன் (சமையல்காரன்) ஆக்கின பல இறைச்சியிற் கொழுவிய தசை) என்று பெரும்பாணாற்றுப்படை(471-472) இது குறித்துக் கூறுகிறது.
இவரையல்லாமல் சூதர் மாகதர் வைதாளிகர் நாழிகைக் கணக்கர் முதலானோரும் அரண்மனைகளிலும் அடிமைகளாகப் பணிபுரிந்தனர். இவர்கள் அரசர்களை முகஸ்துதியாகப் புகழ்ந்து பாடும் வேலைகளைச் செய்தனர். அவர்களும் நின்;றேத்துவார் இருந்தேத்துவார் என ஏற்றத்தாழ்வாகப் பிரிக்கப்பட்டிருந்ததையும் இலக்கியங்கள் காட்டுகின்றன.
சூதர் என்போர் நின்று கொண்டு அரசர்களை வாழ்த்தினர். அரசர்களுக்கு எதிரில் உட்கார்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படாத நிலையினையே ‘நின்றேத்துவார்” என்ற சொல் உணர்த்துகிறது. மாகதர் என்போர் இருந்தேத்திப்புகழைச் சொல்வோராவர். நாழிகைக் கணக்கர், அரசர்களுக்கு நேரத்தைக் கணக்கிட்டுக் கூறினர். வைதாளிகர் என்போர் தத்தம் துறைக்குரியவற்றைச் சொல்வோராவர். மேலும் அரசர்களுக்குப் பள்ளியெழுச்சியின் போது காலைப் பொழுதில் பள்ளியெழுச்சி முரசு முழக்குவோரும் இருந்தனர்.
‘சூதர்வாழ்த்த மாகதர் நுவல
வேதாளிகரொடு நாழிகையிசைப்ப
இமிழ் முரசிரங்க ‘ என்பது மதுரைக் காஞ்சி (670 -672) இது குறித்துக் கூறும் செய்தியாகும்.
போர்க்களத்தில் அடிமைகள்
அரண்மனைகளில் குற்றேவல் செய்வதற்காகப் பணியமர்த்தப்பட்ட அடிமைகளான பெண்களையும் பாணர் துடியர் முதலான அடிமைகளையும் அரசர்கள் போர்க் களங்களுக்கு உடனழைத்துச் சென்றனர். அரண்மனைகளில் மட்டுமல்லாது, போர்க்களங்களிலும் அரசர் படைத்தலைவர் முதலாயினர்க்குப் பணிவிடை செய்யவும் அவர்களின் காமப்பசிக்கு இரையாகவும் அடிமை மகளிர் உடன் கொண்டு செல்லப்பட்டனர், குற்றவேலும் பணிவிடையும் செய்யப் பணிக்கப்பட்டனர்.
‘குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ்சிறுபுறத்து
இரவு பகல் செய்யும் திண்பிடியொள்வாள்
விரவுவரிக் கச்சிற் பூண்டமங்கையர்
நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்
கையமை விளக்கம் நந்துதொறு மாட்ட”
(சிறிய வளையலணிந்த முன் கையையும் கூந்தலசைந்து கிடக்கின்ற அழகிய சிறிய முதுகையும் உடையோரும் திண்ணிய கைப்பிடியையுடைய வாளைக் கச்சிலே பூண்ட வரும் நெய்வழிகின்ற திரிக்குழாயையுடையவரும் ஆன அடிமைப்பெண்கள், நெடியதிரியை எங்கும் கொளுத்தின ஒழுங்காய் அமைந்த விளக்குகள் அணையுந் தோறும் தம்கையிற்பந்தத்தால் கொளுத்தினர்) என்று முல்லைப்பாட்டு (45 – 49) கூறுகிறது.
போருக்குச் செல்லும் வீரர்கள் அவ்வப் போர்த்துறைக்குரிய பூவைச் சூடிச் செல்வது மரபு, அரசர்கள் அதற்கேற்பவீரர்களுக்குப் பூ வழங்குவர். போர்ப் பூ வழங்கும் செய்தி வீரர்களுக்குப் பறையறைந்து அறிவிக்கப்பட்டது. அப்பணியைத் துடியன் இழிசினன் முதலான அடிமைகளே செய்தனர். அடிமையாகிய இழிசினன் யானை மீதமர்ந்து பறை முழக்கிப் போர்ப் பூவைப் பெற்றிட வருமாறு வீரரை அழைத்தான். இழிசினன். அங்ஙனம் அழைத்ததனை.
‘கேட்டியோ வாழிபாண பாசறைப்
பூக்கோளின் றெறன்றையும
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே” புறநானூ : 289
(பாணனே பாசறையிடத்தே போர்க்குரிய மறவர்க்குப் போர்ப்பூவைத் தரும் பொழுது இப்பொழுது என்று அறிவிக்கும் புலையன் முழக்குகின்ற பறையின் ஓசையைக்கேட்பாயாக); என்று, புலையன் போர்ப் பூவைப் பெற்றுச் செல்லப் பறைமுழக்கி வீரரை அழைத்த காட்சியைப் புலவர் கழாத் தலையார் காட்டுகிறார்.
‘நிறப்படைக் கொல்காயானை மேலோன்
குறும்பர்க் கெறியும் ஏவற்றண்ணுமை”
(குத்துக் கோலுக்கு அடங்காத யானைமேலிருப் போனாகியவள்ளுவன், அரண்புறத்தே நின்று பொரும் பகைவர் பொருட்டு முழக்கும், பூவைக் கொள்ளுமாறு ஏவுதலையுடைய தண்ணுமை (பறை) என்று, வள்ளுவன் யானை மேலமர்ந்து வீரரைப் போர்ப் பூவைப்பெறுவதற்குப் பறையறைந்து அழைத்த காட்சியைப் புறநானூறு :293 காட்டுகிறது.
துடியன், பறையன், பாணன், புலையன் இழிசினன் முதலான அடிமைகள் பாசறைகளிலும் பாடி வீடுகளிலும் அரசர்க்குப் பணி விடை செய்வதற்காகப் போர்க்களத்துக்கு உடனழைத்துச் செல்லப்பட்டனர். துடியர் பறையர் என்போர் போர்க்களத்தில் துடியையும் பறையையும் முழக்கு வோராகப் பணிபுரிந்தனர். இதனை, ‘துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின” (துடிப்பறை கொட்டுபவனே பறையை முழக்கும் குறுந்தடியைக் கொண்டு நிற்கும் புலையனே) என்றும் ‘உவலைக்கண்ணித்துடியன்” என்றும் புறநானூறு கூறுகிறது.
போரில் தலைவன் வீழ்ந்து பட்டால் அவனது போர்க் கருவிகளான வேல் கேடகம் முதலானவற்றை, உடன் அழைத்துச் செல்லப்பட்ட துடியனும் பாணனும் தம் கைகளில் ஏந்திக் கொண்டனர்.
‘பாசறையீரே பாசறை யீரே
துடியன் கையது வேலேயடிபுணர்
வாங்கிரு மருப்பிற்றீந் தொடைச் சீறியாழ்
பாணன்கையது தோலே” புறநானு : 285.
(மாற்றார் எறிந்த வேல்மார்பிற்பட்டு தலைவன் மண்ணிற் சாய்ந்தானாக அவனது வேல் துடிகொட்டுவோன் கையதாயிற்று தலைவனது கேடகம் பாணன் கையதாயிற்று) என்று தலைவன் போரில் வீழ்ந்து பட்டானாக அவனது வேலும் தோலுமாகியவற்றைத் துடியனும் பாணனும் தம் கைகளில் ஏந்திக் கொண்டனர் என்ற செய்தியை அரிசில் கிழார் கூறுகிறார்.
சுpறாஅர் துடியர் பாடுவன் மகா அர்
தூவெள்ளறுவை மாயோற் குறுகி
இரும்புட் பூச லோம்புமின் யானும்
விளரிக் கொட்பின் வெண்ணரிகடிகுவென்” – புறநானூறு: 291
(அடிமைகளான துடியர்களே பாணர்களே தூய வெள்ளிய ஆடையணிந்த கரியனாகிய தலைவனை அணுகி, கரிய பறவைகள் செய்யும் ஆரவாரத்தை நீக்கு வீராக, யானும் விளரிப் பண்ணைச் சுழற்சியுறப்பாடி, தின்ன வரும் குறுநரிகளை யோட்டுவேன்.) என்று, போரில் வீழ்ந்து பட்ட வீரனது மனைவி, போர்க்களத்துக்குத் தலைவனுடன் சென்றிருந்த துடியனையும் பாணனையும் பார்த்துக் கூறியதாக நெடுங்களத்துப் பரணர்; கூறுகிறார். இவ்வாறு போர்க்களத்துக்கு அடிமைகளான பெண்களும் துடியரும் பாணரும் தலைவர்களால் உடனழைத்துச் செல்லப்பட்டதைப் புறநானூறு கூறுகிறது.
பாணரும் பாடினியரும் துடியரும் பறையரும் ஆண்டைகளின் அடிமைகளாக அவர்களின் ஆதரவில் வாழ்ந்தனர். போரில் ஆண்டையாகிய தலைவன் வீழ்ந்து பட்ட போது அவனது பராமரிப்பில் வாழ்ந்து வந்த துடியர் பாணர் முதலியோரது நிலை இரங்கத்தக்க தாயிற்று. இதனை,
‘துடிய பாண பாடுவல் விறலி
என்னாகுவிர்கொல் அளியர் நுமக்கும்
இவணுறை வாழ்க்கையோ அரிதே ‘ புறநானூறு : 280
(துடி கொட்டுபவனே பாணனே பாடல் வல்ல விறலியே நீங்கள் என்ன ஆவீர்களோ, இரங்கத்தக்கீர், இது காறும் இருந்தாற் போல இனி இவ்விடத்தே இருந்து வாழலாம் என்பது அரிதே) என்று போரில் இறந்து பட்ட தலைவனது மனைவி, துடியர் பாணர் முதலானோரது நிலைக்கு இரங்கிக் கூறியதாக மாறோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.
பாணர் அடிமைகளாக ஆண்டைகளின் தயவில் வாழ்ந்தனர்;. அவர்களைப் பரத்தையரின் இல்லங்களுக்கு அழைத்துச் சென்றனர். ஆண்டைகளுக்காகப் பரத்தையர் பால் தூது சென்றனர். இதனைச் சங்க இலக்கியங்களில் மருதத்திணை சார்ந்த பாடல்கள் விரிவாகவும் விளக்கமாகவும் கூறுகின்றன. ‘பாணர் அடிமைகளாகப் பரத்தையர் வீடுகளுக்கும் உடன் சென்றனர், பாடி வீடுகளுக்கும் உடன் சென்றனர் என்ற செய்தியைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
In the Thiruthuraipoondi inscription No.204, (Tamil Nadu Archaeology Department) pertaining to cholas period says as follows :-

"வண்ணார் பள்ளர் பறையர் உள்ளிட்டாரும்"

In the Madurai, Melur (keeranur) inscription (S.I.I. Vol-V, No.273) pertaining to Kulotunga chola-III says as follows :-

" இட்ட நிலம் கொங்கூர் குளத்துக் கிழைத்தூம்பில் எல்லைகளில் 
பள்ளக் கவருக்கு தெற்கும் மன்றாடி சோழ கொந் செய்க்கு வடக்கும்" 

In the Thiruthuraipoondi inscription No.1, (Tamil Nadu Archaeology Department) pertaining to pandiyas period says as follows :-

"வடபாற் எல்லை பள்ளன் ஓடை"

During the Kulasekara Pandiya period of 13th century, the inscriptions says as follows :

"இவ்வூர் குடும்பரில் பெரிய தேவப் பள்ளன்"

(Seminar on Hero-stones, Editor R. Nagaswamy (page-77) published by the State Department of Archaeology, Govt of Tamil Nadu - 1974).

In 1229 A.D., (Maravarman Sundara Pandya) the Nadu of Kana-nadu, the Nagaram, the Grama, Vanniyar and the Padaipparru's agreed to levy per capita on all the land holders as given below :-

For Brahmins, Chettis, Vellalas 1/2 Panam
for Minors 1/4 Panam
for Garrisons 1/4 Panam
for Parayars & Pallars 1/8 Panam 

It shows Brahmins, Chettis and Vellalas were held equals and from the manual labourers like Pallas and Paraiyas 1/4 of what was levied from others (Kudumiyamalai) was collected.

"பறையர் பள்ளர் பெர் ஒன்றுக்கு பணம் அரைக்காலும்"

(Tamil Coins a study, Dr. R Nagaswamy, Page - 107 & 108. Published by Institute of Epigraphy, Tamil Nadu State Department of Archaeology - 1981) &
Inscriptions of the Pudukottai State (I.P.S), Inscription No.561. (Kudumiyanmalai Inscription).

In the Thiruvallur District, Kuvam thirupuranthaka Eswarar koil inscription (1296 A.D), pertaining to "Thiribuvana Vira Ganda Gopala Devar (Telugu Chola) says as follows :-

"வைத்தாந் பள்ளநும்"
"இவை பள்ளன் எழுத்து" (S.I.I. Vol-XXVI, No.354).

In the Trichirapalli District Tiruppalatturai inscription says as follows :-

"புலை அடியாரில் முன்னால் நங்கைபுரத்தில் பாட்டத்தில் நின்ற 
புலை அடியாராய் உடையார் கம்பண உடையார் காரியப்பெர் 
சந்த்ரசர் விற்க நான் கொண்டு உடையெனான சாதனப்படியால் 
உள்ள பள்ளன் பிறவியும் இவன் பள்ளி அழகியாளும் இவன் மகன் நம்பாளும் இவன் தம்பி 
வளத்தானும் இவன் தம்பி தாழியும்" (S.I.I. Vol-VIII, No.590). 



In the Pudukkottai Thirumayam, Karaiyur Sundara Raja Perumal koil inscription pertaining to the king "Virupakshirayar" of 14-15th century A.D says as follows :-

"வலையர் ஆடிக்கு ஒரு கூடு முசலும் காத்திகைக்கு 
ஒரு கூடு முசலும் இடையர் பால் நெய்யும் பறையர் 
ஆடிக்கு இரண்டு கொழியும் காத்திகைக்கு இரண்டு 
கொழியும் பள்ளர் ஆடிக்கு இரண்டு கொழியும் 
காத்திகைக்கு இரண்டு கொழியும்" (I.P.S. Ins. No. 715)

In the Pudukkottai Thirumayam, Ilambalakudi Madavira Vinayagar koil inscription of 16th century says as follows :-

"இலம்பலக்குடியில் பள்ளற்கும் பறையற்கும் 
விருது சண்டையாக காஞ்சிபுரத்துக்குப் போய்
கல்வெட்டுப்"

"இலம்பலக் குடியில் பறையற்கும் 
பள்ளற்கும் சண்டை" (Avanam-15, July-2004, Page-31&32)

In the Pudukkottai Thirumayam, Karaiyur Thirumanganeeswarar koil inscription of 16th century says as follows :-

"காத்திகைக்கு இடையன் ப.ல் நெய்யும் ..
வலையன் முசலும் பள்ளன் கொழியும்
பரையன் கொழியும் ஆக இந்த சுவந்திரம்" (I.P.S. Ins. No.843)

In the Pudukkottai Thirumayam, Thekkattur Agatheeswarar koil inscription of 16th century says as follows :-

"தெற்காட்டூராக அமைந்த ஊரவரொம்
மேற்படியூற் பள்ளற்கும் பறையற்கும் 
பள்ளற்கு தவிலும் முரெசும் செமக்கலமும் 
நன்மை தின்மை பெருவினைக்குங்கொட்டி 
பொக கடவராகவும் பறையர் அஞ்சு கா" (I.P.S. Ins. No. 956)

In the Pudukkottai Thirumayam, Mellathanayam Mariamman koil inscription of 16th century says as follows :-

"வீர சின்னு நாயக்கரவர்கள் பள்ளருக் குச்சிலா 
சாதனங்கட்டளையிடப்படி பள்ளர் பறையர் 
இருவகைப் பெருக்கும் வெள்ளானை 
வாழை கரும்பு உண்டில்லை யென்று
விபகாரம் நடக்குமிடத்தில் பள்ளர் இந்த 
விருது தங்களுக் யெல்லாமல் பறையருக்கு 
இல்லை யென்று நெய்யிலெ க்கை பொடுமிடதில்
பள்ளருக்கு க்கைக்கு சுடாமல் வெற்றியான 
படியினாலெ" (I.P.S. Ins. No. 929)

In the above said inscriptions, the "Pallar Community people" and "Paraiyar Community People" were placed together. In one of the inscription, the "Pallar Community People" referred as "Pulai Adiyars"
ஈமத்தொழிலில் அடிமைகள்
புலையன் இழிசினன் முதலான அடிமைகளை ஆண்டைகள் பிணஞ்சுடுதல் போன்ற இழிபணிகளைச் செய்யவும் ஏவினர். ஆண்டைகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அவர்களும் இடுதலும் சுடுதலுமாகிய ஈமத்தொழில்களைச் செய்தனர்.
கள்ளியேய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுளாங்கண்
உப்பில்லா அவிப்புழுக்கல்
கைக் கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோனீயப் பெற்று
நிலங்கலனாக விலங்குபலிமிசையும் -புறநானூறு :363
(கள்ளிகள் பரந்து மூடிய முட்செடிகள் நிறைந்த முது காட்டில் வெள்ளிடையே ஓங்கிய அகன்ற இடத்தின் கண் உப்பின்றி வேக வைத்த சோற்றைக் கையிற் கொண்டு பின்புறம் பாராது இழிசினனாகிய புலையன் கொடுக்கப் பெற்று நிலத்தையே உண் கலனாகக் கொண்டு வைத்து வேண்டாத பலியுணவை ஏற்கும் ) என்றும்
‘கள்ளிபோகிய களரி மருங்கில்
வெள்ளினிறுத்த பின்றைக் கள்ளொடு
புல்லகத்திட சில்லவிழ்வல்சி
புலையனேவப் புன் மேலமர்ந்துண்
டழல்வாய்ப் புக்கபின்’ – புறநானூறு :360
(கள்ளிகள் ஒங்கியுள்ள பிணஞ்சுடு களத்தின்கண் பாடையை நிறுத்திய பின்பு பரப்பிய தருப்பைப் புல்லின் மேல் கள்ளுடன் படைக்கப்பட்ட சில சோறாகிய உணவைப் புலயைன் உண்ணுமாறு படைக்க, தருப்பைப் புல்லின் மேல் இருந்துண்டு சுடலைத்தீயில் எரிந்தனர்) என்றும் இலக்கியங்கள் பேசுகின்றன.
‘இழிசினனாகிய புலையன் பிணத்துக்கு உப்பில்லாத சோறும் கள்ளும் பின்புறம் திரும்பிப் பாராமல் படைத்தலாகிய சடங்கைச் செய்தலோடு பிணத்தை இடுதலும் சுடுதலும் ஆகிய ஈமத்தொழிலையும் செய்தான் என்ற செய்தியைப் புறநானூறு கூறுகிறது.
இழிந்தவையும் கடினமானவையுமான தொழில்களைச் செய்யுமாறு அடிமைகாளகிய சகமனிதர்களை ஆண்டைகள் வற்புறுத்தி ஏவினர். வயல்களில் உழுதல், நீர்பாய்ச்சுதல், தொளிகலக்குதல், நாற்று நடுதல், களைபறித்தல், காவல் காத்தல், நெல்லரிதல், பிணையலடித்தல், பொலி தூற்றுதல், நெல்லை ஆண்டைகளின் மனைகளில் உள்ள நெற் கூடுகளில்சேர்த்தல் போன்ற கடினமான பணிகளைக் கடையர் கடைசியர் உழவர் உழத்தியர் களமர் முதலானவர்களே செய்தனர். இவர்கள் கீழ் மக்கள் எனப்பட்டனர். தமிழ் இலக்கணநூல்களும் இலக்கியநூல்களும் அங்ஙனமே குறித்துக் கூறுகின்றன.
சங்க இலக்கியங்களில் இத்தகைய தொழில் செய்தாரைக் குறிக்கும் பொழுது ‘சிறு’ அல்லது ‘சிறார்’ என்னும் சொல்லுடன் சேர்த்தே குறிப்பிட்டனர். தச்சச் சிறார். வேட்கோச் சிறார், சிறுகுறுந் தொழுவர் என்று குறிக்கப்பட்டனர். அவர்களை அடிமைகள் அல்லது கீழ் மக்கள் என்று குறிப்பதற்காகவே இச் சொற்கள் சேர்த்து வழங்கப்பட்டன. ‘சிறாஅர் துடியர் பாடுவன் மகாஅர்’ என்று துடியரும் பாணரும் சிறார் என்று அழைக்கப்பட்டதைப் புறநானூறு ( 291) காட்டுகிறது. இங்ஙனம் தச்சர், வேட்கோவர், குறுந்தொழுவர், துடியர் பாணர் முதலியவர்களை அடிமைகள் என்று குறிப்பதற்காவே அச்சொற்களுடன் சிறு மற்றும் சிறார் என்னும் சொற்கள் சேர்த்து வழங்கப்பட்டன.
வயதில் மூத்தவர்களான அடிமைகளையும் கீழ்ச்சாதியாரையும் இளையோரான ஆண்டைகளும் ஆதிக்க சாதியாரும் மரியாதை இல்லாமல் அடே என்று அழைப்பதும் வாடா போடா என்று ஏவுவதும் இன்றும் வழக்கத்தில் உள்ளது. இவ்வழக்கம் அடிமைச் சமூகம் தோன்றிய காலத்திலேயே தோன்றி விட்ட வழக்கமாகும். இவ்வழக்கம் சங்க காலத்திலும் நடைமுறையில் இருந்தது என்பதையே, தச்சர் வேட்கோவர் முதலான சொற்களோடு சேர்த்து வழங்கப்பட்டுள்ள சிறு மற்றும் சிறார் என்னும் சொற்கள் உணர்த்துகின்றன.
உழவர், களமர், புலையர் முதலான அடிமைகள் ஊருக்குள் வாழ அனுமதிக்கப்;படவில்லை. ஊருக்கு வெளியே ஓதுக்குப் புறமான சேரிகளில் வசிக்கவே அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். சுரண்டும் வர்க்கத்தவர் ஆன ஆண்டைகள் வாழ்ந்த ஊர்களையும் அரண்மனைகளையும் புகழ்ந்து பாடிய புலவர்கள் உழைப்பாளிகளும் அடிமைகளும் ஆன கீழ் மக்கள் வாழ்ந்த சேரிகளைப்பாடாமல் ஒதுக்கினர். இது பற்றி முன்னர்க் கூறப்பட்டுள்ளது.
சங்க காலத்தில் அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் அடிமைகள் ஊதிய மின்றி உழைத்திட நிர்பந்திக்கப்பட்டனர். பழைய சோறே அடிமைகளுக்கு உணவாக ஆண்டைகளால் வழங்கப்பட்டது. ஆண்டைகள் உடுத்துக்களைந்த பழைய ஆடைகளே அடிமைகளுக்குக் கொடுக்கப்பட்டன. பிற்காலத்தில் ஜமீன்தார்கள் மற்றும் செல்வர்களின் வளமனைகளில் அடிமைகள் ஊதிய மின்றி உழைத்திட நிர்பந்தப் படுத்தப்பட்டனர். இவ்வடிமைகள் ஊழியக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அவ்வழக்கம் சங்க காலத்திலும் நிலவியது. அண்மைகாலத்தில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படும் வரையிலும் நீடித்திருந்தது.
அடிமைக் கொடை
அடிமைகளைச் சங்க காலத்தில் விலைக்குவிற்கும் வழக்கம் இல்லை. அதற்கான சான்றுகள் இலக்கியங்களில் காணப்படவில்லை. அக்காலத்தில் அடிமை வாணிகம் தோன்றாமைக்கு வணிகமுறை வழக்கத்துக்கு வாராததும் ஒரு காரணமாகும். அந்தக் காலகட்டத்தில் வாணிபம் என்பது பண்டமாற்று முறையாகவே இருந்தது. இது குறித்து ஏராளமான செய்திகள் சங்க நூல்களில் காணப்படுகின்றன. ஆண்டைகள் அடிமைகளைப் பரிசிலர்க்கு தானமாக வழங்கும் வழக்கம் இருந்தது.
சிக்கல்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழி யாதன் என்பவன் குண்டுகட்பாலியாதனார் என்ற புலவருக்கு யானை குதிரை ஆநிரை நெற்போர் முதலியவற்றோடு அடிமைகளையும் தானமாக வழங்கினான் என்ற செய்தியைப்புறநானூறு ( 387 ) கூறுகிறது.
குன்றுறழ்ந்த களிறென்கோ
கொய்யுளைய மாவென்கோ
மன்று நிறை நிரையென்கோ
மனைக்களம ரொடு களமென்கோ
ஆங்கவை கனவென மருள வல்லே நனவின்
நல்கியோனே நசைசால்; தோன்றல்
( மலை போன்ற யானைகளும் கொய்யப்பட்ட தலையாட்டமணிந்த குதிரைகளும் மன்றிடம் நிறைந்த ஆநிரைகளும் மனைக்கண் இருந்து பணிபுரியும் அடிமைகளான களமரும் ஆகிய அவற்றைக் கனவு என்று மயங்குமாறு நனவின்கண் விரைவாக நல்கினான் ) என்பது பரிசில் பெற்ற புலவர் பாலியாதனரின் கூற்று ஆகும்.
ஓய்மா நாட்டு நல்லியக் கோடன் என்னும் வள்ளல் தன்னைப் பாடி வந்த பரிசிலர்க்கு யானை குதிரை அணிகலன் தேர் முதலியவற்றையும் எருதுகளையும் தேரைச் செலுத்தும் பாகனையும் பரிசிலாகக் கொடுத்தான் என்ற செய்தியைச் சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. ( 257 – 61 )
கடுந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
யூர்ந்து பெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு
மாசெலவொழிக்கும் மதனுடை நோன்றாள்
வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ
யன்றே விடுக்கு மவன் பரிசில்’
( பாண்டில் எருது, வலவன் வண்டி யோட்டி) ( வலிய தொழிலைச்செய்யும் தச்சருடைய கையாற் செய்யும் உருக்கள் எல்லாம் முற்றுப் பெற்ற தேரினையும் தன் கடுமையால் குதிரையின் செலவைப் பின்னே நிறுத்தும் அழகும் வலிமையும் உடைய கால் களையும் ஒளிபொருந்திய முகத்தையும் உடைய நாரை எருத்தையும் அதனைச் செலுத்தும் பாகனையும் யானைகுதிரை அணிகலன்களையும் தந்து அவன் அன்றே விடுக்கும் ) என்பது இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் நமக்குக் கூறும் செய்தியாகும். இவ்வாறு அடிமைகளை ஆண்டைகள் புலவர்களுக்கு தானமாக வழங்கிய செய்தியைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

ஆண்டைகள் ஊர்ந்து சென்ற சிவிகைகளை அடிமைகள் சுமந்து சென்ற காட்சியை வள்ளுவர் நமக்குக் காட்டுகிறார்.
‘அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை” – குறள் என்பது வள்ளுவர் காட்டும் காட்சியாகும், இங்கு சிவிகை பொறுத்தார் அடிமைகள் ஊர்ந்தார் ஆண்டைகள். ஆடவரும் மகளிருமான அடிமைகளை ஆண்டைகள் அனைத்து விதமான பணிகளையும் செய்யுமாறு ஏவிப் பணி கொண்டதனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. வலியோராகிய சிலர் எளியோராகிய பலரை – சகமனிதர்களை – மனிதக்கால் நடைகளாகக் கருதிப் பணியமர்த்திய கொடுமை தனியுடைமைச் சிந்தனையின் வெளிப்பாடு என்பது சங்க இலக்கியங்கள் வாயிலாக மனித குலவரலாறு நமக்குக் கூறும் செய்தியாகும்.

சான்றோர் என்ற ஒற்றைச் சொல் பற்றி

இது மறவர்,வன்னியர் போன்று வீரரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பண்புப்பெயர் ஆகும்.பலதரப்பட்ட மக்களும் மூவேந்தர் படைப்பிரிவில் பங்குபெற்ற நிலையில்,வீரர்கள் இந்த சொற்களால் அழைக்கப்பட்டனர்.இது தனிப்பட்ட இனத்தைக் குறிப்பதற்கான மரபுச் சொல் கிடையாது.எனவே,சான்றோர் என்பதை ஒரு தனி இனத்தைக் குறிப்பதாகக் கொள்ளக்கூடாது.
நெடுங்குடி கோவில் பாண்டியர் கல்வெட்டுகளில். சாணார் வருகின்றனர். 

"ஆயர் சாணார் இடயர் போன்ற சமுதாய்த்தவரும்"...........

சாணார் என்பது நட்டாச்சி செய்த நாடார்களாம் ஆனால் 14-ஆம் நூற்றாண்டு சங்கரங்கோவில் பராக்கிறம பாண்டிய தேவர் கல்வெட்டில் நாடார் என குறிப்பிடாது சாணார் எனவே குறிப்பிடுகின்றது. இதில் சாணாருக்கும் பறையருக்குமான சண்டையில் பாண்டியர் அழித்த தீர்ப்பை பற்றிய கல்வெட்டு. எஸ்.இராமசந்திரன்,பிரவாகன் இவர்கள் கூறட்டுமே எங்கே பாண்டிய நாடார் என உள்ளது.

தற்காலத்தில் நாடார் இனமக்கள் தங்களின் சாதிப்பெயரான சாணார் என்பது சான்றார் என்பதிலிருந்து வந்ததாக உருவகப்படுத்திக் கொள்கின்றனர்.இதையே உண்மையாகக் கொண்டாலும்,அவர்கள் சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்ததற்கான ஆதாரம் ஏதும் கிடையாது.ஏனெனில் சங்க கால திணைநிலை மற்றும் திணைநிலை சாராத இனங்களில் அவர்களின் அடையாளம் கிடையாது.சங்கப் பாடலில் குறிப்பிடக்கூடிய சான்றோர் என்ற சொல்லுக்கும்,இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
கரிகால சோழனின் இலங்கைப்படை எடுப்பின் போது அங்கிருந்து பன்னிரண்டாயிரம்  ஈழமக்களைச் சிறைப் பிடித்து வந்ததாகவும் கல்லணையைக் கட்ட இவர்களைப் பயன்படுத்தியதாக ஆதாரங்கள் காணப்படுகின்றது.பிறகு பல்லவ மற்றும் இடைக்காலத்தில் ஈழவர் என்ற மக்கள் காணப்படுகிறார்கள்.பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இலங்கையின் மீது தமிழகத்திலிருந்து படையெடுப்பு நடந்தது.அப்படையெடுப்பில் பலர் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.அதேபோல்,இராசராச சோழன் இலங்கை மீது படையெடுத்தான்.சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் இலங்கை மீது படையெடுத்து பலரை கைது பண்ணி இங்கு கொண்டு வந்தான்.இவ்வாறான படையெடுப்புகள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள்தான் ஈழவர் என்று சொல்லக்கூடிய நாடார் இனமக்கள்.படையெடுப்பில் கைது செய்யப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டவர்களில் பலர் படை வீரர்கள் இருந்தார்கள்.அவ்வாறாக வந்தவர்தான் ஈழச்சான்றோன் என்று சொல்லக்கூடிய ஏனாதிநாதர்.அவர்  பயிற்சி கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.மற்ற மக்கள் ஆற்றுக்குக்கரை அமைத்தல்,படையெடுப்பின்போது கொடி சுமந்து செல்லுதல் மற்றும் கள் இறக்குதல் போன்ற பணியில் ஈடுபட்டார்கள்.பெரும்பாலான மக்கள் கள் இறக்குதலில் ஈடுபட்டனர்.இதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன.இன்றுவரை அது தொடர்கிறது.
வீரர் என்ற வகையில் ஏனாதிநாதர் போன்றோர் சான்றோர் என அழைக்கப்பட்டார்கள் என்பதற்காக,அது சான்றோர் இனம் என்றும்,அவர்கள்தான் தமிழகத்தின் உண்மையான மூவேந்தர் இனம் என்றும் சொல்வது உண்மையில் தமிழகத்தின் வரலாற்றைத் தலைகீழாக திருப்ப ஆர் எஸ் எஸ் காரர்களின் சதி போல் தெரிகிறது.இதன் அடிப்படையிலேயே'சத்திரியர்-பார்ப்பனர் கூட்டணி'ஆட்சி பண்டைய தமிழகத்தில் நடந்ததாக கதை அளப்புகள். 1921 ஆம் ஆண்டிலிருந்து நாடார் இனமக்களின் பெரியமனிதர்கள் தங்கள் இனத்தை போலியாக உயர்த்திக்கொள்ள பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.இதைப் பற்றி பல வரலாற்று அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அப்படி வந்த ஒரு சொல்தான் தாங்கள் சத்திரியர் இனம் என்றும்,நாடார் என்ற பட்டம் சாணாருக்கு நாடாள்வான் என்பதிலிருந்து வந்தது என்ற புழுகுகளும்,நாடாள்வான் என்றால் சாணார் தான் என்ற எவ்வித ஆதாரமற்ற பொய்யுரைக்கும் காரணமாக அமைந்தது.ஆனால் இலங்கை வழக்கின்படி இம் மக்களாகிய சாண்டார் மற்றும் நளவர் எனப்படுகின்றனர்.இவர்கள் தமிழகத்தில் குடியேற்றப் பட்ட காலத்தில்  சாண்டார் என வழங்கப்பட்டு அதுவே பின்னர் சாணார் என மருவியது.எந்த ஒரு சாண்டாரும் நளவரும் அதற்கு சமமாக சாணார்(சாண்டார்) எனவும் நாடாவி(நளவர்) என்றும்  வழங்கப்பட்டனர்.ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களின் குடியேற்றம் நடைபெற்று தமிழ் மட்டுமே தெரிந்த இனமாக நம்மிடையே மாற்றப்பட்டும் கூட கேரளத்தின் வர்ணாசிரம கொள்கைக்காரர்களால் (ஈழத்து ஜாதிய வழக்கின் படி) சாண்டார்களும் மற்றும் நாடாவிகளும்(சாணார்,நளவர்) என்பதால் அடையாளப்படுத்தப்பட்டனர். பார்த்தாலே தீட்டு என்று பெரும் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். அதிலிருந்து போராடி விடுதலை பெற்று மேலும் சாணார் என்ற உண்மைப் பொருளுடைய ஆதி அடையாளத்திலிருந்தும், நாடாவி என்றழைக்கப் படாமல் இருக்க வேண்டியும் (ஈழ) நாடார் என்று இனமாக அழைத்துக் கொள்ள விளைந்து அன்றைக்கு வெள்ளைக்கார மத அரசியலாளர்களின் ஆதரவும் பெற்று சாதித்துக் கொண்டனர்.அதற்கு சான்று காண்பிப்பதாகக் கூறிக்கொண்டு (பொய்யாக) நாட்டார் நாடாள்வார் என்று இருந்த பூர்வீக தமிழ் இனத்தவர்களின் அடையாளங்களை சிறிதும் கூசாமல் சாணார் ஆகிய தம்முடையதாக பறைசாற்றிக் கொண்டனர்.நாட்டார்,நாடாள்வார் என்று உள்ள கள்ளர் மறவர் போன்ற சத்திரிய சாதிகளின் பட்டங்களையும் அப்பட்டம் சார்ந்த அன்றைய குறுநில மன்னனையும் அரசு உயர் அதிகாரிகளையும்  சாணார்கள் என்று எவ்வித ஆதாரங்களின்றி இன்று வரை கூறிக் கொண்டுள்ளனர்.

சரித்திரத்தின் உண்மைப் பக்கங்களை அழிக்கவும் உண்மையான தங்களின் வரலாற்றை மாற்றி இலங்கையில் இருந்து தொடரும் தங்கள் (சாண்டார்)சாணார் என்ற இன அடையாளத்தை முழுமையாக அழிக்கவும்,மாற்றவும் வரலாற்றில் பல போலியான புனைவுகள் உருவாக்கப்பட்டது. (இன்றைய இலங்கைவாசிகளுக்கும் கூட விஷயங்கள் நன்கு தெரியும் என்பது மறைக்க முடியாத உண்மை).


The Durave or toddy tapper castes are related to the Ezhavas of Kerala or the Nadar or Tamil Nadu. Mangala Samaraweera, former Minister of Foreign Affairs, one time member of the ruling Sri Lanka Freedom Party and fired by President Rajapakse belongs to the Durave caste.


Caste And Exclusion In Sinhala Buddhism

ஈழப்பூட்சி :- ஈழவர்கள் கள் இறக்குவதற்குச் செலுத்தும் வரி.
இவ்வரி செயல்படுத்த ஊர்தோறும் பல நிலைகளில் அரசு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்தம் பணிகளை வேறொரு கட்டுரையில் பின்னாளில் காணலாம். மேற்கண்ட பல வரியினங்கள் பல்லவர்களின் செப்பேடுகளிலும் அவர்களைத் தொடர்ந்து தமிழ்மண்ணை ஆட்சி புரிந்த சோழர்களின் செப்பேடுகளிலும் காணலாம்.தென்னைபனை மரங்களிலிருந்து சாறு இறக்கவும்பனைவெல்லம்செய்யவும்பாக்கு விற்கவும் வரிகள் செலுத்தப்பட்டன.  
இவ்விதமான பண்டைய நாட்களின் தங்களின் வம்சம் வந்த கதைகளை மறைக்க வேண்டி தற்போதும் கூறிக்கொண்டுள்ள சமத்கார பொய் தான் தாங்கள் சத்திரியர் இனம் என்பது.
இன்றைக்கும் என்றைக்கும் பஞ்சமர் பார்ப்பார் என்னும் உயர்வு தாழ்வு செய்யும் வர்ணாசிரமக் கொள்கைகள் தேவையேயில்லை.
ஆயினும் போலியான இன உயர்வு வேண்டி தமிழக வரலாற்றையே மாற்றி எழுதவும் துணிந்து அதற்காக பொய்யில் சிறந்த புழுகினிப் புலவர்களின் பொய்யுரையால் தமிழ் நாட்டின் பண்டைய வரலாற்றை திருத்தி எழுதுவதென்பது மிகப்பெரிய சரித்திரப் பிழையாகும்.

நாடார்கள் எயினர் மரபினரா?

நாடார்கள் எயினரோ எனவும் சில யூகங்கள் உள்ளது. பெரிய புராணத்தில் "எண்டிசையும் ஏறிய சீர் எயின்மூதூர் எயினனூர். "அப்பொற்பதியில் ஈழ குலசான்றார் ஏனாதி நாதர்". என எயினர்கள் வாழும் எயினனூரில் ஈழவர் குல சாண்றாராக ஏனாதிநாதர் அவதரித்தார்.மழவராயர் என்றால் மழவர் தலைவன் என அர்த்தம்.பல்லவரையர் என்றால் பல்லவர்தலைவன் என அர்த்தம். அதைப்போல் ஏனாதினாதர் என்றால் எயினர் தலைவன் என அர்த்தம். மலையாள ஈழவர்களும் தங்களை எயினர் மரபினர் எண்கின்றனர். கிருஷ்னகிரி மாவட்டத்தில் எயினர் கல்வெட்டு அதிகமாக கிடைக்கின்றது. அதில் ஒரு கல்வெட்டு.:


வரிசை எண் 1.

கல்வெட்டு அமைந்துள்ள இடம்:
 விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், கல்லுமடை கிராமம் திருநாகேசுவரமுடையர் கோயில் தென்புறக் கல்.

கல்வெட்டு :
* ஸ்ரீ கோனோற்றமை கொண்டான் பருத்திக்கு
டிநாட்டு பாப்பார சான்றார்க்கும் பாற்குடி
களுக்கும் பிரமதேய கிழவர்க்கும்
‘கேரள சிங்க முத்தரைய’னாயின ‘மகாதேவன் மரு
தன்’ சாழ நாட்டு திருப்பாலை ஊர் தேவருக்கும்....”

க.என்.86/1973 ல்
"எயில் நாட்டு ராஜன் அடியான் ஈழசான்றான் எயிநாட்டு காமுண்டன் கலிஞ்சிறை புக்கு காணிக்கும் பூ மிக்குமாக பட்டான்"

நாடார்கள் தங்களை "காளிபுத்திரர்கள்" என   பத்திரம் எழுதிகிறார்கள் சங்ககால எயினர்கள் காளியை வணங்கினர் என பாடல் உண்டு.

எனவே நாடார்கள் எயினர் மரபினரா எனவும் கேள்வி உள்ளது.
திருவிதாங்கூர் தோள் சீலைக் கலகம் எது உண்மை?  எது பொய்?
************************************************************************
அண்மையில் (டிசம்பர் 2010) திருவாளர்கள் எஸ். இராமச்சந்திரன் மற்றும் அ.கணேசன் போன்றவர்களின் கூட்டு முயற்சியால் “தோள் சீலைக் கலகம்:  தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூல் என்ற தோரணையில் வெளிவந்ததைக் காண நேர்ந்தது.  இதில் தெரிந்த பொய்கள்தான் என்ன? தெரியாத உண்மைகள்தான் என்ன? என்பதற்கு திட்டவட்டமாக விளக்கங்கள் எதுவும் காணப்படவில்லை
தவிரவும், ‘தோள்சீலைக் கலகம்’ என்ற மக்கள் போராட்டம் தென் திருவிதாங்கூரில் 1859 முதல் 1922 வரை பல்வேறு நிலைகளில் நாடார் சமுதாயத்திற்கும், நாயர் சமுதாயத்துக்கும் இடையில் நடந்தது ஆகும்.  இது குறித்த ஆய்வு நூல்கள் பல பிரசுரமாகியிருந்தாலும், 1975-ல் திரு.ஆர்.என். இயேசுதாஸ் அவர்கள் ஆய்ந்து எழுதி பிரசுரித்த “A people’s Revolt in Travancore”  என்ற நூல்தான் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று (Authoritative book).   இந்நூல்லில் தரப்பட்டிருக்கின்ற நிகழ்வுகளை எதிர்த்தோ, தாங்கியோ ஒரு நூலை எழுதி மேலே குறிப்பிட்டிருக்கின்ற ஆசிரியர்கள் வெளியிட்டிருந்தால் அதில் பொருள் இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு இந்த போராட்டத்தின் நோக்கங்களை திருவிதாங்கூருக்கு வெளியில் நடந்தவைகளுடன் ஒப்பிட்டு உண்மை, பொய் என்று விமர்சனம் செய்திருப்பது  பொருத்தமானதாக இல்லை
திருவிதாங்கூர் என்ற இந்து மன்னர் நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவு வரை நிலைத்து இருந்த சமுதாய கோட்பாடுகளை இவர்கள் ஆய்ந்தறிந்தால் மட்டுமே இங்கே உயர் இந்துக்கள் என்று தாங்களாகவே வகுத்துக் கொண்ட நம்பூதிரிப் பிராமணர்களும், நாயர் தறவாட்டுக்காரர்களும், வெள்ளாளப் பண்ணைகளும் இழிவு அல்லது தாழ்ந்த இந்துக்களின் மேல் அடித்தேற்றியிருந்த சமூகச் சீர்கேடுகளை அறிந்து கொள்வதற்கு இயன்றிருக்கும்.  தீண்டாமை, காணாமை, நடவாமை போன்ற கோட்பாடுகள் ஆழமாக பதிந்திருந்த நாடு இந்தியாவில் திருவிதாங்கூர் மட்டும் தான் என்பதை இவர்கள் உணர வேண்டும்.




“நாடார் அல்லது ஈழவ இனத்தைச் சார்ந்த ஒருவன் பிராமனிடமிருந்து 36 அடி தூரத்திற்கப்பாலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திற்கப்பாலுமே நிற்க முடியும். புலையர் இனத்தைச் சார்ந்த ஒருவனுக்கும், பிராமணனுக்குமிடையில் இருக்க வேண்டிய குறைந்த அளவு தூரம் 96 அடியாகும்.  புலையன் ஒருவன் நாயர் இனத்தைச் சேர்ந்தவனிடமிருந்து 60 அடி அகன்று நிற்க வேண்டும்.  நாயடி அல்லது புலையன் ஒருவனை ஒரு பிராமணன் பார்க்க நேரிட்டால் அவன் தீட்டுப்பட்டவனாகக் கருதப்படுவான்.  இங்ஙனம் தீட்டுப்பட்டவன் ஆற்றிலோ, குளத்திலோ மூழ்கி நீராடி தன்னைச் சுத்தீகரிக்க வேண்டும்”.
(A. Sreedhara Menon – Social and cultural History of Kerala – 1979 – Page 68 – as quoted by Dr. Ivy Peter)
இது போன்ற சாதி கட்டுப்பாடு பிரிட்டீஷ் இந்தியாவில், குறிப்பாக சென்னை மாகாணத்தில் இருந்ததுண்டா? இருந்திருந்தால் திரு.எஸ்.இராமச்சந்திரன் ஐயருக்கு தெரிந்திருக்குமே. இத்தனை வருணாசிரமக் கொடுமைகள் நிறைந்திருந்த திருவிதாங்கூர் என்ற “தெய்வத்தின்றே” நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது மார்பகத்தை மறைத்து, மானமாக வாழ்ந்திருக்க முடியுமா?  என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நிலை தென் தாலுகாக்களான அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை போன்ற தாலுகாக்களில் நிலையில் இருந்தது என்பது உண்மை.
“Before the introduction of Protestant Christianity in Travancore, the Women, excluding women of the Brahmins, were prohibited from covering their bosoms”.
(R.N. Yesudhas – A people’s revolt in Travancore – 1975 – Page – 71)
அதே வேளையில் தென்திருவிதாங்கூர் நாடார்கள் இந்த கோட்பாட்டிலிருந்து விடுதலை வேண்டி, புரோட்டஸ்தாந்து கிறிஸ்தவம் இங்கே அறிமுகம் ஆவதற்கு முன்பே கலகம் செய்து வந்துள்ளனர் என்பதும் உண்மையே,

“The Nadars of South Travancore, who had migrated from the Pandiya country, had been agitating for the right to cover the bosoms of their women even before the arrival of the potestant missionaries”  (Ibid – Page – 3)
குறிப்பு : திருவிதாங்கூரில் ‘நாடார்’  என்பது ஒரு சமுதாயத்தின் பெயர் அல்ல.  திருவிதாங்கூர் மன்னர்களால் சில சாணார் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்று (title  அல்லது பட்டம்) ஆகும்.

“The word Nadar is also used as a title.  The titles Thiruppapur Nadar, Udaya Marthanda Nadar, Nagamani Marthanda Nadar etc were grantned to some facilities of Shanars by the ancient kings of Travancore”.  (Nagam Aiya – Travancore State Manual Vol.II – Page 393)
இதிலிருந்து என்ன புலனாகிறது.  அகஸ்தீஸ்வரத்து ‘நாடான்கள்’ என்று தங்களை உயர்த்தித் திரிகின்றவர்களின் பெண்களும் தங்களது மார்பகங்களை மறைப்பதற்கு இந்த திருவிதாங்கூர் தர்ம பூமியில் உரிமையில்லை என்பதைத் தானே காட்டுகிறது.  அவர்களும் கலகம் செய்திருக்கிறார்கள்.  ஆனால் மேல் சாதி இந்துக்களின் (இங்கே வெள்ளாளர்கள்) ஆதிக்கத்தை அவர்களால் தகர்த்தெறிய இயலவில்லை என்பதும் உண்மை.  அவர்களுக்கு துணை நிற்பதற்கு அன்று பிரிட்டீஷ் (சென்னை) மாகாணத்தில் வாழ்ந்த நாடார் சமுதாயம் முன் வரவில்லை.  அது ஏன்? உங்கள் ஆராய்ச்சி வட்டத்திலிருந்து இது ஏன் விடுபட்டு போனது.  மாறாக அகஸ்தீஸ்வரத்து நாடார் குல பெண்கள் 18 முழச் சேலையால் அவர்களது உடலை, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை மூடியிருந்தனர் என்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கூறியிருப்பதன் நோக்கம்தான் என்ன?  சந்திரியநாடான், சாணாரநாடான் என்ற பிரிவினையை மீண்டும் நாடார் சமுதாயத்தில் உருவாக்குவதற்குத்தானே இந்த முயற்சி. கால்டு வெல்லார் கூறியிருப்பது போன்று, இவர்களுக்கு சிந்தித்துப் பார்ப்பதற்கான திறன் குறைவு என்பதால்தானே நீங்கள் இருவரும் இப்படியொரு கடைவிரித்துள்ளீர்கள்?
“மார்பை மூடாமல், கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருந்த ஒரு இளம் பெண்ணை எப்படியோ பார்த்து விட்டார் அய்யா.  அண்ணாவிபோல் எழுந்து அவள் பின்னால் போய், பிரம்பால் அவள் முதுகில் ஒன்று வைத்தார்… எத்தனை மட்டஞ்சொல்லியிருக்கேன்* என் முன்னையே மூடாம வந்திருக்கியே மக்கா”.

சூத்திரர்கள்
===========
இந்திய அரசாங்கத்தின் புதுக்கோட்டை மானுவலில் சொல்லப்பட்டது யாதெனில் வலங்கை மற்றும் இடங்கையை சார்ந்த தொழிலாலர்கள் மற்றும் கைவினைகலைஞர் என்ற இடங்கை வலங்கை பிரிவுகளில் உள்ளவர்களே சூத்திரர் என குறிப்பிடுகின்றது. வலங்கை இடங்கை பிரிவு இரண்டுமே சூத்திரர் தானாம் அரசாங்க அறிக்கை.
இந்த இடங்கை வலங்கை பிரிவுகளில் வீரர்கள் இல்லை ஆனால் இன்றை நாளில் பூஸ்ட்,ஹார்லிக்ஸ்,பெப்சி முதலிய வணிக மையங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்சர் செய்வது போல் தான் இந்த இடங்கையை சார்ந்த கம்மாளர்களும் வலங்கையை சார்ந்த செட்டியார்களும் வீரர்களுக்கு ஸ்பான்சர் செய்வர். அதையே இடங்கை படைவீரர்கள் வலங்கை படைவீரர்கள் எனப்படுவர். அந்த இரு வீரர்களும் சூத்திரர் அல்ல. சூத்திரரின் ஸ்பான்சரில் அரசருக்கு  பனி புரியும் வீரர்கள்.

வலங்கை இடங்கை பிரிவு இரண்டுமே சூத்திரர் என்கையில் வலங்கையைசத்திரியர் நாங்க வலங்கையில்  குடி சத்திரியர்னு சொல்லிகிட்டு திரிந்தால் அது அறியாமை.
(பொன்னீலன் – மறுபக்கம் – 2010 – பக்கம் – 232)
இதும் எதை காட்டுகிறது.  சாமித்தோப்பில் அய்யா முத்துக்குட்டி சாமியார் காலத்திலும் பெண்கள், இளம் பெண்கள் உள்ளடக்கம் மார்பகங்களை மறைக்காமல்தான் இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது அல்லவா?  தவிரவும் கன்னியாகுமரி ரயில்வே நிலையம் அருகில் திரு.குமரிஅனந்தனால் நிறுவப்பட்டிருக்கின்ற கலையரங்கை நீங்கள் இருவரும் சென்று பார்த்து வர வேண்டும்.  அங்கே, அய்யா முத்துக்குட்டிசாமியை அவரது தாயாரும், மனைவி பரதேவதையும் தொட்டில்பாடையில் சுமந்து திருச்செந்தூர் முருகன் சன்னதிக்கு செல்லுகின்ற காட்சியை ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தங்களது மார்பகங்களை மறைக்காமல் தான் செல்லுகின்றனர்.  முத்துக்குட்டிசாமி அவர்களின் காலம் கி.பி. 1808 – 1851 வரை ஆகும். அவர் காலத்திலும் அகஸ்தீஸ்வரத்து நாடார் குலப் பெண்கள் தங்களது மார்பகங்களை மறைத்திட இயலாமல்தான் இருந்துள்ளனர் என்பதை மேலே சுட்டப்பட்ட நிகழ்வுகள் சான்றளிக்கிறது.  இப்பொழுது கூறுங்கள் இவர்கள் எல்லாம் 18 முழச் சேலைகளைக் கட்டி, மாறாப்பு இட்டு தங்கள் மார்பகங்களை  மறைத்திருந்தனர் என்பது உங்கள் கற்பனை அல்லது முத்துக்குட்டிசாமியார் நாடார் அல்ல பனையேறிச் சாணான் என்று* கூறுவீர்களா? உங்களால் கூறுவதற்கு தெம்பு உண்டா? முதலில் திருவிதாங்கூரில் நிலவி வந்த சமுதாய நிலையை சரியாக கற்றாpந்துவிட்டு ஆய்வு நூற்களை எழுத முயற்சியுங்கள். பிரிட்டீஷ்காரர்கள் ஆளுகின்ற சென்னை மாகாணத்தில் காணப்பட்ட சமுதாய நிலையின் வரலாறை ஒப்பிட்டு எழுதுவது தவறானது ஆகும்.  அங்கே நாடார் பெண்கள் 18 முழ சேலையால் முந்தாணை வைத்துக் கட்டி தங்களது மார்பகத்தை மறைத்திருந்தனர் என்பது முற்றிலும் உண்மை.  நாடான் வீட்டுப் பெண்களும், சாணான் வீட்டுப் பெண்களும், பறையன் வீட்டுப் பெண்களும், வெள்ளாளன் வீட்டுப் பெண்களும், பிராமணன் வீட்டுப் பெண்களும் சுதந்திரமாக தங்கள் மார்பகங்களை சேலையால் மறைத்திருந்தனர் என்பதில் இரண்டு கருத்தில்லை.  அதை மிஷனறிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.  ஏனென்றால் அங்கேயும் ஆங்கிலேயர் ஆட்சி இருந்தது.  அதனால் தான் அந்த சுதந்திரம் அனைத்து பெண்களுக்கும் கிடைத்திருந்தது
பொதுவாக, தமிழகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் திருவிதாங்கூர் என்ற இந்து தேசத்தின் ஆட்சிமுறை, பண்பாடு போன்றவைகள் எத்தகையது என்று அறியாதவர்களாகத்தான் காணப்படுகின்றனர்.  இந்த வகையில் இந்த சவர்ணர்களின் அதாவது உயர் இந்து ஆட்சியாளர்களின் உடை அலங்காரங்கள்தான் என்ன?  என்பது இவர்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளது.  திருவிதாங்கூரில் “மேலாடை”, அல்லது “Upper cloth” என்பதை மலையாளிகள் “மேல்முண்டு” என்றே அழைக்கின்றனர்.  நாயர் பெண்கள் இன்றும் இந்த மேல் முண்டை சில சமயச் சடங்குகள் மற்றும் திருமணச் சடங்குகளில் கடைபிடித்து வருகின்றனர்.  இவர்கள் சாதாரணமாக மூன்று முண்டுகளை பயன்படுத்துகின்றனர்.  ‘உடுமுண்டு’ அதாவது உடுத்திக் கொள்ளுகின்ற முண்டு (வேஷ்டி – ஒற்றை அல்லது இரட்டை), மார்பு துண்டு, அதாவது மார்பகங்களை மறைக்கின்ற கச்சை போன்ற வேஷ்டி, அதற்கும் மேலாக தோளோடு தோளில் இட்டு மறைக்கின்ற “மேல்முண்டு” அதாவது அங்கவஸ்திரம் போன்ற வேஷ்டித்துண்டுகளாகும்.  நம்பூரிப் பெண்கள் பொதுவாக மார்புமுண்டு அணியாமல், மேல்முண்டால் மார்பகங்களை இலைமறைவு காய்மறைவாக போர்த்திக் கொள்வர்.  இதை சித்தரிக்கின்ற வகையில் வரலாற்றாசிhpயர் சங்கை எஸ்.சாமுவேல்மேற்றீற் அவர்களின் தர்மபூமி (Land of charity) 1870-யில் பக்கம் 30-ல் படம் ஒன்று தந்துள்ளார். அதை தமிழக வரலாற்று ஆசிரியர்களின்  தகவலுக்காகவும், தெளிவுக்காகவும் மறுபதிப்பாக இங்கே தரப்படுகிறது.  பார்த்து தெளிவுக்காகவும்கொள்ளுங்கள்
நம்பூதிரியும் அவர் மனைவியும்
இதுதான் “தோள்சீலை”யே (மேல்முண்டு) தவிர  தமிழ்நாட்டு அய்யரும், நாடாரும் எண்ணுகின்ற ‘தோள் சேலை அல்ல’.  “தோள்சீலைக்கலகம் – தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்’ என்ற புத்தக முன் அட்டையில் தரப்பட்டுள்ள வரைபடம் போன்று பெண்களின் சேலை (Saree) முந்தாணை அல்ல தோள்சீலை என்பதை உணர்ந்து திருத்திக் கொள்வது சிறப்பு.  இந்த அடிப்படை வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் அதை விமர்சிப்பது அறிவீனமல்லவா?
திருவிதாங்கூர் நாட்டு இராணிகள் கூட இந்த மேல்முண்டை (தோள் சீலை) அணிவது இல்லை.  இதை திருவிதாங்கூர் வரலாற்றை விரிவாக எழுதின நாகம் ஐயாவின் முதல் பாகத்தில் பக்கம் 520-ல் காணலாம்.  தவிரவும் இவருக்கு முன்பு (1878-ல்) திருவிதாங்கூர் வரலாற்றை அதன் தொன்மைக்காலம் தொட்டு எழுதிய திரு.பி.சங்குண்ணிமேனன் கூட ராணி கவுரிலெட்சுமிபாய் (பக்கம் – 362) மற்றும் ராணி பார்வதிபாய் (பக்கம் – 383) மற்றும் இளையராணி ரூக்மணிபாய் (பக்கம் – 389) போன்றோர்களின் ஆடை அலங்காரமும், கீழ்முண்டு, மார்பு முண்டு, மேல்முண்டு (Upper Cloth) என்றுதான் காணப்படுகின்றது.  இந்த முறைதான் உயர் சாதி இந்துக்கள் அன்று அணிந்து வந்த ஆடை அலங்காரம்.  இந்த முறையில் இழிவு சாதி இந்துக்களும், மதம் மாறின கிறிஸ்தவர்களும், ஆடை அணிக்கூடாது என்பது மரபு ஆகும்
நு}லின் 191-ஆம் பக்கத்தில் திரு. சிவந்தி ஆதித்த நாடான் மேல் ஆடையாக கோட்டையும், கீழ் ஆடையாக வேட்டியும் மற்றும் தலைப்பாகையுடன் காட்சி தருகிறhர். இவர் ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இவர் 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதில் வேறு கருத்திருக்க முடியாது.  இது சுமார் கி.பி. 1910-க்குப் பிறகேயாகும் என்று கருத வாய்ப்புண்டு.  இவருக்கு முன்பே, திருவிதாங்கூரில் அதுவும் தலித் சமுதாயத்தில் சீர்த்திருத்த கிறிஸ்தவத்தை தழுவிய முதல் தலித் குடும்பத்தில் உபதேசியாக பணியாற்றிய திரு.சி.மாசில்லாமணி அவர்கள் கோட்டும் கொம்பன் மீசையுமாகக் காணப்படுகிறhர்.  பார்க்க படம் 2. (Church History Travancore – by C.M. ஆகூர் – 1901 – பக்கம் – 1113).  இவர் திரு. C.M. ஆகூரின் தந்தை ஆவார்.  இவர் கி.பி. 1833-ல் பிறந்து, நாகர்கோவில் செமினறியில் கல்வி கற்று 1852 தொட்டு 35 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு 1898-ல் மறைந்தார்கள். எனவே திரு.சிவந்திஆதித்தன் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கோட்டு அணிந்தவர் என்ற பெருமை சுநஎ.சி.மாசில்லாமணிக்கு உண்டு. ஏற்றுக் கொள்ளுகிறீர்களா? அவரின் உருவப்படம் இங்கே தரப்படுகிறது
மாசில்லாமணி உபதேசியார் (1833 – 1898)
தவிரவும் 1864 நவம்பரில் நெய்யூர் மெடிக்கல் மிஷனில் ஒரு மருத்துவ கல்வி நிலையம் தொடங்கப்பட்டு அதில் ஏழு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் தலைப்பாகையுடன் கோட்டு சூட்டு அணிந்து கம்பீரமாக காட்சி தருகின்றனர்.  அந்தப் படத்தையும் இங்கே தரப்படுகிறது
இவைகள் எதைக் குறிக்கிறது என்றால் ஆங்கிலேய மிஷனறிகள் தென் திருவிதாங்கூரிலும், தென் திருநெல்வேலியிலும் கிறிஸ்தவப் பணியுடன் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் தொடங்கிய பிறகே சாணார் சமுதாயம் உட்பட கிறிஸ்தவ சமுதாயத்தவர்கள் கோட்டும், சூட்டும் அணியும் நாகரீகத்துக்கு மாறினர் என்பது வரலாறு.  அந்த வகையில் காயாமொழி நாடான் திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள் அணிந்திருக்கின்ற கோட்டு, ஏதாவது ஆங்கில மிஷனறி அன்பளிப்பாக அளித்ததுதான் என்பதில் சந்தேகமில்லை.  ஏனெனில் இந்தியாவில் கோட்டு சூட்டு தைக்கின்ற தையலகங்கள் அன்று இருந்ததில்லை.  அதற்கான வசதியும் இங்கே இல்லை. எனவே கோட்டு அணிந்தவர் நாடார்களில் இருந்தனர் என்பதும் அவர்கள் ஆட்சியில் நாகரீகத்தை மத வேறுபாடின்றி ஏற்றுள்ளனர் என்பதும் இதனால் ஊர்ஜிதமாகிறது.  இந்த நாகரீக மறுமலர்ச்சியை சாமித்தோப்பு முத்துக்குட்டி சாமிகள் கூட வரவேற்று தன் மக்களுக்கு அறிவுரை அளித்திருக்கிறார்
“… பொதுவாக நாடான்மாருக்கு அய்யாவை பிடிக்காது.  இந்த சாணாச்சாமி ஏற்றுக்காரர்களை ஊழியஞ் செய்யாதே, ஏட்டோலை சுமக்காதே, வரிகட்டாதே, மீன் தின்னாதே, பேய்களைக் கும்பிடாதே, வேதத்தில் சேராதே, ஆனா, வேதக்காரன் மாதிரியே நிமிர்ந்து நில்லு, என்று தூண்டி விடுகிறhன்…”.









(திரு. பொன்னீலன் – மறுபக்கம் – 2010 – பக்கம் – 244)
குறிப்பு்

சாணாச்சாமி :  சாமித்தோப்பு முத்துக்குட்டி சாமியார்.
மீன் தின்னாதே: மீன் தின்றால் அதுவழி புற்றுநோய் பரவுவதற்கு
வாய்ப்பு உண்டு என்பதை உணர்ந்த அவர் அதை
உண்ணவே வேண்டாம் என்றும் கூறியிருக்கலாம்.
தவிரவும் அய்யா ‘சொற்யாசிஸ்’ என்ற ஒருவித தோல்
நோயால் அவதிப்பட்டார்.  இந்த நோய் வந்தவர்கள்
மீன் சாப்பிடக் கூடாது.  அது சாப்பிட்டால் இந்த
நோயின் தாக்கம் அதிகமாகும்.  அதனால் இதை அவர்
அனுபவத்தின் வாயிலாக கூறியிருக்கலாம்
வேதத்தில் சேராதே

வேதக்காரன் மாதிரியே
நிமிர்ந்து நில்லு : சீர்திருத்த கிறிஸ்தவத்தில் சேராதே என்று பொருள்.
ஆனால் சீர்திருத்த கிறிஸ்தவன் மாதிரியே,
சவர்ணர்களால் உருவாக்கி மக்களை வருத்தி வந்த
சமுதாய சீர்கேடுகளை எதிர்க்கின்ற கிறிஸ்தவனைப்
போன்று நீயும் தைரியமாக அவர்களை எதிர்த்து நில்
என்பதாகும்.  இவர் இவ்வாறு சொல்வதற்கு முன்பே
பல்வேறு சீர்கேடுகளை கிறிஸ்தவர்கள் எதிர்த்து
களைந்து விட்டனர். அவைகளில் ஒன்றுதான்
பெண்களின் மார்பகங்களை குப்பாயத்தால் மூடி
மறைப்பது
இந்த அறிவுரையை ஐயா 1840-க்கு முன்பே கூறியதால், கிறிஸ்தவத்தின் நற்பண்புகளுடன் அவருக்கு அபிமானம் இருந்தது என்பது வெளியாகிறது
அய்யா முத்துக்குட்டியாரின் மதக்கோட்பாடு முற்றிலும் சீர்திருத்தக் கோட்பாடு என்று சொல்வதற்கு இல்லை என்றாலும், நிச்சயமாக அது சனாதன ஆகம கோட்பாடு முறை இல்லை என்று முடிவாகக் கூறலாம்.  அவரது பல போதனைகள் சீர்திருத்தக் கிறிஸ்தவக் கொள்கை போன்று உள்ளது.  இத்துடன் இந்து சமய நெறிமுறைகளையும் கலந்து அவரது போதனைகளை வகுத்துள்ளார் என்பது தெள்ள தெளிவு
முதல்நிலைச் சான்றாக அவர் சிலை வழிபாட்டைத் தவிர்த்ததிலிருந்து சீர்திருத்த கிறிஸ்தவத்தை அவர் முன் மாதிரியாக எடுத்துள்ளார் என்று காணலாம். அடுத்தது பூசை முறைகளில் அவர் செய்த இந்து முறைத் தவிர்ப்பு.  சிகப்புப் பூக்கள், சிகப்பு ஆடைகள் தவிர்ப்பு, திருநீற்றால் சைவக் குறியிடுதல், சாமி வலம் போன்றவைகளைத் தவிர்த்ததும், கிறிஸ்தவ முறைதான்,
“பொன்னுமக்கா எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.  தாலி அறுக்காதே, கோலம் குலைக்காதே எண்ணு.  அவன் செத்ததுக்கு நீயா பொறுப்பு… எல்லோரும் கேட்டுக்கிடுங்க. புருஷனைப் பறிகொடுத்தது சங்கடம்தான். அதுக்காக பொம்பளையள அலங்கோலப்படுத்தியது கடவுளுக்கு ஏற்காத கொடுமை.  பூட்டிய தாலியை நீக்கக்கூடாது.  கேக்குவு.




(பொன்னீலன் – மறுபக்கம் – இரண்டாம் பதிப்பு – 2010 – பக்கம் – 233)
இதுவும் கிறிஸ்தவர்களின் கோட்பாடு அல்லாமல் சனாதன கோட்பாடா?
அய்யாவழித் திருமணத்தில் கூட ஆகம முறைகளை களைந்துவிட்டு சீர்திருத்த முறைகளை புகுத்தியுள்ளார் அய்யா.  மாப்பிளையும் பொண்ணும் கீழ்திசை நோக்கி உட்காருவதை தவிர்த்துவிட்டு தென்திசை நோக்கி உட்காருவது சீர்திருத்த முறைதானே?  மணமேடையில் மந்திரம் ஓதுவதற்குப் பதிலாக :
“விவிலியம் நூலை வைத்து வழிபடும் முறையைப் பின்பற்றி, அய்யா வழியினர் ‘அகிலத்திரட்டினை’ வைத்து வழிபடத் துவங்கினர் என்றே எனக்குத்  தோன்றுகிறது.  அய்யாவழித் திருமண முறையில் பாடப்படும் பாடல்முறைகள் எல்லாமே கிறிஸ்தவ முறையின் தாக்கம் என்றே கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை”.



(தமிழ்த்துறைப் பேராசிரியர் இரா. ஆண்டி – என் அனுபவங்கள் – 2002, பக்கம் – 50)
இதற்கு மேலும் சான்று தேவையா ஐயர் அவர்களே*  மேலும் கேளும்,
“என்னை யீடேற்றி இரட்சிக்கும் பெம்மானே


மன்னே பிதாவே மாதாவே யென்தாயே”       (அகிலம் 10 – 409 – 410)
“இன்றுமுதலெ ல்லோரும் இகபரா தஞ்சமென்று

ஒன்று போ  லெல்லோரும் ஒரு புத்தியாயிருங்கோ
காணிக்கையிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ…”
(அகிலம் 12,519, 521)
தவிரவும் பிராமண சமயத்தில் காணப்படுகின்ற திருநீறு பூசுதல், குங்குமப் பொட்டு வைத்தல் போன்ற சம்பிரதாயங்களையும் இவர் களைந்தார்.  இவைகள் அனைத்தும் சீர்திருத்த கிறிஸ்தவத்தின் எச்சங்கள்தனே? ஆகையால் அய்யாவழியை சீர்திருத்த இந்து சமயம் என்று கருதுவதிலும் தவறில்லை.  அது இந்து சமயத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதையும் காணலாம்.  ஆனால் இப்பொழுது அய்யாவழியினர் சிறுகச் சிறுக பிராமண கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு தான் வருகின்றனர்.  சிறிது காலங்களுக்குப் பிறகு ஆரிய தாக்கத்தால் அய்யாவின் சமாதியில் கண்ணாடியையும், குத்து விளக்கையும் அப்புறப்படுத்திவிட்டு சனாதன கோட்பாட்டு கடவுள் ஒருவர் நிலை கொள்வார் என்பதற்கான அறிஞறிகள் இன்று காணப்படுகின்றன. இல்லையென்றhல் நாடார் பதிக்கு அத்வானியும், ஜெயலலிதாவும், இராம.கோபாலனும் மற்றும் இந்துத்துவசாமிகளும் வந்து போவதின் சூட்சுமம் என்ன? என்பதை இப்போது புரிந்து கொள்ளும் தன்மையில் அய்யா வழியினர் இல்லை என்பது உண்மை
அது போன்ற காயாமொழி நாடார்களுக்கு கிறிஸ்தவம்பால் ஈர்ப்பு இருந்தமையால்தான் மேற்கத்திய உடையான ‘கோட்டை’ திரு. ஆதித்திய நாடான் அணிவதற்கு முதற்காரணம்.  அதை நிச்சியமாக கிறிஸ்தவ மினறிமார்கள்தான் இவருக்கு அளித்திருப்பர்.  ஒருவேளை அன்பளிக்காக
நாடார்கள் நாடாண்டவர்கள் என்று கூறுகின்ற இத்தகைய ஆய்வானர்கள், எந்த நாட்டை இவர்கள் ஆண்டார்கள், அந்த நாட்டின் எல்கைகள் தான் என்ன?  என்று எவரும் குறிப்பிடுவதில்லை.  குறிப்பிட அவர்களால் இயலவில்லை.  பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் நாடார்கள் என்று வைத்துக் கொண்டால்கூட, அவர்களது கொடி அடையாளம் நாடார்களுக்குப் பொருத்தமானதாக இல்லை.  “மீனை”க் கொடி அடையாளமாகக் கொண்டமையால் பாண்டியர்கள் ‘மீனவர்கள்’ என்று இப்பொழுதுக் கூறி வருகின்றனர்.  அவ்வாறிருக்க நாங்கள்தான் பாண்டிய மன்னர் பரம்பரை என்று கூறித் திரிவதில் உண்மை எதுவுமில்லை
பாண்டிய நாட்டில் “சாணார்கள்” தீண்டத்தகாதவர்களாகவே நடத்தப்பட்டு வந்தனர் என்று வரலாறு உரைக்கிறது.  பேராசிரியர். கே.இராசைய்யன் எழுதுகிறhர்:-
“As the rulers extented their support to the as cendancy of caste distinctions, the society came to be divided into caste Hindus and the untouchables… worse still the communities the Pallis, the Parayar, the Chakkilyar, the Shanar and who supported the society through their labour, were condemned as untouchables and unapprochables.  The irony was that while they were a detested lot, the food and services that they generated through their manual labour were not considered as polluted.”
(History of Tamil Nadu, Past to Present – 1995 – Page 106)
பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் சாணார்கள் அல்லது நாடார்கள் என்றால் மன்னர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1263 – 1310 – AD) காலத்தில் நிலவிய சாதி முறையில் ஏன் இவர்கள் தீண்டத் தகாதவர்களாகவும், அருகில் வர உரிமை இல்லாதவர்ககளாகவும் (untouchables and unapproachable)   உயர் இந்துக்கள் கருதினர்?  அன்று நாடார்கள் இல்லை சாணார்கள் மட்டும் தான் இருந்தனரா?  சாதி வரிசையில் இவர்கள் பள்ளர், பறையர் மற்றும் சக்கிலியர்களுக்குப் பிறகுதானே வைக்கப்பட்டிருக்கின்றனர்.  அவ்வாறிருக்க நாடார்கள் (சாணார்கள்) எந்த நாட்டை ஆண்டனர்?
தவிரவும், பாண்டிய நாட்டு மக்கள் ஆடை அணிவதிலும் அரை நிர்வாணமாக இருந்தனர் என்று வரலாறு சான்று பகருகிறது
“The garments of the inhabitants were not only simple but also scanty.  This could be expected in a hot country as Pandyamandalam was.  In the opinion of Marcopolo there were no tailors too.  He described the people, whether they were princes or soldiers as going about naked.  Obviously this was because they went about half naked without knowing how to make a shirt or blouse…”
(History of Tamil Nadu – Past to present – Prof: K. Rajayyan, M.A., M.Lit., A.M., Ph.D., – 1995 – Page 107 – under the heading ‘the Pandyas of Madurai’)
அய்யரே! இப்பொழுது சொல்லும்! காயாமொழி திரு. சிவந்தி ஆதித்த நாடானுக்கு “கோட்டு” யார் கொடுத்தார் என்று?  இந்த ஆதித்த நாடான் குடும்பமும் சேரநாட்டுக்காரன் ஆகும்.  அவர்களுக்கு சிறப்பை உருவாக்கியவனும் சேர மன்னன் என்று கருதுவதற்கு இடமுண்டு.










“The Thenthirupperai Thiruppanai Malai’ composed in the seventeenth century, tells about the endowments made by a Cheraking Veerakerala Athithan to the Mahara Nedung Kulaikaathar Temple at Thenthiruperai and informs the temple honours given to the descendants of the Maharaja, who were living in Thenthiruperai.  The descendants of the Athithan Maharaja enjoyed the honour of flagging of the temple car festival by symbolically touching the ropes of the temple car”
(Thoothukudi District Gazatter Vol. –I, 2007 – by Govt. of Tamil Nadu – Page 236)
தவிரவும்,
“ஐப்பசி மாதத்தில் சுபப்பிரமணியனுக்கு (திருச்செந்தூர் முருக ஆலயம்) திருக்கல்யாண உற்சவம் நடக்கும்போது முதல் நாளில் மாப்பிள்ளை வீட்டுச் செலவாகத் திருமாங்கல்யம் செய்து கொடுத்தல், கல்யாண விருந்தும், ஊரடங்க பிராமண போஜனங்கள் ஆதித்த நாடார்களால் நடத்தப்படும்… ஆவணி மாதத் திருவிழா நாட்களில் திருவாங்கூர் மகாராஜாவால் நடத்தப்படும் உற்சவத்தின் இரண்டாம் சேவை ஆதித்த நாடார்களுக்குரியது”



(மரிய அந்தோணி நாடார் – சான்றேhர் வரலாறு – பக்கம் 184)
இந்த ஆதித்தன் வழி வந்தவர்களாக காயாமொழி ஆதித்தன் குடும்பம் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆயினும் இவர்களுக்கு உறுமல்கட்டும், உடைவாளும் அணிவிக்கும் ஜமீன்தார் பட்டமளிப்பு சடங்கு செய்வதற்கு உரிமையில்லை.  அந்த உரிமை நாடாத்தி திருவழதி நாடார் குடும்பத்துக்கு மட்டும் உரியதாகும்.  இந்த குடும்பம் நாடாத்தி ஜமீன் குடும்பம் என்பதால் அவர்கள் இந்த அந்தஸ்தை பெற்றுள்ளனர்.  நாடாத்திகள் என்றால், “நட்ட பாண்டியர்களோடு சினேகம் கொண்ட அத்தியர்” என்பதைக் குறிக்கின்ற நட்டாத்தியர் பாண்டிய சோழ கலப்பு இனத்தவர் ஆவர்.  இவர்களைத் தவிர மற்ற நாடார்கள் எல்லோருக்கும் உறுமல்கட்டும், உடைவாளும் (உறைக்கத்தி) அணியும் உரிமையில்லை.  அத்தகைய உரிமையைக் கொள்ளுகிறவர்கள் ‘கள்ளன்’ ஆவர்.  தங்களை சத்திரியர்கள் என்று கூறிக் கொண்டு ‘பூனூல்’ அணிந்தவர்களும் இந்த சமுதாயத்தில் உண்டு.  இவர்கள் ஆரிய – சந்திரியர்களாக இருக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட விவரச்சுவடி கூறுகின்றது. தவிரவும் இவர்களை ‘நிலமைக்காரர்கள்’ என்றும் கூறுகின்றனர்.  ‘நிலமைக்காரர்கள்’ என்றால் பெரும் நிலம் உடையவர்கள் (Feudal barons) என்று கருதலாம்.  இது அன்று எல்லா சமூகத்திலும் காணப்பட்டது. திருவிதாங்கூரில் இவர்களை “எட்டு வீட்டுப் பிள்ளைகள்” மற்றும் “மாடம்பிகள்” என்றும் கூறினர்.  மக்களிடத்தில் இருந்து வரி பிரிக்கவும், குறிப்பிட்ட இடங்களுக்கு பிரபுகளாகவும் இருந்து அரசனுக்கு தரகன்களாக நின்று வரி பிரித்து வந்தனர்.  இவர்களை மன்னர் மார்த்தாண்டவர்மா முடித்து வைத்தார். இவர்களைப் போன்றே பாண்டிய நாட்டில் காணப்பட்ட நிலமைக்காரர்கள்.  நாஞ்சில் நாட்டில் பறையர்களின் நிலமைக்காரர்கள் “சாம்பான்” என்ற பட்டப் பெயரில் காணப்பட்டனர்.  இன்று அவர்கள் பறையர் சமுதாயத்தில் உயர் குலத்தான் என்று கருதப்படுகின்றனர்.

“The Nilamaikarars lived like barons and adopted several customs and practices of Kshatriyas.  They used to wear sacred thread, used Sandal paste, sacred ash and Kumkum and used to wear dotis with Panchakachcham… They do not merely mean that they were the original kings of the soil, but they are descended from the Ariyan – Kshatriyars”
(Thoothukudi District Gazetter – Govt. of Tamil Nadu – 2007 – Page 240)
ஆரிய வருணாசிரம் அடிப்படையில் ஆரிய மக்களை பிராமணர் (Priest class) சத்திரியர் (நாட்டுப் பாதுகாவலர் – Kings) வைசியர் மற்றும் சு{த்திரர் என்று நான்கு வர்ணங்களாக வகுக்கப்பட்டுள்ளனர்.  அதில் சத்திரியர்கள் இரண்டாம் நிலையில் இருந்தனர்.  ஆனால் தமிழர்களில் அரசன் (King), அர்ச்சகன் (Priest) வெள்ளாளன் (Agriculturist) கைகோலர் (Artisans) என்று வகுக்கப்பட்டிருந்தனர்.  பூனூல் அணிந்து கொண்டால், பிராமணன் அல்லது மன்னர் ஆகிவிட முடியாது
இன்று பூனூல் அணிகிற சமுதாயங்கள் பல உள்ளன.  விசுவகர்மாக்கள் அனைவரும் (கல்லாசாரி, தச்சசாரி, கொல்லன், பொற்கொல்லன் போன்றோர்) பூனூல் அணிகின்றனர்.  இவர்களைத் தவிர சட்டிபானை செய்கின்ற குயவன், பட்டாடை நெய்கின்ற சவுராஷ்டிரன் போன்றோரும் பூனூல் அணிகின்றனர்.  இவர்கள் அனைவரும் சத்திரியர்களா, அல்லது பிராமணர்களா?  என்ன ஐயரே பூனூல் அணிந்த சாணாரை உமது இனத்தான் என்று ஏற்றுக் கொள்வீரா?
“In the Sanhgam and Medieval literature, or in the inscriptions engraved prior to 16th Century, there is no mention of the word Shanar; Also the word Nadan is not referred as a caste name, Nadars claim that they, being one the earliest and largest community to exiot in Tamil Nadu, they are canors, referred profusely in literatures and inscriptions”…
“In 1910, P.V. Pandiyan, son of Sattampillai of Nazarath requested to register the Shanars as Kshatriya Shanrdrors.  The Madras Govt. in 1921 census, recorded, them as Nadars and their occupation as Lords of the soil”
(Ibid – Pages 239 and 241)
எனவே நாடார் அல்லது நாடான் என்ற சொல்லாக்கம் 1921-ல் ஆங்கில அரசால் சாணார்களுக்கு அளித்த பெயராகும். அதையும் ஒரு கிறிஸ்தவனின் வேண்டுகோளைத் தொடர்ந்து கிடைத்த ஈவு ஆகும். ஆனால் இந்த தமிழ் குலத்துக்கு ‘சாணான்’ என்ற பெயர் எப்படி வந்தது என்று யாரும் ஆய்வு நடத்தவில்லை.  அது குறித்து ஐயத்திற்கிடமின்றி எவரும் சொல்லவுமில்லை
தமிழகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்களின் ஆட்சி கி.பி மூன்றாம் நூற்றhண்டில் களப்பிரர்களால் முடிவுக்கு வந்தன.  தென்னகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்கள் பிராமணீயத்தின்பால் அதிக கவர்ச்சி கொண்டு அதை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக செயலாற்றிக் கொண்டிருந்தனர். இந்த பிராமண ஆதிக்கத்தை கி.பி. 250 வாக்கில் முடிவுக்கு கொண்டு வந்தனர் கனப்பிரர் என்ற குல மன்னர்கள். இவர்கள் ஆரியத்தை எதிர்த்து திராவிடக் கொள்கைகளை அமல்படுத்தினர்.  இவர்கள் ஆட்சி காலத்தில் பவுத்தமும், சமணமும் தென்னாட்டில் ஆதிக்கம் கொண்டது. பவுத்தர்களும், சமணர்களும் தென்னாட்டில் பல பள்ளிகளையும், கல்விச்சாலைகளையும் நிறுவி, மக்களுக்கு புதிய கலாச்சாரத்தை உருவாக்கித் தந்தனர்.  இவர்கள் ஆட்சி காலத்தில் ஏராளம் சமண கோயில்களும், பவுத்தவிகரர்களும் நிறுவி, கல்விச் சாலைகள் அமைத்தனர்.  தமிழ் மொழியில் பதினென்கீழ்கணக்கு நு}ற்களும், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலைப் போன்ற பெருங்காப்பியங்களும் அவர்கள் காலத்தில் உருவாயின.  திருக்குறளும் இந்த காலத்தில்தான் எழுதப்பட்டது.  இவர்களின் ஆட்சி கி.பி 575-ல் முடிவுக்கு வந்தது.







(மயிலை சீனி வெங்கடசாமி – களப்பிரர் ஆட்சியில் தமிழகம் – 2001 – பக்கம் – 6)
சேரநாட்டில் சமணக்கோயில்கள் பெருமளவில் காணப்பட்டன.  களப்பிரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு அவைகள் ஆகமக் கோயில்களாக மாற்றினர்  ஆரியப் பிராமணர்கள்.  அவ்வாறு மாற்றப்பட்டவைகளில் முக்கியமானவைகள் நாகர்கோயில் நாகரம்மன் கோயில்; வெள்ளிமலை முருகன்கோயில், திருநந்திக்கரை சிவன்கோயில், சிதறhல்மலைக்கோயில், மார்த்தாண்டம் வெட்டுமணி சாஸ்தா கோயில் போன்றவைகளைச் சொல்லலாம்.  நாகபட்டிணத்தில் இருந்த பவுத்த விகாரை திருமங்கையாள்வார் தலைமையில் இடித்து நொறுக்கி, அதில் இருந்த தங்கத்தால் ஆன முழு உருவப் புத்தர் சிலையை உடைத்து, விற்று காசாக்கி அப்பணத்தைக் கொண்டு _ரங்கத்தில் அரங்கநாதருக்கு கோயில் அமைத்த வரலாறு ஐயர்வாளுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.  சுமார் 3000 சமணர்களை கமுகு மரத்திலேற்றி கொன்று குவித்தனர் இந்த பார்ப்பனர்கள்.  எனவே களப்பிரர் காலத்திலும், அதற்குப் பிறகும் சமணத்தை கடைபிடித்தவர்களை “சமணர்கள்” என்றனர்.  இவர்கள் ஆகம சமயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.  ஆனால் களப்பிரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் ஆரிய சமயம் அரங்கத்திற்கு வந்தது.

“Their exit from political scene represented the return of Brahmanical system, marked by vedic rites, agraharas, caste system, untouchability, neglect of Tamil and persecution of Jains and Buddhist”
(History of Tamil Nadu, Past to Present – Prof: K. Rajayyan, 1995 – Page – 51)
இதற்குப் பிறகு சமணர்கள் என்பவர்களைக் கொச்சைப்படுத்தும் முகமாக பார்பனர்கள் “சாணார்கள்” என்று விளிக்கத் தொடங்கினர்.  “சமணர் காசு” சாணாரக்காசு ஆனது, சமணக்காவு (கணவாய்), சாணார் கணவாய் ஆயிற்று.  அதன் எச்சமாக இன்றும் இந்து நாடார்களிடையே சில சமண கோட்பாடுகள் சிலவற்றைக் கடைபிடிக்கின்றனர்.  பெரிய தெய்வங்களை வணங்குவதைத் தவிர்த்து சிறு தேவதைகளை வணங்குவதும் இவர்களின் கோட்பாடானது.  மங்கலநாண் கட்டுவது, இருப்புக் குழியில் இறந்தவர்களை சமாதி வைப்பது போன்றவைகள் யாவும் இதன் எச்சங்கள் ஆகும்.  ஐயரே சரிதானே?
தமிழக அரசால் 2002-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மாவட்ட விவரச்சுவடி (ழுயணநவவநநசள) யில் மேலும் பல விவரங்கள், நாடார்களைக் குறித்து தரப்பட்டுள்ளன.


“But, as for as Tamil Nadu is concerned there is not a separate community of kshatryars.  Tolkapier equates the word Anthanor to Brahmins, Arasar to Kshtriyars, and vellalas to Sudras though he retains the word Vanigar (Vaisyas) as it is (Govt. of Tamil Nadu, Thirunelveli District Gazetteers – Vol – I.  Page 322)
இதனடிப்படையில் ஆராய்ந்தால் தமிழகத்தில் “சத்திரியர்” என்று ஒரு சாதி இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.  தவிரவும் “நாடார்கள்” என்ற சொல் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.

“Formerly the Nadars were called as Shanars is considered a derogatory term.  There is no mention about this people in the Sangam literature.  But the Nadars have given an explanation that the word San or (rhd]nwhh]) has changed into Shanar.  They were considered as toddy tappers from the Palymyra tree …. (Ibid Page – 333)
இதன் அடிப்படையில் பனை ஏறுகிறவர்கள் அனைவரையும் “சாணார்” என்று வகைப்படுத்த முடியுமா?  முடியவே முடியாது*  பனை ஏறுதல் ஒரு தொழில்.  யார் வேண்டுமானாலும் இத்தொழிலைச் செய்யலாம்.  செய்வதற்கு உரிமை உண்டு
“இந்தத் தொழில் ஒரு தனிப்பட்ட சமுதாயத்துக்கு மட்டும் உரிமைப்பட்டது என்று செய்யப்படுவதல்ல.  தமிழகத்தில், கள்ளர், பணிக்கர், இடையர், கவரைகள், கவுண்டர், கடையர், மகமதியர் போன்றோரும், முதலி, பிள்ளை, நாயிக்கர் என்ற அந்தசுள்ளவர்களும், மலையாள நாட்டில் ஈழவர், தண்டான்கள் போன்றவர்களும் இத்தொழிலில் ஈடுபட்டு வாழ்கின்றனர்.  மதுரை சார்பு நீதிமன்றத்தில் O.S.33,1898 நவம்பர் தாவாயில் மேலே கூறப்பட்ட பல சாதியினர் நீதிமன்றத்தில் ஆஜராகி, தாங்களும் கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.  செங்கோட்டைத் தாலுகாவில் சில பிரதேசங்களில் குறவரும், ஊத்துமலை மற்றும் _வைகுண்டம் தாலுகாவில் சாயர்பூரம் அருகில் பள்ளரும், திருச்செந்தூர் தாலுகாவில் இடையார்குளம் பகுதியில் நவிதரும் பனைத்தொழில் செய்து கள் இறக்குவதாக “நாடார் குல வரலாறு” வாயிலாக உறுதிப்படுத்துகிறது.”


(நாடார் சரித்திரம் (மலையாளம்) – காஞ்சிரம் குளம் கெ. கொச்சு கிருஷ்ணன் நாடார் – 1956 – பக்கம் – 83)
எனவே ஐயர்வாளும், நாடாரும் எண்ணுவது போன்று, பனைத்தொழில் செய்கின்ற ஏனையோரை “சாணான்” என்று வகைப்படுத்த இயலாது.  வேறு வழியின்றி, ஏழ்மையின் காரணமாக பல நாடார்கள் பனைத்தொழிலை ஏற்றிருக்கலாம்.  பனைத் தொழிலை ஏற்றதால் அவர்கள் “சாணாரும்”, கள்ளத் தராசு, கலப்படம், ஆக்கறைத் தொழில்களைச் செய்து பணம் சேர்த்து சமுதாயத்தில் உயர்ந்த ‘சாணான்’ தன்னை ‘நாடான்’ என்றும், சத்திரிய – நாடான் என்றும் விலாசமிட்டுக் கொண்டால் ‘சாணான்’ இழிவு அகன்று விடும் என்று எண்ண வேண்டாம்.   சாணான் என்றும் சாணான்தான்.  இந்தப் பெயர் இழிவானது என்று கருதி, 1921-ல் நாசரேத் மூக்குப்பேரி சட்டாமபிள்ளையின் மகன் திரு.P.ஏ.பாண்டியனின் வேண்டுகோளையும் நாடார் மகாஜன சங்கத்தின்  வேண்டுகோள்களையும், ஏற்று சென்னை மாகாண அரசு (ஆங்கில அரசு) “நாடார்” என்ற பெயரை சாணாருக்கு அளித்தனர் என்பதே வரலாறு. இந்த அரசு ஆணைக்குப் பிறகுதான் “சாணான்” “நாடான்” ஆனான்.  நாம் இதை உணர்ந்து கொண்டாலும் அடுத்தவன் இதை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றhன்
“குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் வாழும் சாணார் என்று ஆரம்பத்திலும் பின்பு நாடார் என்றும் அழைக்கப்பட்ட மக்களையும் வெள்ளாளர்கள் மோசமாகவே நடத்தினார்கள்”.


(நாஞ்சில் நாடன் (க. சுப்பிரமணியன்) – நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை – 2003 – பக்கம் – 85)
இந்த ஆசிரியர் “நாஞ்சில் நாடன்” என்ற புனைப் பெயருடன் எழுதுகிறார்.  அதனால் இவரை ‘நாடார்’ இனத்தான் என்று ஐயரும், நாடாரும் எண்ணி விட வேண்டாம்.  இவர் நாஞ்சில் நாட்டு மக்கள் வழி வெள்ளாம்பிள்ளை ஆவார்.  ‘நாடார்’ என்று மட்டும் எழுதிவிட்டால் அவர் நிம்மதி அடையமாட்டார்.  உங்களை குத்திக்காட்டி எழுதினால்தான் அவர்களின் எழுத்தில் நிறைவு பெற்று விட்டதாக நினைப்பு.   இதை புரிந்து கொள்வதற்கு இயலாத நாடார்களையே (சாணார்) கால்டு வெல்லார் “மந்த புத்திக்காரன்” என்ற உண்மையைச் சொன்னார். அதற்கு அவர் மீது உங்களுக்கு கோபம் ஏன்?  இந்த நூலை எழுதும்போது, திரு.கணேசனை முதல் ஆசிரியராகவும், திரு.இராமச்சந்திரனை இரண்டாம் ஆசிரியராகவும் போட்டிருக்கலாம்.  ஏன் போடவில்லை.  முன்னவர் ஐயர், இரண்டாமவர் “நாடார்”.  மேல்நிலை, கீழ்நிலை என்று பிரித்து தான் தாழ்ந்தவன் என்று எடுத்து இயம்புகின்ற நிலையைத்தான் “மந்த புத்தி” என்று கால்டுவெல் சொன்னாரேத் தவிர நாடார்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு அல்ல என புரியாதது தங்களின் தாழ்வு  மனப்பான்மையைத்தானே சுட்டுகிறது.  இந்த தாழ்வு உணர்ச்சியே ‘மந்த புத்திக்கு’ அடையாளம் ஆகும்
கன்னியாகுமரி சாமித்தோப்பு அய்யா முத்துக்குட்டி சாமியாரை ‘நாடார்’சாமி என்றுதானே அனைவரும் விலாசமிடுகின்றனர்.  பூஜிதகுரு பாலபிரஜhபதி அடிகளார் அவரை “ஐயா – வைகுண்டர்” என்று விலாசமிடுகிறhர்.  ஆனால் இவர் யார்?  உங்கள் பகுத்தாய்வின் அடிப்படையில் இவர் ‘சாணான்’ ஆவார்.  ஏனெனில் இவர் பனையேற்றை தன் தொழிலாகக் கொண்டிருந்தார். இவர் தந்தையார் பொன்னுமாடனும் பனைத்தொழில் செய்தவர் ஆவார்.  இவரது மனைவியார் திருமதி. வெயிலான் (வயலாள் என்ற கிறிஸ்தவப் பெயரை வெயிலாள் ஆக்கினர் என்று நான் கூறினேன்) யாரும் மறுக்கவில்லை.  இவர்கள் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடிக்கு அருகாமையில் உள்ள ஆணைக்குடியில் இருந்து பஞ்சம் பிழைப்புக்காக தென் திருவிதாங்கூர் வந்து பூபாண்டையார் பனந்தோப்பில் குடியமர்ந்து பனைத்தொழில் செய்தார்.  அந்த தம்பதியினருக்கு கி.பி. 1809-ம் ஆண்டு முத்துக்குட்டி பிறந்து, வளர்ந்து தந்தையைப் போன்று இவரும் பனைத்தொழில் செய்தார்.   பிற்காலத்தில் இவர் தீட்சை பெற்று மகான் முத்துக்குட்டி ஆனார்.  அதனால் அவரை ‘சான்றோன்’ என்று பக்தர்கள் அழைத்தனர்.  எனவே சாணான் தான் ‘சான்றோன்’ என்றாகின்றானர்.  ஆனால் ‘சான்றோன்’ என்பதன் பொருள் வேறு.  ஐயர் நினைப்பது போன்று அது ஒரு சாதிப் பெயர் அல்ல*  காண்க திருக்குறள்
“ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் தன் மகனைச்



சான்றேhன் எனக் கேட்ட தாய்”              (குறள் – 69)
‘தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய் அவனைப் பெற்றெடுத்த பொழுதை விட பெரிது மகிழ்வாள்’ என்பது இதன் பொருள் ஆகும்.  அதுவும் அறிவுடையோர் சொல்வதுதான் தாய்க்கு மகிழ்ச்சி தரும்.  ஐயர்வாள் போன்றேhர் சொன்னால் அது மகிழ்ச்சி தருமா?  நாடாரின் தாய் மகிழமாட்டாள்.  திருவள்ளுவர் இங்கே தவறு செய்துவிட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது. நாடான், நாடாண்டவன், நாட்டார் என்று பொருள்படும்படியாக அவர் கூறவில்லை என்று திரு.கணேசன் சாடவில்லையே. அதை இவ்வாறு திருத்தி எழுதலாமே*
“ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் தன் மகனை


நாடான் என கேட்ட தாய்”
என்று மாற்றியமைக்கலாம்.  சரிதானே நாடாரே*
இப்பேர்பட்டவர்களையே கால்டு வெல்லார் ‘மந்த புத்திக்காரன்’ என்றா ரேத் தவிர அறிவுடையேரைப் பற்றி அல்ல.  அறிவுடைய ஐயரை கால்டு வெல்லார் மந்த புத்திக்காரன் என்று சொல்லவில்லையே*  ஏன் அவரும் சேர்ந்து கால்டுவெல்லைச் சாடுகின்றனர்?
திருவிதாங்கூரில் நாயர் சமுதாயத்தை குறித்து ஆய்வாளர் திரு.றா   பின் ஜெப்றி இவ்வாறு கூறுகிறhர்.


“No Nair knows his father” (Robin Jeffy – The decline of Nair Dominence 1979 – Page 108)
உண்மையும் அதுவே.  திருவிதாங்கூரில் மருமக்கள்த் தாய முறையை ஒழிப்பதற்கு முன்பு வரை உடனே நாயர்கள், குறுப்புகள், மேனோன்கள், பிள்ளைகள், தம்பிகள், தங்கச்சிகள் போன்ற நாயர் சமுதாயப் பிரிவுகள் கொதித்தெழுந்து றாபின் ஜெப்றியை தாக்குவதற்கோ, தரக்குறைவாக பேசுவதற்கோ, எழுதுவதற்கோ முன் வரவில்லை.  ஆனால் சாணார்கள் “மந்தபுத்திக்காரர்கள்” என்ற உண்மை பிறவிக்குணத்தை கண்டு, உணர்ந்து எழுதிய கால்டுவெல்லாரை தாக்குவதற்கும், தரக்குறைவாக பேசவும், எழுதவும் துணிந்த சாணார்களை ‘மந்தபுத்திக்காரன்’ என்று அல்லாமல் அறிவாளி என்றா     கூற முடியும்.  நாடார்களின் தோற்றத்தைக் குறித்து எழுதுகிறவர்கள், இவர்கள் பத்திரகாளியின் புதல்வர் என்றுதானே எழுதுகிறhர்கள்.  அதைச் சொல்லி பெருமைப்பட்டும் கொள்ளுகின்றனர்.  ஆனால் சாதித்தோப்பு அய்யா முத்துக்குட்டிச் சாமியார் என்ன கூறுகிறhர்.  பத்திரகாளி குழந்தைகள் பெறுவதற்கு தகுதியற்றவள், அதாவது அலி என்று தானே கூறுகிறhர்.  இதைக் கவனத்தில் கொள்ளாமல், காளிபுத்திரர் என்றுதானே சொல்லுகிறhர்கள்
“… கண்ணான காளி காரிகையே நீ கேளு

தரித்துப் பிறக்கத் தகாதே மாகாளி
மரித்துப் பிறக்காத மாகாளி யேயுனக்கு…”
(அகிலத் திரட்டு அம்மாணை – இரா. அரிகோபாலன் 2000 (இரண்டாம் பதிப்பு) பக்கம் 68
இதிலிருந்து காளி மக்கள் எனப்படுகின்ற ஏழு பேரும் தாய்ப்பால் அருந்தாதவர்கள் என்பதால் அவர்கள் மந்தபுத்திக்காரர்கள்தானே*  தாய்ப்பால் குடித்து வளராத பிள்ளைகள் பொதுவாக மந்த புத்திக்காரர்களாக இருப்பார்கள் என்பது மனிதவியலார் கூறுகின்ற உண்மை.  என்ன அய்யரே சரிதானே? ஒரு வசதி படைத்த நாடான் நடத்துகின்ற IAS அக்கடமியில் கிறிஸ்தவர்களுக்கு பிரவேசம் கிடைப்பது அரிதிலும் அரிது என்பதையும் நாம் உணர வேண்டும்.  கிறிஸ்தவ மிஷனரிகளின் கல்வித் தொண்டைப் பற்றி மேலும் விவரமாக அறிய வேண்டுமென்றhல் நாகர்கோவிலில் இருந்து ஜுலை 2011-ல் வெளிவந்த “சமுதாய சிந்தனை” என்ற சஞ்சிகையைப் படித்து தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள். (செய்தி தினகரன் – நாகர்கோவில் – 01.06.2011 பக்கம் 12)
சவுதி அரேபியா இந்தியாவின் காலனியா?  இவர்களையெல்லாம் எந்த கிறிஸ்தவப் பாதிரிகள், அல்லது இசுலாமிய அமைப்புகள் கடத்தி அங்கே பணிக்கு இழுத்துச் சென்றனர்.  பிழைப்பு நாடித்தானே இவர்கள் அங்கே சென்றனர்.  ஆங்கில காலனிகளில் வேலைக்காக அழைத்துச் சென்றவர்கள் அங்கே நிரந்தர குடியுரிமை பெற்று வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர் என்பது ஐயருக்கும், நாடாருக்கும் தெரியாததல்ல.  குறை சொல்ல வேண்டும்.  அதுவே ஆய்வாளர்களின் நோக்கம் (Hypocrisy)
முதன் முறையாக மிஷனறிப் பெண்மணிகள் (மீடு ஐயரின் மனைவியும், மால்ட் ஐயரின் மனைவியும்) பெண்களின் மார்பகங்களை மறைத்து ஒரு ஒழுக்க முறையை ஏற்படுத்துவதற்காக மட்டும், ரவிக்கை என்ற டடிடிளந தயஉமநவ-டை வடிவமைத்து, கையால் தைத்துக் கொடுத்து அணியச் செய்தனர். இந்த ரவிக்கை உயர் சாதியினர் அணிகின்ற ரவிக்கை போன்றல்லாமல், பிறில் வைத்த மாடல் ஆகும். இந்த நிகழ்ச்சியைக் குறித்து ஆய்வாளர்கள் எழுதும் போது,
“சார்லஸ் மால்ட், இவர்கள் அணிவதற்கு ஏற்ற ரவிக்கைகளை தையல் இயந்திரம் மூலம் ஒரே நேரத்தில் பெரிய எண்ணிக்கையில் தைப்பதற்கு ஏற்பாடு செய்தார். இத்தகைய ரவிக்கை அணியத் தொடங்கிய பெண்டிற் அதற்கு மேல் தம்முடைய புடவையின் முன்றhணையை வழக்கம் போல இடப்பக்கத்து தோள் மீது அணிந்து கொண்டனர்”
இந்த தகவலை படிக்கின்ற பாண்டி நாட்டு நாடார் குலப் பெண்கள் தங்களைப் போன்று திருவிதாங்கூரிலும் பெண்கள் முழுமையாக ஆடைகள் அணிந்து வந்துள்ள என்ற தவறான செய்தியை உண்மையென நம்பிவிடுவர். ஏனெனில் ஆய்வாளர்களுக்கு திருவிதாங்கூரில் உயர் குலத்தோன் பயன்படுத்திய ரவிக்கையும், மேல்முண்டும் (தோள்சீலை) எவ்வாறானது என்று அறிந்திருக்கவில்லை என்பதை முன்பே கூறினோம்.  சேலைக்கும், சீலைக்கும் வேறுபாடு தெரியாத இவர்கள் குப்பாய ரவிக்கைக்கும், ரவிக்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதும் இவர்களுக்குத் தெரியாது.  உங்கள் அனைவரது பார்வைக்காக அப்படங்களை இங்கே Reprint போடப்பட்டுள்ளது. பார்த்து தெளிவடைந்து கொள்ளுங்கள்
இந்தச் செய்தியால் மிஷனறிகள் “Readymade” கடைகள் வைத்து அதில் கிறிஸ்தவ சாணாட்டிகளுக்கு விற்பதற்கு எனப் பெரிய அளவில் ரவிக்கைகளும், சேலைகளும் இருப்பு வைத்திருந்தனர் என்ற மாயையை இந்து நாடார்களிடம் உருவாக்குவதற்கே இந்த புரட்டைக் கூறுகின்றனர்.  ரவிக்கை அணிவதற்கான உரிமையை கர்னல் மன்றோ (Resident) 1813-ல் வழங்கப்பட்டு கிறிஸ்தவப் பெண்கள் அன்று முதல் பகிரங்கமாக அணிந்து கொண்டனர்.  இதில் கவனத்திற்குரிய விஷயம் என்ன என்றhல், துணிகள் தைப்பதற்கான தையல் இயந்திரத்தை ஆங்கிலேயரான சிங்கர்துரை 1851-ல் தான் கண்டுபிடித்து சீர்படுத்தினார்.  (Vide page 162 of siscobook – inventions that changed the world)   இது இவ்வாறிருக்க 1822-ல் மால்டு ஐயரும் மீடு ஐயரும் தையற் கடையை எப்படி தொடங்க முடியும். பாப்பாரப்பிள்ளை நண்டு பிடிக்கிற கதையாகிவிட்டது இவர்களின் ஆய்வு
மிஷனறிகள் அல்ல குப்பாயத்தை வடிவமைத்தது.  அவர்களின் மனைவிகளே இதை உருவாக்கி கையால் தைத்துக் கொடுத்தனர். இதை உருவாக்கிக் கொடுப்பதற்கான காரணத்தை அவர்கள் கூறும் பொழுது







“… that the Shanars and such other castes women, as have embraced Christianity ought to wear an upper cloth for the sake of decency when they go to church, the fairs, markets and similar places, and they were instructed to do so and that it ought to be ordered agreeably to Christianity…”  No doubt at this fag end of the nineteenth century it passes strange a government should make restrictions and laws as to the domestic economy and dress of individuals; but the Travancore Govt. was so unenlightened in those days that it made such indecent restrictions regarding the dress of inferior women”.  (C.M. Augur – Church History of Travancore – 01.10.1902 pages 781, 782)
இது எதைக் குறிக்கிறது?  திருவிதாங்கூரில் இழிவு சாதியினர், குறிப்பாக நாடார் பெண்களுக்கு ஒழுக்கமுறை வேண்டி மார்பகங்களை மறைப்பதற்கு உரிமை இல்லை என்பதைத்தானே சுட்டுகிறது. இதற்காகவே உகந்த மேலாடைகள் தைப்பதற்கு நாடார் பெண்களுக்கு ஊசித் தையல் கலையை பயிற்றுவித்துள்ளனர்  மிஷனறிகள்
“… Mrs. Mead taught them plain sewing, spinning, knitting etc., Mrs. Mault taught them crochet and embroidery work and in 1821 introduced  the Pillow lace”
(Ibid – Page 766)
இவைகளையல்லாமல் மிஷனறிப் பெண்கள் தையல் இயந்திரங்களை எடுத்து  வந்து, துணிகளை மொத்தமாகத் தைத்து ரெடிமேடு (Readymade) ஆடைகள் விற்பனை அங்காடிகளை வைக்கவில்லை. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா, அய்யரே நாடாருக்குத்தான் மரமண்டையென்றால் உமது அறிவு எங்கே போயிற்று?  உமக்கு தலையில் களிமண் என்று தோன்றுகிறது
ஒரு நாட்டிற்கு ஒரு கலாச்சாரம் உண்டு என்றாலும், கேரள நாட்டில் பல அருவருப்பான கலாச்சாரங்கள் உண்டு. குறிப்பாக பார்பனரிடம் காணப்படுகின்றவைகள் மிகவும் அருவருப்பானது கேளும்
“இதைவிடக் கொடுமையான ஒரு பழக்கமும் இவர்களிடத்தே (நம்பூதிரி பிராமணர்கள்) காணப்படுவதாக ‘ஆபேடூபே’ என்ற வரலாற்று ஆசிரியர் விவரிக்கிறhர்,






“Among these same people, again, is another distinct caste called Namboodiri, which observes one abominable and revolting custom.  The girls of this caste are usually married before the age of puberty, but if a girl who has arrived at an age, when the sign of puberty are apparent, happenes to die before having had intercourse with a man, caste custom rigorously demands that the inanimate corpse of the deceased shall be subjected to a monstrous connection.  For this purpose the girls’ parents are obliged to procure by a present of money some wretched fellow willing to consummate such a disgusting form of marriage for were the marriage not consummated the family world consider itself dishonoured”
(Abbi J.A. Dubois – Hindu manners, custom and ceremonies – 1906 – Page 16)

இப்பேர்பட்ட ஈனச் செயல்களைப் புரிகின்ற உயர் இந்து என்று பெருமை பாராட்டுகின்ற நம்பூதிரிப் பிராமணர்கள், கேரளத்தில் தாழ்ந்த சாதிப் பெண்கள் மார்பகங்களை மறைத்து மானமாக வாழ்வதற்கு அனுமதித்திருப்பார்களா?  பெண்கள்  இன்னொரு வெறிச் செயலைக் குறித்து கூறுகிறhர்கள்.
“An old Brahmin attending a feast in a temple caught hold of a young Nair girl, full grown with bare blooming breast and caressed her in front of all others present”
(T.K. Ravendran – Assantand Social Revolution in Kerala – 1933; as quated by R.N. Yesudhas in “A people’s revolution in Travancore” – Page 6)
இத்தகைய ஈன பண்பாடுகளை நாகரீகமாகக் கொண்டுள்ள திருவிதாங்கூரில் மக்களை அரை நிர்வாணிகளாக வைத்திருந்ததில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.  இதிலிருந்து நாடான் ஆனாலும் சரி, சாணான் ஆனாலும் சரி அனைவரும் இவர்களுக்கு முன் ஒன்று போன்றவர்களே.  அதனால், எந்த கீழ் சாதிப் பெண்களும் 18 முழம் சேலையைக் கட்டி, முந்தாணையுடன் இங்கே வாழ்ந்தனர் என்பது கட்டுக் கதைதான்.  பிரிட்டீஷ் மாகாணத்தில் இவைகள் ஒருவேளை சரிதான். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.  ஆனால் இங்கேயும் நாடார் பெண்கள் சேலையால் மார்பகங்களை மூடிக் கொண்டு வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரம் என்ன?  நிழற்படம் ஏதாவது உண்டா?    தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராசர் ஆட்சி காலத்தில் கூட பெண்கள் மார்பகங்களை மறைப்பதற்கு ரவிக்கை அல்லது குப்பாயம் அணியாமல் காணப்பட்டனர் என்பதற்கு சான்று உண்டு
ஜுலை 2011-ல் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு மலராக வெளிவந்த நாடார் மக்கள் ஜோதியில் 34-வது பக்கத்தில் ஒரு போட்டோ படம் பிரசுரமாகியுள்ளது.  அதில் மூதாட்டி ஒருவர் பெருந்தலைவரிடம் ஏதோ பிராது சொல்வதாகத் தெரிகிறது.  அந்த பெண்மணி ரவிக்கை அணியாமல் நிற்பதைக் காணலாம்.  திரு.காமராஜரின் ஆட்சி காலம் 1954 முதல் 1963 வரையாகும். இவர் காலத்திலும் பெண்கள் ரவிக்கை அணியவில்லையெனறால் அவருக்கு 150 வருடங்களுக்கு முன் பெண்கள் நிலை எவ்வாறு இருந்திருக்கும்
மிஷனறி மீடு அய்யர் 1820-ல் நாகர்கோவிலில் ஒரு அச்சகம் (Printing press) உருவாக்கினார்.   திருவிதாங்கூரில் இதுவே முதல் அச்சகம் ஆகும்.  அரசுக்குக் கூட அன்று சொந்தமாக அச்சகம் இல்லை.  தஞ்சை தரங்கம்பாடியிலிருந்து இந்த அச்சகத்தையும், அதற்குத் தேவையானப் பொருட்களையும், தொழிலாளர்களையும் இவர் கொண்டு வந்தார்.  அச்சடிப்பதற்கு கடுதாசி (Paper) தேவை.  இவைகளை மீடு அய்யர் கள்ளத்தனமாக கடத்திக் கொண்டு வந்து, அரசுக்கு வரி ஏய்ப்பு உருவாக்கிவிட்டார் என்று ஐயரும் நாடாரும் குறைபட்டுக் கொள்கின்றனர்.  வரி ஏய்ப்பு, கலப்படம், கள்ளத்தராசு, கடத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்கள் யார் செய்கிறார்கள் என்பது நாடார் அறியாததல்ல.  ஆனால் மீடு அய்யர் வரி ஏய்ப்பு செய்தாரா? என்று ஆவணங்களை சரிபார்த்து எழுதுவதற்குக் கூட புத்தியில்லாத மரமண்டைகளான இந்த பீற்றை ஆய்வாளர்களின் கவனத்திற்காக இதை எழுதுகிறோம்; ஆனால் சான்றோர்களிடம் செல்லுபடியாகாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளும் ஓய்*பேராயர் கால்டுவெல்லாரைக் குறித்து தோள்சீலைக் கலகத்துடன் சார்புபடுத்தி எதற்காக எழுத வேண்டும். அவர் திருவிதாங்கூரில் மிஷனறிப் பணிபுரிவதற்கு வரவில்லை.  பிரிட்டீஷ் இந்தியாவில் தூத்துக்குடி பக்கம் உள்ள இடையன்குளத்தை தனது தலைமையிடமாக்கி தமிழ்மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் ஆவார்.  அவர் நாடார் சமுதாயத்தைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்குடனே” அவர்கள்“dull headed Shanars” என்று எழுதவில்லை.  இவர்கள் உயர் சாதிக்காரனை மிஞ்சும்படியான புத்தி கூர்மையில்லாதவர்கள் என்ற உணமைக் கருத்தை முன் வைத்து, இவர்களுக்கு கல்வி மூலம் அறிவைத் தந்து உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படி எழுதினார். ஆனால் இவரது கணிப்பு இன்று உண்மைதான் காணப்படுகிறது ஆனால் இந்நாள் அ.கணேசனுக்குக் கூட தெரியவில்லையே*  ஏன்?  ஐயருக்கு கீழ்வாள்தானே இவரால் பிடிக்க முடிகிறது.  மேல்வாளை நாடார் ஐயர் கையில் தானே கொடுத்திருக்கிறார்.  இதன் பொருள் என்ன?  மேல் சாதிக்காரனை மிஞ்சுகின்ற புத்தி கூர்மை கீழ் சாதிக்காரனுக்கு இல்லை என்பதைத்தானே திரு.கணேசன் செய்கை வாயிலாக நாம் காண்கிறோம்.


மருதம் தொலைக்காட்சியின் திடீர் சித்தர் குருசாமி...முதல்..........மறுப்புகளத்தின் புனைவுகள் வரைக்கும்............
வேந்தர் யார்? மூவேந்தர் யார்? என கொந்தளித்த ஆசீர்வாதம் பாதிரியார் முதல்
இன்றைய மீண்டெழும் மள்ளர் வரலாறு? பாண்டியர் வரலாறு மீட்பு? ...என்று புனைவு வரலாறு எழுதும் அனைவருக்கும் ...

பள்ளர் தான் பாண்டியராம் ஏன் என்றால் பள்ளாங்குழி ஆட்டத்திற்கு பாண்டியாட்டம் என்று பெயராம்.

பள்ளனாகிய பாண்டியன் ஆடிய ஆட்டம் தான் பாண்டியாட்டம் 
என்று ஆராய்சியில் மூழ்கி முக்குலத்தோரை தவிர சகல சாதியரும் பள்ளர்தான் என நூல் எழுதி

"அறத்தில் மண்டிய மறப்போர் பாண்டியர்" என்று விளங்கிய பாண்டியர்களை பள்ளாங்குழி ஆடும் பெண்டியர் என விமர்சித்துபாண்டியர்களுக்கு இழிவை ஏற்படுத்திய செந்தில் ப(ம)ள்ளர் வரை.

சகலசாதியையும் தூற்றும் இந்த கூட்டத்தின் வேலைகள் என்ன இந்த பதர்கள் எப்படி மூவேந்தர் என்பதை இவர்கள் காட்டிய ஆதாரம் என்ற (செல்லாத) சீட்டை கொஞ்சம் சரிபார்க்கவும்.
இதில் என்ன ஆதாரம் உள்ளது என எவரும் கவனிக்கவில்லை.அது ஆதாரம் தானா?
இவர்கள் காட்டிய ஆதாரத்தில் நிஜமாக என்ன உள்ளது என அனைவரும் சற்று கவனிக்கவும்.


அவதாரம்(ஆதாரம்) #1
1)தென்காசி கோயிலும், தென்பாண்டி வேந்தர்களும்-posted by கடுங்கோன் பாண்டியன்.

 திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலத்தின் அருகே பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது தென்காசி. இங்கே பாண்டியர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இக்கோயிலின் ஆய்வினூடாகவும் பள்ளகளே பாண்டியர் என்று அறிய முடிகிறது. பராக்கிரம பாண்டியன் மெய்க்கீர்த்தியில் ” சிவநெறி யோங்கச் சிவாற்சனை புரிந்துமருது ராற்கு மண்டப மமைத்து” (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.89 )எனவரும் அடிகளில் மருதூரார்களான மள்ளர்கட்கு - பள்ளர்கட்கு மண்டபமமைத்த செய்தி இடம் பெற்றுள்ளது. மேலும் இக்கோயிலில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இங்க பாண்டியன் பள்ளருக்கு சிவார்ச்சனை புரிந்த மருதூரார்க்கு மண்டபம் அமைத்து என வரும் கல்வெட்ட்டில் இருந்து பள்ளன் தான் பாண்டியனாம். 

இது தான் பள்ளர் இன வரலாற்றுப் புனைவாளர்களின் மிகப் பெரிய பித்தலாட்டம். அந்த நிஜக்கல்வெட்டில், மருதூர் அர்ச்சகர்கள் யார் அந்த கல்வெட்டு கூறும் செய்தி என்ன என இங்கு கவனிக்கவும்.......................................................................

"கிபி.1422.முதல்.1463.ம் ஆண்டுவரை பாண்டிய மன்னராக அரசாண்ட அரிகேசரி. பராக்கிராம பாண்டியரின் மெய்கீர்த்தியின் செய்தி இது.

"கயலினையுலகின் கண்ணென திகழச் சந்திரகுலத்து வந்தவதரித்து முந்தையோர் தவத்து
முறையென வளர்த்து.
 அந்தனர் அனேகர் செந்தழல் ஓம்ப சிவார்ச்சனை புரிந்து மருதூரவர்க்கு
மண்டபமமைத்து சண்பக வனத்துச் சங்கரர் தமக்கு மண்டபம் அமைத்து மணிமுடிசூட்டி விழாவணி நடத்தி விசுவநாதருக்கு தென்காசிப் பெருங்கோயில் செய்து மறுமை குறுதியும் மேம்பட நல்கி விற்றிருந்தருளியஸ்ரீஅரிகேசரி பராக்கிராம பாண்டிய தேவர் யாண்டு".

இங்கு குறிப்பிடும் மருதூர் அர்ச்சகர்கள் "முந்தையோர் தவத்து முறையென வளர்த்த அந்தனர்"...........என்றும்

..............கடைசியில் பராக்கிரம பாண்டிய தேவர்" என்ற முழுக்கல்வெட்டு செய்தியையும் முழுங்கி...........

அந்தணர்களுக்கு பாண்டிய தேவர் வழங்கிய செய்தியை பள்ளர்கள் தங்களுக்கு ஏற்றார்போல் திரித்து அதையே மருதூரர் என்று பள்ளரை குறிப்பிட்டதாக மாற்றி கூறிக்கொண்டுள்ளனர்.

இங்கு கல்வெட்டில் கூறப்பட்ட அந்தணர்களும்  பள்ளர்கள் தான் என்று கூற வருகிறார்களோ?.......இது தான் பள்ளர்கள் பாண்டியர்கள் என்ற ஆதாரமாம்..........இப்படி ஒரு பொய்யுரைக்க கொஞ்சம் கூட 
நாக்கூசவில்லை.........நாப்பிளக்க பொய்யுரைத்தல் என்பது இது தான்.இப்படித்தான் எல்லா ஆதாரமும் இருக்கின்றது......

அதேப்போல் தொடர்வோம் அடுத்த நகைச்சுவைக்கு.

அவதாரம்(ஆதாரம்) #2
2)சங்கரன் கோயிலும், பள்ளர்களின் தேர்த் திருவிழாவும்-posted by கடுங்கோன் பாண்டியன்.

முதலில் பள்ளர்கள் வலைதளத்தில் நம்மக்கள் வாதப்பரதி வாதங்களில் கோபத்துடனே ஈடுபடுவது படு முட்டாள்தனமான செய்கை. அதாவது இவர்கள் என்ன ஆதாரத்தை காட்டுகிறார்கள் அது ஆதாரமா? அல்லது புதிய அவதாரமா? என தெளிவாகக் கவனியாமல் கோபத்தை மட்டும் காட்டுவது வேடிக்கை தான். வீடு பூட்டியுள்ளதா? திறந்துள்ளதா? என கொஞ்சம் கூட உற்று நோக்காமல் அவன் கூறுவது என்ன என்பதைத்தான் பார்ப்போமே.

சோழ,பாண்டிய கல்வெட்டுகளில் சில ஆச்சர்யமான கல்வெட்டுகள் உள்ளது. அதாவது சோழன் ஒருவன்
மான்முகம் கொண்ட கொம்புள்ள அரக்கனை கொன்று ஈராயிரம் சிவ பிராமணர்களை காத்து நாஞ்சில் நாட்டில் குடியேற்றியதாக ஆதாரப்பூர்வமான கன்யாகுமரி கோவில் கல்வெட்டு ஒன்று உள்ளது.அதைப்போல் இந்திரமண்டலத்தில் பாண்டியன் விருந்தினனாக சென்று அங்கு தேவேந்திரன் மகன்கள் நால்வரை இழுத்து வந்ததாக கல்வெட்டு கூறுவதாக பல ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

அதைப்போல் இலங்கை பத்துதலை அரக்கனை சிரம்கொண்டவன் என்று சோழன் மற்றும் பாண்டிய மன்னர் செப்பேடுகளிலும் வருகின்றது. அப்படியானால் இருவரும் ஸ்ரீ ராமன் வழி வந்தவர்களா? இது அரசர்களின் தற்பெருமையால் மிகைப்படுத்தப்பட்ட,கடவுள்களோடு தம்மை இணைத்து கூறிக்கொண்ட மிகையான புகழ்ச்சி செயல்கள் ஆகும்.

இங்கே பள்ளர் கூறும் கதையை பார்போம்.

(அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.14-15 )

மற்றுமொரு கல்வெட்டில் (கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்ப்பக்கம் உள்ள கல்வெட்டு) ” விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள் திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள் தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன் துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும் சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம் மகிழ்ந்து இரும் என்று சேரனும் சோழனும் வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல் விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும் பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும் ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான் நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப் பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன், அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப் பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும் வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம் பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக் கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு 2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும் கட்டளையிட்டு நடக்கிற காலத்தில் பறையர் தங்களுக்கு இந்த வரிசை உண்டென்று நடப்புவித்தார்கள். ஆனபடியினாலே ஐந்து சாதிக்கும் பிள்ளை என வேந்தலிலிருக்கும் அனுமக் கோடி அடிச்சாலும் (வாகைகுளம்) குட்டிக் குடும்பனும் அல்ல கர்த்தாகுடும்பனும், கூட்டிக் கொண்டு சமூகம் ஏறி விண்ணப்பித்துக் கொள்ள ஆதி பூர்வ ராஜாக்கள் கொடுத்த பட்டயம் பார்த்துப் பறையர்களுக்கு உண்டான வரிசை நன்மைக்கு மூன்று கால் பந்தலும் ஒரு சிலம்பும் ஒரு கொடுக்கும் ஒத்த மாராப்பும், ஒரு பந்தமும் கிளப் பாவாடையும் மஞ்சியில் தண்டியக் கொம்பில்லாத வீடும் துன்மைக்குக் கட்டணமும், பட்டடப் படிக்கு கட்டளையிட்டோம். குடும்பிகளுக்கு குதிரைக்குடையும் இட்டு இந்த இரண்டு கோட்டை விதைப் பாடும் கொடுத்து இந்த வரிசைப் பரிகாரம் கட்டளை இடுவித்தோம். இதற்க்கு அதிகம் பண்ணினவர்கள் கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற தேசத்திலே போலாவார்களாகவும்” ( தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D - 3226 , 432 /1914 ) என்று திருநெல்வேலி -சங்கரன் கோவில் - கரிவலம் வந்த நலூரிக் கோயில் கல்வெட்டுகள் குறித்துள்ளன. (தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D - 3226 , 432 / 1914 )"

இங்கே கூறும் தமிழ் வழக்கை கவனியுங்கள்...................
"சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு இருக்கின்ற காலத்திலே"
"ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான் நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப் பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்[வரியவன்], அக்கசாலை, (இளந்தாரியன்)[இளந்தாரி] என்று வரிசைப் பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு வெட்டி"

"பந்தக்காலும் துன்மைக்கு 2 தேரும் பஞ்சவன் விருந்தும் ....[ஏன் இடையில்...என்ன ஆச்சு?.............. கானோம்]. . . . .18 மேளமும் கட்டளையிட்டு"

"மூன்று கால் பந்தலும் ஒரு சிலம்பும் ஒரு கொடுக்கும் ஒத்த (மாராப்பும்), ஒரு பந்தமும் கிளப் பாவாடையும் "[ஏன் ரெண்டு ஜாக்கட்டு நாலு லுங்கியும் கொடுக்க வேண்டியது தானே"]

"இதற்க்கு அதிகம் பண்ணினவர்கள் கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற தேசத்திலே
போலாவார்களாகவும்” ( தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D - 3226 , 432 /1914 )"
[சிக்குனாண்டா சில்லுவண்டு].................................
...................இது முதலில் கல்வெட்டே கிடையாது...........இதில் வரும் செய்திகள் இன்றைய வழக்கு தமிழே...........கல்வெட்டு செய்திகள் கிடையாது.
...........................................................................
இது செப்பு பட்டய செய்திபோலத்தான் தெரிகிறது.....................இதன் கடைசியில் வரும் "கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற தேசத்திலே போலாவார்களாகவும்”..
.................................

..............இது முழுக்க முழுக்க தஞ்சை மன்னன் சரபோஜி மற்றும் சேதுபதி மன்னர்கள் பட்டயத்திலேயே
பிற்பாடு 18-ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் இசுலாமியருக்கு எதிராக[பசு புலால்] உண்பதை மறைமுகமாக விமர்சித்த வரிகளே யாகும்
....இந்த வரிகள் பிற்பாடே..............எனவே இதில் வருவது கல்வெட்டு செய்திகள் என நம்ப இடமில்லை.................
ஆனால் சில புனைவு எழுத்தாளர்கள் இந்திரன் மகன்களை பாண்டியன் சிறையெடுத்த கல்வெட்டு உள்ளதாக கூறுகின்றனர்.

உண்மையில் அந்த செப்பு பட்டயத்தில் என்ன தான் கூறியிருக்கிறார்கள் என பார்ப்போம்

அதில் சேர,சோழ,பாண்டியரை தேவந்திரன் என கூற வில்லை. அதாவது சேர,சோழ,பாண்டியர் இந்திரனை காண அவன் நாட்டுக்கு சென்றனர் அதில் பாண்டிய மன்னன் உக்கிர பெருவழுதி கோபம்கொண்டு தேவேந்திரன் குடும்பத்தாரையும் அவன் நாலு(4) மகன்களையும் இழுத்து வந்தான் என்று தான் கூறுகிறது.

அவர்களை வாரிசாக்கவில்லை கொத்தடிமையாக உழுதொழிலில் ஈடுபடுத்தினான்.
இந்த்ரனுக்கு ஜெயந்தன் என்ற மகன் இருந்ததாக புராணம் கூறுகிறது அவனை தவிர தனியாக நாலுமக்கள் இருந்ததாக ஆதாரமில்லை. அதுவும் இந்திரன் தன் மகனுக்கு வஜ்ரம்,வில்,அஸ்திரம்,தேர் கொடுப்பதற்கு பதில் கதலி விதை,பனை விதை,சென்நெல் கொடுத்தனுப்பினானாம். உன்மையில் அவர்கள் யார்?அவர்கள் இந்திரன் மகன் தானா?

பாண்டியனின் தனிச்சிறப்பு:

பாண்டியன் இந்திரனின் முடியை உடைத்து அவனை வீழ்த்திய சந்திர வம்சத்தவன்.இதற்கு பரிசாக அவனது ஆரத்தை பெற்றவன்.வேல் எறிந்து இந்திரன் மற்றும் வருணனின் சதிச்செயலை முறியடித்து மதுரையை காத்தவன் என புராணம் கூறுகின்றது.
சோழனின் தனிச்சிறப்பு:
முசுகுந்த சோழன் இந்திரனை வீழ்த்தி இந்திரப்பட்டம் புனைந்து இந்திரனாக அமர்ந்தவன்.பின்பு தேவரும் மூவரும் கேட்க இந்திரனது பதவியை அவனுக்கே விட்டு கொடுத்தவன்.சோழனின் லைடன் செப்பேட்டில் இந்திரனை சிறைப்பிடித்த ரகு வம்சத்தில் தோன்றிய ரவி குலத்திலகமென புகழ்பெற்றவன்.

நிஜ செய்தி இது தான்:

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கீழ்க் காஞ்சியிலிருந்து நாற்பத்தொண்ணாயிரம்(41000) வேளாண்குடிகளைப் பாண்டி நாட்டிற் குடியேற்றினர் என்றும் தெக்கத்தூர், சுப்பிரமணியவேளார் என்பாரிடம் உள்ள ஒரு ஒலைச்சுவடியில் குறித்திருக்கிறது. ஆதொண்டைச் சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து வெள்ளாளர்களைச் சோணாட்டில் குடியேற்றினர் என்றும், இதில் தேவேந்திர பள்ளன் மற்றும் தேவேந்திரப் பறையன் முதலிய தேவேந்திரன் மகன்கள் உண்டு.இன்னும் இரண்டு மகனார்கள் யார் என தெரியவில்லை.

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி நாலு(4) மகன்கள் அல்ல நாற்பத்தொன்னாயிரம் இந்திரன் மகன்களை தொண்டை நாட்டில் மட்டுமல்ல அவன் சிறை எடுத்த நாடு எது தெரியுமா? எல்லா
வேளாளர்களுக்கும் பூர்வீகமான கங்க நாடு என்றழைக்கப்படும் கர்நாடக நாடு.
கங்க மன்னன் தன்னை இந்திரனாக கூறிக்கொள்வான்.இவனது முத்திரை தேவேந்திரனின் வாகனமான யானையாகும்.

இவனது முன்னோர்கள் கங்கை கரையில் வேளாண்மையில் ஈடுபட்டவர்கள்.
கங்கநாட்டின் மன்னர்களின் சிலர்,
Western Ganga Kings (350-999) Konganivarman Madhava (350 - 370) Madhava (370-390) Harivarman (390-410) Vishnugopa (410-430) Madhava III Tandangala (430-469) Avinita (469 - 529) Durvinita (529 - 579) Mushkara (579 - 604) Polavira (604 - 629) Srivikrama (629 - 654) Bhuvikarma (654 - 679) Shivamara I (679 - 726) Sripurusha (726 - 788) Shivamara II (788 - 816) Rachamalla I (816 - 843) Ereganga Neetimarga (843 - 870) Rachamalla II (870 - 907) Ereganga Neetimarga II (907 - 921) Narasimha (921 - 933) Rachamalla III (933 - 938) Butuga II (938 - 961) Marulaganga Neetimarga (961 - 963) Marasimha II Satyavakya (963 - 975) Rachamalla IV Satyavakya (975 - 986) Rachamalla V (Rakkasaganga) (986 - 999) Neetimarga Permanadi (999) Indravarman (?-893) Devendravarman IV (893-?) Vajrahasta Anantavarman (1038-?)

இந்த மேலை கங்க மன்னரில் இந்திரன்,தேவேந்தரன், மல்லன் என பட்டங்கள் உள்ளதை கவனிக்கவும்.மேலை கங்கரின் சின்னம் யானை(ஐராவதம்) இது இந்திரனின் வாகனமான ஐராவத்தை(யானை) ஒத்தது.
வடுக பள்ளர் 
==============

பள்ளர்கள் தங்களை வடுக பள்ளர் எனவும் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் எனவும் பழனி கோவில் செப்பேட்டில் தங்களை கொணர்ந்து பழனிக்கு குடியேறியது பழனி நாயக்கர்கள் தான் என குறிப்பிட்டுள்ளனர் 


சளுக்க காலாடிகள் என்ற தலைப்பில் நஞ்சுண்டா சாமி என்ற கன்னட காலாடியர் எழுதியது.
2013/10/chalavadi-chalukyas-by-m-nanjundaswami.html
இதில் புலிகேசி என்பவன் புலையர் கேசியாம் கங்கரும் சளுக்கரும் விவசாய குடும்பத்தில் தோன்றினராம்.
There was a king called Polaveera (இதில் புலையவீரா என்ற கங்க மன்னன் இருந்ததாக கோலியர் என்ற கன்னட பள்ளர்கள் கூறுகின்றனர்)(Lord or Hero of land; Holeya) among the Ganga Kings. He was one of the sons of the Durveeneeta (495-535AD); the other son was named Mushkara. The Polaveera King granted Palachchoge village (EC. IX (1990) 537 AD, sixth century, Tagare village inscription, Hasan district, Belur taluk, page no. 472). 2. Pollabbe (mother of land, goddess of land) of NaguLas built the Basadi; a jain shrine (SII. XVIII, 315, 859-60, Ranibennur, Haveri district page no. 420). 3. Pratāpashāliyumappa hollagā(vunda)na guna prbhāvam (the influence of the powerful chief of Holla (Holeya or Poleya) village). (B. K. No. 108 of 1926; BK. 51, 1155) 4. There is an evidence of a Polaveera of Nolambas for having attacked the king Pruthvipati Didiga of Ganga dynasty. A brief synopsis of the ongoing discussion:
இதை வைத்து கங்கர்கள் பள்ளர்கள் எனக்கூற முடியாது அவர்கள் கீழ் இருந்தவர்களே பள்ளர்கள்.இதற்கு ஆதாரம்.

Castes and Tribes of Southern India: Volume III—K

  1. www.gutenberg.org/files/42993/42993-h/42993-h.htm   Cached
    Project Gutenberg's Castes and Tribes of Southern India, ... Kalti (expunged).—A degraded Paraiyan is known as a Kalti.
கர்னாடக மைசூரின் பகுதியிலே காலாடி(பள்ளன்) தான்  ஊர் தோட்டி:


In a note on the Kulwadis, Kulvadis or Chalavadis of the Hassan district in Mysore, Captain J. S. F. Mackenzie writes * that " every village has its Holigiri as the quarter inhabited by the Holiars is called outside the village boundary hedge.
The Toti or Kulavadi (he who directs the ryots), always a Holaya, is a recognized and indispensable member of every village corporation. In his official position he the village policeman, the beadle of the village community, the headman’s henchman: but in the rights and privileges which yet cling to him we get glimpses of his former estate, and find proofs that the Hoilayar were first to establish villages. All the castes unhesitatingly admit that the Kulavadi is (de jure) the owner of the village. If there is a dispute as to the village boundaries, the Kulavadi is the only one competent to take the oath as to how the boundary ought to run and to this day a village boundary dispute is often decided by this one fact- if the Kulavadis agree, the other inhabitants of the village can say no more. Formerly when village was first established, a large stone, called Karukallu*, was set up within it. To such stones the Patel** once a year makes an offering, but the Kulavadi, after the ceremony is over, is entitled to carry off the rice, &c., offered, and in cases where there is no Patel, the Kulavadi performs the ceremony.
Melukote Chaluva Narayana Temple), the right of the outcastes (Mallas[பள்ளர்], Holeyas[பறையர்] and Madigas[சக்கிலியர்]) to enter the temple was stopped at the dhvaja stambham, the consecrated monolithic column, from which point alone can they now obtain a view of the god.”
The Mallas in the battle
The Malas or Holeyas who were called Malloyis by Tolemy and also called Mallas by the British
 in their writings were the major antagonists of the British in the battle. Tipu sultan trusted the Malla soldiers more than any of his other soldiers for their bravery, obedience, and battle worthiness. It was one of the reasons why the battle took place in Mallavelly; the present Malavally in the Mandya district of Karnataka. The Malla soldiers attacking the Colonel Arthur Wellesley ’s British army can be seen in the painting shown at the top of the article.
ஆனால் அங்கே கர்னாடக பள்ளர்கள் தங்களை பாண்டியர் சோழர் என கூற வில்லை அவர்கள் தங்களை சளுக்க புலையர்கேசி என்ற புலிக்கேசி வழிவந்தவர்கள் என கூறுகின்றனர் ஆனால் அவர்கள் தங்களை கங்கர்கள்,சளுக்கர்கள் வழி வந்ததாக கூறுகின்றனர்,எப்படியென்றால் இங்கே  தெற்கில் உயர்ஜாதியினர் தங்களை வீழ்த்தி அரியணையை பறித்தாக இங்கே இவர்கள் எப்படிகதை கூறுகின்றனரோ அதே போல அங்கே உயர்ஜாதியினரை தூற்றியும் தம்மை சளுக்க,கங்கமன்னர்கள் வழிவந்தவர்களாகவும் கூறுகின்றனர்.

Mr. Hampa Nagaraiah has proved classically that the Chalukyas, Rashtrakutas and Gangas were agriculturists. He has based his studies on the sources available in the Indian languages and based on them he has made some hypothesis to draw the conclusions. I agree with him completely and would place before you some of my views based on my Sumerian and Akkadian studies

சளுக்கர்கள் வழிவந்தவர்கள் தான் காலாடியாம்(கர்னாடகபள்ளர்)

The descendants of the Chalukyas are called Chalavadis. T
he caste of the rich men in India becomes the upper caste and the caste of those who lose power and position becomes the lower caste.
சளுக்கர்கள் உழவராம் புலையர் வழி வந்தவன் தான் புலிகேசியாம்(புலையர்கேசியாம்)
Chalukyas belong to an agricultural family.
5. Chalukyas were agriculturalists from the Badami-Shirahatti areas of the northern Karnataka. The Polaveeras (the plowmen, land lords, Holeyas) of this family strengthened themselves to build up a dynasty that swayed over a large track of the land and founded the strong kingdom. The Rashtrakuta kings12 too were agriculturists, it is proved beyond doubt by the emblem that they had. It was a well designed plow it is the kind of plow even used throughout India. It seems the Ganga dynasty was also founded by an agricultural family. 6. The knowledgeable historians have to consider the natural derivation of the word Chalukya from the agricultural term that is closer to the reality and human beings rather than from the imaginary divine genesis of the dynasty13. 7. In the word Belvola (vel+pola(n) = velvola, belvola, belvala) the second half is pola; land.The Chalukyas were kings of the Belvola - 300 country.
இப்படித்தான் ஊருக்கு ஒரு வேஷம்.


இங்குள்ள பள்ளர்கள் தங்களை மூவேந்தர் பரம்பரை எனக் கூறுவதுபோல் கர்னாடக பள்ளர்கள் தம்மை சளுக்க,கங்கர் வழி வந்தவர்கள் என்று அங்கு பொய்யை பரப்பி திரிகின்றனர்.

மொத்ததில் கங்கரும் சளுக்கரும் கூட பள்ளர்கள் கிடையாது
.அவர்களுக்கு கீழ் இருந்த கொத்துகுடி தான் இவர்கள்.
ஆனால் இன்றைய காலத்தில் அந்த ஊர் கன்னட பள்ளர்களும் இந்த மாதிரி பித்தலாட்ட வேலைகளில் இறங்கி உள்ளனர்.

மொத்தத்தில் உக்கிரபெருவழுதி பாண்டியனும் சோழனும் கங்க,சளுக்கர்களை வீழ்த்தி அந்த நாட்டில் உள்ள உழுகுடிகளை சிறை பிடித்து வந்தபோது இங்கு கொண்டு வரப்பட்டவர்கள் தான் பள்ளர்கள்.
இதைத்தான் தென்காசி கல்வெட்டு கங்க மன்னனின் உழுகுடிகளை சிறைப்பிடித்து வந்ததைத்தான்
தேவேந்திரன் மகன்களை சிறைபிடித்து வந்தான் என கூறுகிறது. அதுவும் 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டா அல்லது செப்பு
பட்டயமா என முழுமையாக தெரியவில்லை.ஆனால் அதில் எந்த பள்ளனையும் பாண்டியன் என கூறவில்லை.

மேலும் இதில் பாண்டியன் பள்ளர்களை சிறைபிடித்து கொண்டு வ்ந்து உழவுக்கு ஆட்படுத்தினான் என்று தான் ஆதாரம் உள்ளதே தவிர பள்ளன் பாண்டியன் என்று எந்த ஆதாரமும் இல்லை.
இந்த பதர்கள் தான் தங்களை பாண்டியர் என கூறுகிறார்கள்

இவர்கள் காட்டும் எந்த ஆதாரத்தில் பாண்டியன் பள்ளன் என்று உள்ளது ?
1)இதில் எங்கே பள்ளன் பாண்டியன் என கல்வெட்டு உள்ளது?:


"கல்வெட்டே காணவில்லை"

தமிழகத்தில் நெல்லை முதன் முதலாய்ப் பயிர் செய்தவர்கள் பள்ளர்களே எனக் கூறும் கரிவலம்வந்த நல்லூர்க் கல்வெட்டும் ( ARE 432 /1914 ) திருவில்லிப் புத்தூர்க் கல்வெட்டும் (ARE 588 /1926 ) பள்ளர்களைப் பாண்டியன் உக்கிரப் பெரு வழுதியுடன் தொடர்புபடுத்துகின்றன
பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டுத் தனது கற்பின் வலிமையால் நீதியை நிலைநாட்டிய கற்புக்கரசி கண்ணகியின் பெருமையை உணர்த்தும் வகையில் 300 ஆண்டுகளுக்கும் மேலாகச் சித்தரைப் பிறப்பன்று வெண்குடைத் திருவிழாவைப் பள்ளர் குல மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த கொண்டாட்டம் இது தான்.

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புலையர் எனும் பழங்குடியின மக்கள் வாழுகின்றனர். இவர்கள் வேட்டையில் கிடைக்கும் இறைச்சி, மற்றும் காய், கனி, கிழங்கு வகைகளை உண்பர். புலையரது தலைவனுக்கு கணியன் என்று பெயர். இவர்களிடையே குடும்பி, குள்ளன், மல்லன், குடியன் என்னும் பிரிவுகளும் உள்ளன. சித்திரை மாத முழுநிலவு நாளில் விழா கொண்டாடுகின்றனர். திருமணவிழாவில் கற்பூரவல்லி என்று வாசமுள்ள செடிக்கொத்தொன்று மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. பெண்களிடம் பித்தளை மோதிரமும், கண்ணாடி வளையல்களும் அணியும் வழக்கம் பரவலாக உள்ளது

2)இதில் வரும் ஈழக் குடும்பிகள் என வரும் தொடர் ஈழவர் சமூகத்தை தான் காட்டுகிறது.

திருப்பரங்குன்றம் கோவில் கல்வெட்டி உள்ள ஓர் செய்தி
ஈழ குடும்பிகன் நெல்வேலி(இலங்கையில் உள்ள ஒரு ஊர்,தமிழக திருநெல்வேலி அல்ல) ஈழவன் என்பது ஈழநாட்டை சார்ந்த ஈழவனே.இதைப்போலத்தான் கன்யாகுமரி ஈழவ சாணார் பகுதியில் சாணாப்பள்ளர் என்பவர் இன்றும் வாழ்கின்றனர்.

“எருக்காட்டூர் ஈழக் குடும்பிகன் போலாலயன்( புலையர்) செய்த ஆய்சதன நெடுஞ்சாதனம்”
என்று ஈழக் குடும்பிகன் என்ற ஈழ நாட்டுப் பள்ளர் குலத்தவன் செய்வித்த கற்படுக்கை கொடை பற்றி மேற்கண்ட பொறிப்புகள் தெரிவிக்கின்றன.

"இதுவும் பள்ளன் தான் பாண்டியன் என்பதற்கு  ஆதாரமாம்"............எங்கு உள்ளது பள்ளன் பாண்டியன் என்ற ஆதாரம்.
இலங்கையை பொருத்தவரை பள்ளர்கள் சிங்களர்களின் உட்பிரிவாகவும் பிரதேமெடுத்தல்,பாணிய வழங்குதல் போன்ற கரும காரியங்களை செய்வதாகவும் இந்திரனான சிங்கள விஜயனை மூதாதயராக கூறும் இவர்களை பாவணர் போன்ற (பாதிபள்ளர்) இணத்தவரின் முயற்சியில் தான் இன்று தமிழர் என கூறிவருகின்றனர் என்பது தமிழ் ஈழ கருத்து.



பள்ளர்களை பற்றிய நிஜக்கல்வெட்டு இப்படித் தான் உள்ளது.

கொடும்பாளுர் கல்வெட்டு:
விக்கிரம கேசரி சதுர்வேதி மங்கலம்:
முதற்குலோத்துங்கனின் கல்வெட்டு(117)
விக்கிரம கேசரி சதுர்வேதி மங்கலத்தின் பிராமணர் ஒருவர் விளக்கு எரிப்பதற்கு 64 காசுகள் கொடை வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகின்றது.சிதைந்த நிலையில் காணப்படும் இரண்டாம் பாண்டிய பேரரசின் கற்ப்பொருப்பில்(கல்வெட்டு550)
"இப்பிரமதாயத்தின் புறஞ்சேரியிலிருக்கும் பள்ளரும்,பிடாகையிளிருக்கும் பள்ளரும் கற்றளேரி குளத்தை
செப்பனிடும் பணியை மேற்கொண்டமைக்காக சபையார் அன்னர்க்கு வழங்கிய பரிசில்" 
கூறப்படுகின்றது.
இதற்க்கு பின்னர் காணப்படும் சக ஆண்டு 1227 மற்றும் ஸ்க ஆண்டு 1313 இரு கல்வெட்டுகளிலும்(687,777) சபா குறித்த செய்தி காணப்படவில்லை.



புதுக்கோட்டை மாவட்டம்:

13-ஆம் நூற்றாண்டுக்குரிய திருவரங்ககுள கல்வெட்டு(434) மற்றும் குலசேகர பாண்டியன் பெருஞ்சுனையூர்
கல்வெட்டு(561)...
" ஆலயத் திருப்பனி செய்ய நிதிப்பற்றாக்குறை காரணமாக குடிநீங்காத் தேவதனமாக விற்க்கபட்ட நிலத்திற்கு பள்ளிப்பேறு பள்ளர் பெற்ற பண்டம் ஆகிய செலவினங்கள் பொதுவில் இட்டு(நில உடைமையளரும் உழுகுடியும் சமமாய் செலவிட்டு) ஐந்தில் மேல்வாரம் அளக்க வேண்டும்"


பெருவாயில் நாட்டு பெருஞ்சுனையூரில் உள்ள கல்வெட்டு:
கல்வெட்டு(561)
"பெருவாயில் நாட்டு பெருஞ்சுனையூரில் சிவாலயத்திருப்பனிக்குரிய செலவிற்கு ஒற்றி வைக்கப்பட்ட தேவதான நிலத்திற்கு மேல்வார அளவு கூறுகையில்
 பள்ளி பேறு பள்ளன் பெறும் பண்டம் ஆகியன் பொதுவில் ஏற்று கொள்ளப்பட வேண்டும்" என கூறப்படுகின்றது.இங்கு பள்ளித்தியர் பள்ளர் ஆகிய வேளான் தொழிலாளர்கள் சுட்டப்படுகின்றனர்.வர்மன் குலசேகர பாண்டியனின் வாராப்பூர் கல்வெட்டு மற்றும் மேலூர் கல்வெட்டு:


காலம் 14-ஆம் நூற்றாண்டு

"முனையதரையின் மக்கனாயன் என்பார் தன் மகன் சீராள தேவர்க்கு காணியாட்சியும் மனையும் அடிமைகளையும் கொடுத்த செய்தி கூறப்படுகின்றது. தாம் கொடுத்த அடிமையாரன் தேவியும் இவள் மகள் சீராளும் தம்பி சீராளனும் மகன் திருமெய்ய மலையாளனும் சிவத்த மக்கனாயனும் ஆகிய பேர் எட்டும் 
பள்ளடியாரில்(அடிமைகளான பள்ளரில்) வளத்தி மகள் மன்றியும் இவள் மகள் பொன்னியும் கொள்ளி மகள்
தொழுதியும்,உடப்பி மகன் பொன்னனும்,வளத்தி மகன் வில்லியும் அக இவ்வகைபட்யுள்ள அடிமையும் காணியாட்ச்சியும் மனையும் அளிக்கபட்டதாக கூறப்படுகின்றது.
இங்கு பள்ள குடும்பத்தினர் முழுமையும் அடிமைகளாக கூறப்படுகின்றது.



முதலில் கூறப்பட்ட எட்டு அடிமைகளும் பள்ளர் சமூகத்தவர்கள் அல்லர்.அவர்கள் வெள்ளாளர் முதலான பிறசமூகத்தவர்.




விஜயநகர காலத்திய கல்வெட்டில்

அரையர் குழுக்கள் பகை கொண்டு மோதிக்கொண்டு பின்னர் பகைதீர்ந்து உடன்பாடு(காவமுறி) காண்கின்றனர்
ஓடிப்போன பள்ளர் அடிமைகள்(பள்ள பசகள்)க்கு தஞ்சம் கொடுத்தமையே இப்பகைக்கு காரணமாம்.
"முன்னாளில் 
மாவலி வானாதிராயனின் குழுவிற்குரிய பள்ளர் அடிமைகள் ஓடிப்போய் நெருஞ்சிக்குடி ஊரில் தஞ்சம் புக,மாவலி வானாதிராயன் நெருஞ்சிக்குடி ஊரவரின் மாடுகளை அழித்து ஓடிய பள்ளரையும்
பிடித்துக் கொண்டு வருகையில்,
நெருஞ்சிக்குடி ஊரவர் பரம்பையூர் ஊரவரயும் துணைக்கழைத்து கொண்டு வானாதிராயனை எதிர்த்தனர்"


இதே போல,
காடவ மல்லன் என்றும் மூவன் காடவப் பிள்ளை என்பவனையும் பள்ளர்கள் தங்கள் இனத்தவன் என கூறும் கல்வெட்டும் பொய்யே.
கல்வெட்டு (439),
வலையர் இனத்தவர்களான மூவன் காடவப்பிள்ளை ஒரு நிகழ்விலும்,காடவமல்லன் ஒரு நிகழ்விலும்,வலைவாணன் எனும் வலையர் தலைவன் இரு நிகழ்விலும் காவற்பொறுப்பை ஏற்றுள்ளனர்.
ஆனால் படைப்பற்று குடியிருப்பான குருந்தன் பிறையை சார்ந்த மூவன் காடப்பிள்ளை இக்குடியிருப்பின் ஆளும் வர்க்கமான மறவர்களின் கட்டுப்பாட்டிலே செயல்பட்டதாக கூறுகிறது.

சோழர் கல்வெட்டு:
சோழர் கால கல்வெட்டுக்களிலும் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பறைச்சேரி (தெ.இ.க;4,க.எ.529;52,81,83) (தெ.இ.க;26, க.எ.686)
மேலைப்பறைச்சேரி (தெ.இ.க. தொகுதி2, க.எ.5)
என்று வரும் வரிகள் இதற்குச் சான்றாகும். மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686) பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151) என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

வரி

சோழர் காலத்திலேயே பள்ளர் வரி தொடங்கி விட்டது:

TANJAVUR BRIHADHISWARA TEMPLE INSCRIPTIONS
INSCRIPTIONS ON THE WALLS OF THE CENTRAL SHRINE
No. 95. On the outside of the north enclosure.[1]
This record begins with the prasasti Tirumannivalara, etc., of the king.
It records the gift of 150 cows to the temple of Tirukkalatti-mahadeva by Chalukkiyakalakalan Kalappiriyan, the kankani-nayakam of Arrur-nadu.  The cows were distributed in the presence of Velipak-kilan Koyilmarayan, the Srikaryam and devarkanmigal of the temple, at the instance of the donor, among the shepherds Pallan Sattan, Pallan Sanan, Totti Madhavan . . . . . . . . . . tta-kon, and Sangan Alinjil, 30 a piece, stipulating the daily supply by each of them of 1 ulakku of ghee measured by Arumolidevan nali.  And another (2) endowment of 9 anradu narkasu, paid into the temple treasury by Vallan Kilan Sadangavi Soman of Pungunram in Tirumunaippadi for the supply of 1 alakku of ghee out of the interest on the endowed amount for mantradipam, andikkappu and tiruvalatti.
 [To the shepherd Pallan[29]].................. [residing] at Sri-Parantaka-chaturvedi[mangalam], a free village in Rajendrasimha-valanadu, were assigned ninety-six ewes in all, (viz.) seventy-two cases out of the ewes given by the [Pe]rundaram Lokamarayan for the sacred lamps (which he) had (vowed) to put up “(in case) no filth was thrown (on) him in the war of the lord Sri-Rajarajadeva at Kori ;” and twenty-four ewes, (which could be got) for the eight kasu given out of the money deposited, for sacred lamps, by the royal secretary, Karayil Eduttapadam, the headman of Rajakesarinallur. From (the milk of these ninety-six ewes) he himself and his dependents, (viz.) his uterine brothers Pallan Kuttan and Pallan Kiran ; his nephew Mugatti Eruvan ; and the shephered Modan Tiran, living at Sri-Parantaka-chaturvedimangalam, a free village in Rajendrasimha-valanadu, have to supply (oneurakku of ghee per day, for one sacred lamp, by the Adavllan (measures).
மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686)

பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151)

என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சோழர் காலத்தில்

பள் வரி, பறை வரி

என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்துவிலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து

பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.

உழப்பறையர், தேவேந்திரப் பறையன் என்ற உட்பிரிவுகளையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
விக்கிரமச் சோழன் காலத்தியக் கல்வெட்டொன்றில் வெள்ளான் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான தனபாலன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
வேளாண்மைத் தொழில் செய்து வந்த பறையர்கள் வெள்ளாளன் என்று அடைமொழியிட்டு அழைக்கப்பட்டனர் என்பதை இக்கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. (SII ங:253)
சேதுபதிசெப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.
பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208) பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242) பள்ளுப்பறை...சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451) பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528)

இலக்கிய ஆதாரம்:

இவர்களுக்கு இலக்கிய ஆதாரத்திற்கு மள்ளர் இலக்கியம் என சில வரிகள் வருகிறது என்று ஆதாரமாக சில வரிகளை காட்டுகிறார் தவத்திரு பள்ள சித்தர் குருசாமி அது எந்த இலக்கியம் என குறிப்பிடுவதில்லை. "திருவிளையாடல் புராணத்தில்" மள்ளர் பற்றிய சிறு குறிப்பு வரும். ஆனால் அது 16-ஆம் நூற்றாண்டு என்றும் 18-ஆம் நூற்றாண்டு என்று சிலர் கூறுகின்றனர். அதில் வரலாற்று ஆதாரம் கிடையாது. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை எழுதியவர். இவர் வேதாரணியத்தில் வசித்த மீனாட்சி சுந்தர தேசிகரின் மகன் ஆவார்.தந்தையே குருவாக இருந்து, மகனுக்கு சைவ சித்தாந்த கருத்துக்களைப் போதித்தார். வேதாரணியத்தில் கோவில் கொண்டுள்ள சிவனை துதித்து வந்த பரஞ்சோதி முனிவர், தமிழகத்திலுள்ள பிறகோயில்களையும் பார்க்க ஆவல் கொண்டார். மதுரைக்கு வந்த அவர், மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த போது, அவரது கனவில் தோன்றிய மீனாட்சியம்மன், சிவன் அந்நகரில் நிகழ்த்திய லீலைகளை அழகு தமிழில் பாடும்படி உத்தரவிட்டாள்; அதற்கிணங்கி பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை எழுதினார் என்பது தொன்ம நம்பிக்கை. மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. இயற்றிய இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் வழங்கப்படுகிறது.

இன்னோன்று ஆதாரம் முக்கூடற்பள்ளுவில் வரும் "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளிக்கோர் பள்ளக்கனவனாய்".......... இது ஒரு ஆதாரமா? இது தான் பாண்டியன் என்ற ஆதாரமா? இதில் இரு பள்ளித்திகளுக்கு ஒரு பள்ளன் தாலி கட்டியுள்ளான்.வேறு என்ன பள்ள இலக்கியத்தில் வருகிறது,சக்கலத்தி சண்டை.பண்ணை ஆண்டையின் கொடுமை,நெல் வகை இது தானே வருகிறது.இது உழுகுடிகள் விவரம் தானே.இதெல்லாம் அரசகுடிகளுக்கு ஆதாரமா?

மருத நிலத்தில் தோன்றியது தான் மன்னர் இனமா?

மருத நிலத்தில் தோன்றிய மள்ளர்
 இனத்தை பற்றி சேக்கிழார் என்ன கூறுகிறார்.

முதலில் புலையர் இனத்தில் தோன்றிய நந்தனார் நாயனார் இறைவனை ஒத்த இறைதிருமகனாவார்.அவரை விமர்சிப்பதற்கு வருந்திகிறோம் ஆனல் இலக்கிய ஆதாரத்திற்கு தான் இங்கு சுட்டுகின்றோம்.
மற்றவூர் புறம்யின் வல்மருங்கு பெருங்குலையில்....தொழில் உழவர் கிளையது வன்றி....பல் நிறந்த்ள்தோர் புலைப்பாடி(1051:பெரியபுரானம்)
பொருள்:
அந்த ஆதனூரின் வெளியே உள்ள மருத நிலத்தை சேர்ந்த வெளிநிலத்தில் புலைச்சேரி ஒன்று இருந்தது. அதில் உழவர் கூட்ட்டம் நிரம்பியது.
வன்சிறுதோல் மிசையுழத்தி ம்கவுறங்கும் நிழல் மருதும்.....வஞ்சிகளும் விசிபறை தூங்கும்(1053) "
அந்த புலைச்சேரியின் மருத மர நிழலில் உழத்தியார் தன் குழந்தைகளை தூங்க செய்வர்.வார்களில்
இழுத்துக் கட்டபட்ட மாமரங்களில் பறைதொங்கும்.
"இப்படித்தா கிய கடைஞர் இருப்பின்வரை...........நந்தனார் என ஒருவர்(1056பெரியபுராணம்)


இப்படி உள்ள கடைஞர் குடியில் தோன்றியவர் தான் நந்தனார்.

"ஊரில்விடும் பறைதுடைவை உனவுரிமை யாக்கொண்டு(1058பெரியபுராணம்)

தம் பிறப்பினால் வெந்த வெட்டிமை தொழிலுக்காக கொடுக்க பட்ட பறைத்துடைவை என்னும் மானிய நிலத்தில் தொழில் உழவு செய்து வாழ்ந்தார் நந்தனார்

அல்குந்தம் குலம் நினைந்தே அஞ்சி அனைந்தில நின்றார்(1068பெரியபுரானம்)
அந்தனர் யாகத்தை நெருங்கிய நந்தனார் தன் குலத்தை நினைத்து அஞ்சி நின்றார்.
இறுதியில் யாகத்தில் தோன்றி இறைவனின் திருவடியை சரனடைந்த அவர் அந்த அந்தனர்களை விட மேன்மை பெற்றவராக அங்கு சூழ்ந்த அந்தன மக்களால் வனங்கபட்டு தேவர்கள் பூமாரி பொழிந்து இறைவனுடன் கையிலை சென்றார்.

[பிணத்துக்கு பள்ளம் தோண்டுபவனே பள்ளன். மள்ளன் என்பவன் பள்ளனாகவும் மற்றும் பறையனாகவும்  இருக்ககூடும் கொங்கு கல்வெட்டு மள்ளன் என்பவன் பறையன் என செப்புகிறது.மள்ளன் பள்ளனா? இல்லை பறையனா? என இறந்து போன பாவாணாரோ அல்லது ஆமை ஆராய்சியாளர் ஒரிசா பாலுவோ தான் பதில் தர இயலும்.]

13-ஆம் நூற்றாண்டு கண்டதேவி ஹிஜிரா கல்வெட்டு புலையர்,பாணர்,பள்ளர்,பறையர் ஆகிய கீழ் சாதிகள் என குறிப்பிடபட்டுள்ளது.
ஹிஜிரா கல்வெட்டு எண் : 771(கிபி 1300 இல் இருந்து 1330 க்குள்)
இடம் : கண்டதேவி படி எடுக்கப்பட்ட ஆண்டு அல்லது பதியப்பட்ட ஆண்டு -1921
மதுரையில் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி 1290 களில் துவங்குகிறது.(சுந்தர பாண்டிய தேவர்) சுல்தான்கள் மதுரையை தாக்கி பாமினி ஆட்சியை நிறுவுகிறார்கள்.பாண்டிய மன்னர்கள் தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்ய துவங்கிறார்கள். ஆனாலும் காரைக்குடி,திருப்பத்தூர்,தேவகோட்டை பகுதி கள்ளர்களில் சிலர் , ஆங்காங்கே சுல்தான்களின் படையை தாக்கியும்,சூறையாடியும் பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கோபம் கொண்ட சுல்தான் மறவர் படைகள்  வாழ்ந்த கண்டதேவியை ஆண்ட சூரைக்குடி என்னும் விஜயாலயத்தேவரின் வன்னிய சூரைக்குடியை தாக்கி பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கத்தி முனையில் இனிமேல் சுல்தான் ஆட்சியை எதிர்த்து தாக்குதல்,சூறையாடல் நடத்த மாட்டோம் என்று கள்ளர், கருமார்,உள்ளிட்டோர் முன்னிலையில் ஒப்பந்தம் கல்வெட்டாக பெறப்படுகிறது.அப்படி ஒப்பந்தத்தை மீறினால் கீழ்காணும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம் என்பது தான் கல்வெட்டு. 1) எங்கள் மீசையை மற்றும் தாடியை மழித்து கொள்கிறோம். 2) எங்கள் மனைவியை ஒப்படைக்கிறோம். 3) புலையர்,பாணர்,பள்ளர்,பறையர் உள்ளிட்ட
கீழ்சாதியினர் எங்களை பெண் ஓவியமாக வரைந்து அவர்களின் குழந்தைகளின் காலில் கட்டி சுத்தட்டும். என கல்வெட்டு முடிகிறது.
என கல்வெட்டு முடிகின்றது.








இங்கு புலையர் என்று குறிப்பிடும் மக்கள் யார்?

புலையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல்தேடல்
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புலையர் எனும் பழங்குடியின மக்கள் வாழுகின்றனர். இவர்கள் வேட்டையில் கிடைக்கும் இறைச்சி, மற்றும் காய், கனி, கிழங்கு வகைகளை உண்பர். புலையரது தலைவனுக்கு கணியன் என்று பெயர். இவர்களிடையே குடும்பி, குள்ளன், மல்லன், குடியன் என்னும் பிரிவுகளும் உள்ளன. சித்திரை மாத முழுநிலவு நாளில் விழா கொண்டாடுகின்றனர். திருமணவிழாவில் கற்பூரவல்லி என்று வாசமுள்ள செடிக்கொத்தொன்று மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. பெண்களிடம் பித்தளை மோதிரமும், கண்ணாடி வளையல்களும் அணியும் வழக்கம் பரவலாக உள்ளது



பள்ளரின் பட்டங்கள்:குடும்பன் இங்கே குடும்பி என்றுள்ளது.
மல்லன் மள்ளன் என்ற பட்டமும் பள்ளரிடம் உள்ளது அதையும் அறிவோம்.குடியன் குடி அடிமை என்றும் அறிவோம்.ஆனால் இந்த குள்ளன் யார்?
குள்ளன்=பள்ளன்?கணியர் என்பது பறையரில்  வள்ளுவரைக் குறிக்கும்.
In the Thiruthuraipoondi inscription No.204, (Tamil Nadu Archaeology Department) pertaining to cholas period says as follows :-

"வண்ணார் பள்ளர் பறையர் உள்ளிட்டாரும்"

In the Madurai, Melur (keeranur) inscription (S.I.I. Vol-V, No.273) pertaining to Kulotunga chola-III says as follows :-

" இட்ட நிலம் கொங்கூர் குளத்துக் கிழைத்தூம்பில் எல்லைகளில் 
பள்ளக் கவருக்கு தெற்கும் மன்றாடி சோழ கொந் செய்க்கு வடக்கும்" 

In the Thiruthuraipoondi inscription No.1, (Tamil Nadu Archaeology Department) pertaining to pandiyas period says as follows :-

"வடபாற் எல்லை பள்ளன் ஓடை"

During the Kulasekara Pandiya period of 13th century, the inscriptions says as follows :

"இவ்வூர் குடும்பரில் பெரிய தேவப் பள்ளன்"


(Seminar on Hero-stones, Editor R. Nagaswamy (page-77) published by the State Department of Archaeology, Govt of Tamil Nadu - 1974).

In 1229 A.D., (Maravarman Sundara Pandya) the Nadu of Kana-nadu, the Nagaram, the Grama, Vanniyar and the Padaipparru's agreed to levy per capita on all the land holders as given below :-

For Brahmins, Chettis, Vellalas 1/2 Panam
for Minors 1/4 Panam
for Garrisons 1/4 Panam
for Parayars & Pallars 1/8 Panam 

It shows Brahmins, Chettis and Vellalas were held equals and from the manual labourers like Pallas and Paraiyas 1/4 of what was levied from others (Kudumiyamalai) was collected.

"பறையர் பள்ளர் பெர் ஒன்றுக்கு பணம் அரைக்காலும்"

(Tamil Coins a study, Dr. R Nagaswamy, Page - 107 & 108. Published by Institute of Epigraphy, Tamil Nadu State Department of Archaeology - 1981) &
Inscriptions of the Pudukottai State (I.P.S), Inscription No.561. (Kudumiyanmalai Inscription).

In the Thiruvallur District, Kuvam thirupuranthaka Eswarar koil inscription (1296 A.D), pertaining to "Thiribuvana Vira Ganda Gopala Devar (Telugu Chola) says as follows :-

"வைத்தாந் பள்ளநும்"
"இவை பள்ளன் எழுத்து" (S.I.I. Vol-XXVI, No.354).

In the Trichirapalli District Tiruppalatturai inscription says as follows :-

"புலை அடியாரில் முன்னால் நங்கைபுரத்தில் பாட்டத்தில் நின்ற 
புலை அடியாராய் உடையார் கம்பண உடையார் காரியப்பெர் 
சந்த்ரசர் விற்க நான் கொண்டு உடையெனான சாதனப்படியால் 
உள்ள பள்ளன் பிறவியும் இவன் பள்ளி அழகியாளும் இவன் மகன் நம்பாளும் இவன் தம்பி 
வளத்தானும் இவன் தம்பி தாழியும்" (S.I.I. Vol-VIII, No.590). 


In the Pudukkottai Thirumayam, Karaiyur Sundara Raja Perumal koil inscription pertaining to the king "Virupakshirayar" of 14-15th century A.D says as follows :-

"வலையர் ஆடிக்கு ஒரு கூடு முசலும் காத்திகைக்கு 
ஒரு கூடு முசலும் இடையர் பால் நெய்யும் பறையர் 
ஆடிக்கு இரண்டு கொழியும் காத்திகைக்கு இரண்டு 
கொழியும் பள்ளர் ஆடிக்கு இரண்டு கொழியும் 
காத்திகைக்கு இரண்டு கொழியும்" (I.P.S. Ins. No. 715)

In the Pudukkottai Thirumayam, Ilambalakudi Madavira Vinayagar koil inscription of 16th century says as follows :-

"இலம்பலக்குடியில் பள்ளற்கும் பறையற்கும் 
விருது சண்டையாக காஞ்சிபுரத்துக்குப் போய்
கல்வெட்டுப்"

"இலம்பலக் குடியில் பறையற்கும் 
பள்ளற்கும் சண்டை" (Avanam-15, July-2004, Page-31&32)

In the Pudukkottai Thirumayam, Karaiyur Thirumanganeeswarar koil inscription of 16th century says as follows :-

"காத்திகைக்கு இடையன் ப.ல் நெய்யும் ..
வலையன் முசலும் பள்ளன் கொழியும்
பரையன் கொழியும் ஆக இந்த சுவந்திரம்" (I.P.S. Ins. No.843)

In the Pudukkottai Thirumayam, Thekkattur Agatheeswarar koil inscription of 16th century says as follows :-

"தெற்காட்டூராக அமைந்த ஊரவரொம்
மேற்படியூற் பள்ளற்கும் பறையற்கும் 
பள்ளற்கு தவிலும் முரெசும் செமக்கலமும் 
நன்மை தின்மை பெருவினைக்குங்கொட்டி 
பொக கடவராகவும் பறையர் அஞ்சு கா" (I.P.S. Ins. No. 956)

In the Pudukkottai Thirumayam, Mellathanayam Mariamman koil inscription of 16th century says as follows :-

"வீர சின்னு நாயக்கரவர்கள் பள்ளருக் குச்சிலா 
சாதனங்கட்டளையிடப்படி பள்ளர் பறையர் 
இருவகைப் பெருக்கும் வெள்ளானை 
வாழை கரும்பு உண்டில்லை யென்று
விபகாரம் நடக்குமிடத்தில் பள்ளர் இந்த 
விருது தங்களுக் யெல்லாமல் பறையருக்கு 
இல்லை யென்று நெய்யிலெ க்கை பொடுமிடதில்
பள்ளருக்கு க்கைக்கு சுடாமல் வெற்றியான 
படியினாலெ" (I.P.S. Ins. No. 929)

In the above said inscriptions, the "Pallar Community people" and "Paraiyar Community People" were placed together. In one of the inscription, the "Pallar Community People" referred as "Pulai Adiyars"


புலையார் என்றால் புலால் உன்பவர் என சிலர் கருதிகின்றனர்.ஆனால் "புலம்-நிலம்" புலையர்-நிலத்தவர் புலையர் என்றால் மன்னை பன்படுத்தி உழவு செய்யும் உழவர் என கன்னட ஆதாரம் கூறுகிறது.
Wrong Derivation of the term Holeya and Pulaya’

Pulaya--name is derived by people belong to soil(pulay=land)

" Holeyas are the field labourers, and former agrestic serfs of South Canara, Pulayan being the Malayalam and Paraiyan the Tamil form of the same word. The name is derived by Brahmins from hole, pollution, and by others from hola, land or soil, in recognition of the fact that, as in the case of the Paraiyan, there are customs remaining which seem to indicate that the Holeyas were once masters of the land ; but, whatever the derivation may be, it is no doubt the same as that of Paraiyan and Pulayan

இங்கு நாம் காட்டிய ஆதாரத்தில் புலையர் தான் பள்ளர்கள் என நிருபணமாக உள்ளது.

இவர்கள் பாண்டியர்கள்,சோழர்கள் என்று ஆதாரம் காட்டினால் முதலில் சோழரும் பாண்டியரும் புலையர் என்றே நிருபிக்க வேண்டும்.

பின்பு தான் மற்ற இனத்தவரை பற்றி தூற்ற வேண்டும். ஆனால் இவர்களுக்கு முழுமுதல் வேலையே மற்றவர்களை தூற்றுவது தான்.

இவர்கள் மூவேந்தர் இனம் என கூறுவதற்கு பதில் இவர்களின் மறைந்து போன நாகரிகத்தை தேடலாம். அதை விடுத்து தான் தான் மூவேந்தர் இனம் என்றும் ஏதோ அந்த பதவியை இவர்கள் தான்  பறித்துக் கொண்டனர் என்று மற்றவரை தூற்றுவதும் மிகப்பெரிய சரித்திர பிழையாகும்.

சாணார் என்றோ நாடார் என்றோ ஒரு இனம் பண்டைய தமிழகத்தில் கிடையாது.இவர்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற ஐந்து திணைகளிலும் கிடையாது.ஏனெனில் இவர்கள் தமிழகத்தின் இனத்தில் இவர்கள் இல்லை.பின்பு இக்குடியினர் எப்படி எங்கிருந்து வந்தனர்?. ஆனால்.பல்லவ மற்றும் இடைக்காலத்தில் ஈழவர் என்ற மக்கள் காணப்படுகிறார்கள்.பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இலங்கையின் மீது தமிழகத்திலிருந்து படையெடுப்பு நடந்தது. அப்படையெடுப்பில் பலர் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.அதேபோல்,இராசராச சோழன் இலங்கை மீது படையெடுத்தான்.சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் இலங்கை மீது படையெடுத்து பலரை கைது பண்ணி இங்கு கொண்டு வந்தான்.இவ்வாறான படையெடுப்புகள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள்தான் ஈழவர் என்று சொல்லக்கூடிய நாடார் இனமக்கள்.படையெடுப்பில் கைது செய்யப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டவர்களில் பலர் படை வீரர்கள் இருந்தார்கள்.அவ்வாறாக வந்தவர்தான் ஈழச்சான்றோன் என்று சொல்லக்கூடிய ஏனாதிநாதர். அவர் தமிழ்ர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.மற்ற மக்கள் ஆற்றுக்குக்கரை அமைத்தல்,படையெடுப்பின்போது கொடி சுமந்து செல்லுதல் மற்றும் கள் இறக்குதல் போன்ற பணியில் ஈடுபட்டார்கள்.பெரும்பாலான மக்கள் கள் இறக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன.இன்றுவரை அது தொடர்கிறது. நாடார் தான் தமிழகத்தின் உண்மையான மூவேந்தர் இனம் என்றும் சொல்வது உண்மையில் தமிழகத்தின் வரலாற்றைத் தலைகீழாக திருப்பிவிடும்
இன்றும் இவர்களது இன மக்கள் இலங்கையில் துருவர் என்ற பெயரில் தென்னை,பனையேறிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.சாணார் ஆகிய இவர்கள் ஈழவர் என்ற இனத்தின் பெயரில் தமிழகத்துக்கு இறக்குமதியானவர்கள். சேரமன்னன் தென்னை,பனை பயிரிடுவதற்காக ஈழ மன்னனை வேண்டி சாணார் குடிகளை பெற்றான்.தேங்காயை கொழும்புக்காய் என்று அழைக்கப்படுவது கண்கூடு.இந்த தென்னை,பனை மரங்களை தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் அறிமுகப்படுத்தியது நாடார்கள் என்று தற்போது கூறிக்கொள்ளும் சாணார்கள் தான்.பனைமரத்தை தெய்வமாகவும் அது தரும் பொருளை பனையமுது என்று பெருமையாக அழைக்கும் வழக்கம் இவர்களிடமே உள்ளது.

The Durave or toddy tapper castes are related to the Ezhavas of Kerala or the Nadar or Tamil Nadu. Mangala Samaraweera, former Minister of Foreign Affairs, one time member of the ruling Sri Lanka Freedom Party and fired by President Rajapakse belongs to the Durave caste.


Caste And Exclusion In Sinhala Buddhism

மங்கல சமரவீரா என்னும் வெளியுறவுதுறை சிங்கள அமைச்சர் துருவர் சமூகத்தினர் என கூறுகின்றது கொழும்பு. இவர் தமிழகத்தில் நாடார் மற்றும் ஈழவர் வகுப்பர் என கூறுகின்றனர்.




சானார் என்றால் மரமேறுபவர் என்று பொருள்.

சாறு=குழை தழுவிய தென்னை (அ) பனை மரம் என்று பொருள்(சுரா தமிழ் அகராதி).

சாறு+ஏறான்=மரம் ஏறுபவன்.

சாறெரான்=சானாரான் என்று திரிந்துள்ளது.

இது தான் உண்மை பொருள்.
சாணார் என்பது நட்டாச்சி செய்த நாடார்களாம் ஆனால் 14-ஆம் நூற்றாண்டு சங்கரங்கோவில் பராக்கிறம பாண்டிய தேவர் கல்வெட்டில் நாடார் என குறிப்பிடாது சாணார் எனவே குறிப்பிடுகின்றது. இதில் சாணாருக்கும் பறையருக்குமான சண்டையில் பாண்டியர் அழித்த தீர்ப்பை பற்றிய கல்வெட்டு. எஸ்.இராமசந்திரன்,பிரவாகன் இவர்கள் கூறட்டுமே எங்கே பாண்டிய நாடார் என உள்ளது.

சாணார் என்று கூறிக்கொள்ள அசிங்கமாயிருந்தால் அதற்கு சமமாக நாடாவி என்றும் ஈழ நாடார் என்றும் கூறிக்கொள்ள வேண்டிய சாணார்கள் சத்திரிய நாடார் என்கின்றனர்.1921 ஆம் ஆண்டிலிருந்து நாடார் இனமக்களின் பெரிய மனிதர்கள் தங்கள் இனத்தை போலியாக உயர்த்திக்கொள்ள பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி பல வரலாற்று அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அப்படி வந்த ஒரு சொல் தான் தாங்கள் சத்திரியர் இனம் என்ப
கடந்த 200 வருடங்களாக பல போராட்டங்களை கடந்து ஆங்கில அரசின் ஆதரவை பெற்று இவர்களுக்குப் போலியாக இனப்பெருமை கோர,என்றே அறிஞர்களையும் வளர்க்கின்றனர்.இவர்களைப் பிடித்து  வந்து வளர்த்தவர்களின் இனமாக ஆண்ட பரம்பரையாக கூறிக்கொள்கின்றனர்.இன்று மூவேந்தர் என்ற புதுப்பெயரினை கோரி வருகின்றனர்.தங்கள் முதல்வர் காமராஜர் மூலமாக பொருளாதாரமுன்னேற்றம் அடைந்த இவ்வினத்தினர்.இன்று தம்மை மன்னர் வம்சம் என்று கோர,கட்டுக்கதைகள் எழுத  பல வரலாற்று ஆசிரியர்களை வளர்த்து உருவாக்கி வரலாற்றை திருத்தி எழுதிக்கொண்டுள்ளனர். நாடார் வரலாற்று ஆசிரியர்கள் 
சூத்திரர்கள்
===========
இந்திய அரசாங்கத்தின் புதுக்கோட்டை மானுவலில் சொல்லப்பட்டது யாதெனில் வலங்கை மற்றும் இடங்கையை சார்ந்த தொழிலாலர்கள் மற்றும் கைவினைகலைஞர் என்ற இடங்கை வலங்கை பிரிவுகளில் உள்ளவர்களே சூத்திரர் என குறிப்பிடுகின்றது. வலங்கை இடங்கை பிரிவு இரண்டுமே சூத்திரர் தானாம் அரசாங்க அறிக்கை.
இந்த இடங்கை வலங்கை பிரிவுகளில் வீரர்கள் இல்லை ஆனால் இன்றை நாளில் பூஸ்ட்,ஹார்லிக்ஸ்,பெப்சி முதலிய வணிக மையங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்சர் செய்வது போல் தான் இந்த இடங்கையை சார்ந்த கம்மாளர்களும் வலங்கையை சார்ந்த செட்டியார்களும் வீரர்களுக்கு ஸ்பான்சர் செய்வர். அதையே இடங்கை படைவீரர்கள் வலங்கை படைவீரர்கள் எனப்படுவர். அந்த இரு வீரர்களும் சூத்திரர் அல்ல. சூத்திரரின் ஸ்பான்சரில் அரசருக்கு  பனி புரியும் வீரர்கள்.

வலங்கை இடங்கை பிரிவு இரண்டுமே சூத்திரர் என்கையில் வலங்கையைசத்திரியர் நாங்க வலங்கையில்  குடி சத்திரியர்னு சொல்லிகிட்டு திரிந்தால் அது அறியாமை.

நாடார்கள் எயினர் மரபினரா?
நெடுங்குடி கோவில் பாண்டியர் கல்வெட்டுகளில். சாணார் வருகின்றனர். 

"ஆயர் சாணார் இடயர் போன்ற சமுதாய்த்தவரும்"...........

நாடார்கள் எயினரோ எனவும் சில யூகங்கள் உள்ளது. பெரிய புராணத்தில் "எண்டிசையும் ஏறிய சீர் எயின்மூதூர் எயினனூர். "அப்பொற்பதியில் ஈழ குலசான்றார் ஏனாதி நாதர்". என எயினர்கள் வாழும் எயினனூரில் ஈழவர் குல சாண்றாராக ஏனாதிநாதர் அவதரித்தார்.மழவராயர் என்றால் மழவர் தலைவன் என அர்த்தம்.பல்லவரையர் என்றால் பல்லவர்தலைவன் என அர்த்தம். அதைப்போல் ஏனாதினாதர் என்றால் எயினர் தலைவன் என அர்த்தம். மலையாள ஈழவர்களும் தங்களை எயினர் மரபினர் எண்கின்றனர். கிருஷ்னகிரி மாவட்டத்தில் எயினர் கல்வெட்டு அதிகமாக கிடைக்கின்றது. அதில் ஒரு கல்வெட்டு.:


வரிசை எண் 1.

கல்வெட்டு அமைந்துள்ள இடம்:
 விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், கல்லுமடை கிராமம் திருநாகேசுவரமுடையர் கோயில் தென்புறக் கல்.

கல்வெட்டு :
* ஸ்ரீ கோனோற்றமை கொண்டான் பருத்திக்கு
டிநாட்டு பாப்பார சான்றார்க்கும் பாற்குடி
களுக்கும் பிரமதேய கிழவர்க்கும்

‘கேரள சிங்க முத்தரைய’னாயின ‘மகாதேவன் மரு
தன்’ சாழ நாட்டு திருப்பாலை ஊர் தேவருக்கும்....”

க.என்.86/1973 ல்
"எயில் நாட்டு ராஜன் அடியான் ஈழசான்றான் எயிநாட்டு காமுண்டன் கலிஞ்சிறை புக்கு காணிக்கும் பூ மிக்குமாக பட்டான்"

நாடார்கள் தங்களை "காளிபுத்திரர்கள்" என   பத்திரம் எழுதிகிறார்கள் சங்ககால எயினர்கள் காளியை வணங்கினர் என பாடல் உண்டு.

எனவே நாடார்கள் எயினர் மரபினரா எனவும் கேள்வி உள்ளது.

ச.இராமச்சந்திர ஐயர்(sishri.org,thinnai.com,maanilavan@gmail.com)
நெல்லை நெடுமாறன்
கணேசன்.2001 இல் முனைவர் எஸ்.டி. ஜெயபாண்டியன் எழுதிய நாடார் வரலாறு, தூரன் நல். நடராசன் ஆனால் இவர்கள் சத்திரிய இனமாக கூறிக்கொள்ள என்ன என்ன விஷயங்கள் செயதனர் என எட்கர் தர்ஸ்டன் கூறுகிறார் என ஆங்கில கட்டுரை காண்போம்.

SHANAN-CASTE AND TRIBES OF EDGAR THURSTON


SHANAN " " 364 riots in prominence owing to the Tinnevelly 1899. These were," the Inspector-General of Police writes,* due to the pretensions of the Shanans to a much higher position in the religio-social scale than the other castes are willing to allow. Among other things, they claimed admission to Hindu temples, and the manager of the Visvanatheswara temple at Sivakasi decided to close it. This partial victory of the Shanans was keenly resented by their opponents, of whom the most active were the Organised attacks were made on a number of the Shanan villages the inhabitants were assailed houses were burnt and property was looted. The most Maravans. ; ; ; serious occurrence was the attack on Sivakasi by a body of over five thousand Maravans. 102 dacoities, in Twenty-three murders, and many cases of arson were registered connection with the riots in Sivakasi, Chinniapuram, and other places. Of 1,958 persons arrested, 552 were convicted, 7 being sentenced to death. One of the ring-leaders hurried by train to distant Madras, and & made a clever attempt to prove an alibi by signing his name in the Museum visitor's book. During the dis- turbance some of the Shanans are said to have gone The men shaved their into the Muhammadan fold. heads, and grew beards in ; and the women had dress. to make And, in the case of boys, the operation of circumcision was performed." The immediate bone of contention at the time of sundry changes their the Tinnevelly riots was, the Census Superintendent, " the claim of the Shanans to enter the 1901, writes, temples, in spite of the rules in the Agama Shastras that toddy-drawers are not to be allowed into Hindu them ; but the pretensions of the community date back * Administration Report, 1899. SHANAN Travancore, because female Christian converts belonging to it gave up the caste practice of going about without an upper cloth." On this point Mr. G. T. Mackenzie informs us * that " in the first quarter of the nineteenth century, the riot from 1858, when a occurred in female converts to Christianity in the extreme south ventured, contrary to the old rules for the lower castes, to clothe themselves above the waist. This innovation was made the occasion of disturbances. for threats, violence, and in series Similar disturbances arose from the thirty same cause nearly years later, and, 1859, Sir Charles Trevelyan, Governor of Madras, interfered, and granted permission to the women of the lower castes to wear a cloth over the breasts and shoulders. The was issued by the Maharaja of following proclamation Travancore hereby proclaim that there is no objection tQ Shanan women either putting on a jacket : We like the Christian Shanan women, or to creeds dressing in coarse cloth, selves round with it as the Mukkavattigal (fisherwomen) do, or to their covering their bosoms in any manner of all Shanan women and tying them- " of high castes." Shortly after 1858, pamphlets began to be written and published by people of the caste, setting out their claims to be whatever, but not like women In 1874 they endeavoured to establish a Kshatriyas. right to enter the great Minakshi temple at Madura, and they have since claimed to be allowed to wear the sacred thread, and to have palanquins at their but failed, weddings. They say they are descended from the Chera, in Chola and Pandya kings Kshatriyas legal ; they have styled themselves labelled their schools papers ; ; Kshatriya academy got Brahmans * of the less particular Christianity in Travancore, 1901. SHANAN kind to do purohit's work ; 366 for had poems composed on their kingly origin gone through a sort of incomplete parody of the ceremony of investiture with the ; them sacred thread ; talked much in but ignorantly of their to sign documents on festive occapalanquins at Nazareth in Tinnevelly, for sions." [During my stay the purpose of taking measurements of the Shanans, I gotras ; and induced needy persons agreeing to carry them received a visit from some elders of the community from arrived in palanquins, and bearing weapons of old device.] Their boldest stroke was to aver that Kuttam, who the coins commonly known as Shanans' cash were struck ' by sovereign ancestors of the caste. The author of a pamphlet entitled Bishop Caldwell and the Tinnevelly Shanars states that he had met with men of all castes who say that they have seen the true Shanar coin with their own eyes, and that a Eurasian gentleman from ' Bangalore testified to his having seen a true Shanar The coin referred coin at Bangalore forty years ago. to is the gold Venetian sequin, which is still found in considerable numbers in the south, and bears the names of the etc.) Doges (Paul Rainer, Aloy Mocen, Ludov Manin, cross, and a " palm. If," which the Natives mistake for a toddy Mr. Fawcett writes,* " one asks the ordinary Malayali (native of Malabar) what persons are represented on the sequin, one gets for answer that they between them a cocoanut tree. Every Malayali knows what an Amada is it is a real I have never heard or imitation Venetian sequin. any are Sita : ; Rama and explanation of the word Amada in Malabar. The Amada was the confollowing comes from Tinnevelly. sort of Bhagavati, and he suddenly appeared one day * Madras Museum Bull., Ill, 3, 1901. 367 before a Shanar, and SHANAN food. demanded The Shanar said he was a poor man with nothing which he gave in a palmyra leaf. Amada drank the toddy, and performing a mantram (consecrated formula) to offer but toddy, turned into gold coins, which bore on one side the pictures of Amada, the Shanar, and the tree, and these he gave to the Shanar as a reward for over the leaf, it his willingness to assist him." In a petition to myself from certain Shanans of Nazareth, signed by a very large number of the com" Short account of the munity, and bearing the title Cantras or Tamil Xatras, the original but down-trodden royal race " of Southern India," they write as follows. humbly beg to say that we are the descendants of the Pandya or Dravida Xatra race, who, shortly after the universal deluge of Noah, first disafforested and colonized this land of South India under the guidance of Agastya Muni. The whole world was destroyed by flood about We B.C. 3100 (Dr. Hale's calculation), when Noah, otherwise called Vaivasvata-manu or Satyavrata, was saved with his family of seven persons in an ark or covered ship, which rested upon the highest mountain of the Aryavarta country. rapidly replenished Hence his the whole earth was by descendants. One of his grandsons (nine great Prajapatis) was Atri, whose son Candra was the ancestor of the noblest class of the Xatras " ranked above the Brahmans, and the first illustrious monarch of the post-diluvian world." Apparently," the Census Superintendent continues, "judging from the Shanan's own published statements of their case, they rest their claims chiefly upon etymological derivations of their caste name Shanan, and of Nadan and Gramani, and names are, their two usual titles. Caste titles little however, of recent origin, and 


Shanars are declared as Panchamar(Fifth Varna) where to restrict to enter the temple and by Madurai High Court 1854




SHANAN 368 can be inferred from them, whatever their meaning may be shown to be. Brahmans, for example, appear to have borne the titles of Pillai and Mudali, which are now only used by Sudras, and the Nayak kings, on the other hand, called themselves Aiyar, which is now To this day exclusively the title of Saivite Brahmans. the cultivating Vellalas, the weaving Kaikolars, and the semi-civilised hill tribe of the Jatapus use equally the title of Mudali, and the Balijas and Telagas call themselves Rao, which is properly the title of Mahratta Brahmans. exercised. literature at Regarding the derivation of the words Shanan, Nadan and Gramani, much Shanan all. is ingenuity has been not found in the earlier Tamil In the inscriptions of Rajaraja Chola (A.D. 984-1013) toddy-drawers are referred to as Iluvans. According to Pingalandai, a dictionary of the loth or names of the toddy-drawer castes are To these the ChudaPalaiyar, Tuvasar, and Paduvar. mani Nikandu, a Tamil dictionary of the i6th century, century, the nth adds Saundigar. Apparently, therefore, the Sanskrit word Saundigar must have been introduced (probably by the Brahmans) between the nth and i6th centuries, and is a Sanskrit rendering of the word From Iluvan. Saundigar to Shanan is nqt a long step in the corruption The Shanans say that Shanan is derived of words. from the Tamil word Sanrar or Sanror, which means the learned or the noble. But it does not appear that the Shanans were ever called Sanrar or Sanror in any of the Tamil works. The two words Nadan and Gramani mean the same thing, namely, ruler of a country or of a village, the former being a Tamil, and the latter a Sanskrit word. Nadan, on the other hand, means a man who man who lives in the country, as opposed to Uran, the title resides in a village. The of the caste is 369 SHANAN it Nadan, and the villages. it seems most probable that refers to the fact that the Iluvan ancestors of the caste lived outside (South Indian Inscriptions, vol. II, part But, even if Nadan and Gramani both mean rulers, i.) it does not give those who bear these titles any claim If it to be Kshatriyas. did, all the descendants of the many South Indian Kshatriyas." " Poligars, or petty chiefs, would be Superintendent, 1891, states that the Shanans are in social position usually placed only a The Census above the Pallas and the Paraiyans, and are considered to be one of the polluting castes, but of late many little of them have put forward a claim to be considered Kshatriyas, and at least 24,000 of them appear as Kshatriyas in the caste tables. is This is, of course, absurd, as there riya. But at it is no such thing as a Dravidian Kshatby no means certain that the Shanans tribe, for were not one time a warlike we find traces of a military occupation among several toddy-drawing castes of the south, such as the Billavas (bowmen), Halepaik (old foot soldiers), Even the Kadamba kings of ' Kumarapaik Mysore are (junior foot). said to have The Kadamba tree appears to be been toddy-drawers. one of the palms, from which toddy is extracted. Toddythe special occupation of the several primitive tribes spread over the south-west of India, and bearing drawing is different names in various parts. They were employed and bodyguards, being ordinarily by former rulers as foot-soldiers ' noted for their fidelity.* The word Shanan is ; derived from Tamil saru, meaning toddy but a learned missionary derives it from san (a span) and nar (fibre or string), that is the noose, one span in length, used * Rice. Mysore Inscriptions, p. 33. vi-*4 SHANAN by the Shanans derivation It is is 370 in climbing palm-trees." The latter also given by Vellalas. worthy of note that the Tiyans, or Malabar toddy-drawers, addressione another, and are addressed by the lower classes as Shener, which form of Shanar.* is probably another The whole Shanans is story of the claims and pretensions of the out at length in the judgment in the case (1898) which was heard on appeal Kamudi temple And I may approbefore the High Court of Madras. set priately quote from the judgment. " There is no sort even suggests a probability that the Shanars are descendants from the Kshatriya or warrior castes of Hindus, or from the Nor is there Pandiya, Chola or Chera race of kings. of proof, nothing, say, that we may any distinction to be drawn between the Nadars and the ' ' Shanars. Shanar is the general name of the caste, just as Vellala and Maravar designate castes. Nadar is a assumed by certain members or families of the caste, just as Brahmins are called Aiyars, Aiyangars, and Raos. All Nadars are Shanars by caste, unless indeed they have abandoned caste, as many of them have by becoming Christians. title, mere more or less honorific, ' ' The Shanars have, as a class, from time immemorial, been devoted to the cultivation of the palmyra palm, and to the collection of the juice, and manufacture of liquor There are no grounds whatever for regarding them as of Aryan origin. Their worship was a form of demonology, and their position in general social estimation appears to have been just above that of Pallas, Pariahs, and Chucklies (Chakkiliyans), who are on all from it. hands regarded as unclean, and prohibited from the use * Madras Census Report, 1901. 

37 1 of the SHANAN Hindu temples, and below that of Vellalas, Maraclasses vans, and other the Hindu temples. admittedly free to worship in In process of time, many of the Shanars took to cultivating, trade, and money-lending, and to-day there is a numerous and prosperous body of Shanars, who have no immediate concern with their the immemorial calling of they own much caste. In many villages of the land, and monopolise the bulk of With the increase of wealth they the trade and wealth. have, not unnaturally, sought for social recognition, and to be treated on a footing of equality in religious matters. The conclusion of the Sub-Judge is that, according to the A^ama Shastras which are received as authoritative O by worshippers of Siva in the Madura district, entry into a temple, where the ritual prescribed by these Shastras is observed, is prohibited to all those whose profession the manufacture of intoxicating liquor, and the climbNo argument was ing of palmyra and cocoanut trees. is addressed to us to show that this finding we see no reason to think that it is so is . incorrect, . and . . No doubt many of the Shanars have abandoned their hereditary occupation, and have won for themselves by educarespectable positions as traders and merchants, and even as vakils (law pleaders) and clerks and it is natural to feel sympathy for their tion, industry and frugality, ; efforts to obtain social recognition, and to rise to ; what is regarded as a higher form of religious worship but such sympathy will not be increased by unreasonable and unfounded pretensions, and, in the effort to rise, the Shanars must not invade the established rights of other castes. They have temples of their own, and are numerous enough, and strong enough in wealth and education, to rise along their the institutions VI-24 B and without appropriating or infringing the rights of others, and in lines, own SHANAN 372 so doing they will have the sympathy of all right-minded men, and, if necessary, the protection of the Courts." In a note on the Shanans, the Rev. J. Sharrock " have writes * that they risen enormously in the social by their eagerness for education, by their large adoption of the freedom of Christianity, and by their Many of them have forced themselves thrifty habits. ahead of the Maravars by sheer force of character. scale They have still to learn that the progress of a nation, or a caste, does not depend upon the interpretation of words, or the assumption of a title, but on the character of the' individuals that compose it. Evolutions are hindered rather than advanced by such unwise pretensions resulting in violence but evolutions resulting from intellectual ; and will social development are quite irresistible, continue to advance by its own efforts if any caste path in the of freedom and progress." Writing in 1875, Bishop Cal dwell remarks f that the great majority of the Shanars who remain heathen wear their hair long and, if they are not allowed to " ; enter the temples, the restriction to which they are subject is not owing to their long hair, but to their caste, for those few members of the caste, continuing heathens, the who have adopted of the caste kudumi generally the wealthiest are as temples as those much precluded from entering the who retain their long hairs. A large the majority of the Christian Shanars have adopted kudumi together with Christianity." By Regulation XI, 1816, it was enacted that heads of villages have, in cases of a trivial nature, such as abusive language and inconsiderable assaults or affrays, power to confine the offending members in the village * Madras Mail, 1901. f I nd A nt -> IV l8 ?5- 373 

SHANAN choultry (lock-up) for a time not exceeding twelve hours or, if the offending parties are of the lower castes ; of the people, on whom it may not be improper to inflict so degrading a punishment, to order them to be put in the stocks for a time not exceeding six hours. In a case which that came before the High Court " it was ruled by " lower castes were probably intended those In a case which castes which, prior to the introduction of British rule, were regarded as servile. appeal before the High Court in 1903, it the Shanars belong to the lower classes, came up on was ruled that who may be punished by confinement in the stocks. With the physique of the Shanans, whom I examined at Nazareth and Sawyerpuram in Tinnevelly, and their skill in physical exercises I was very much impressed. of sports, which were organised in honour, included the following events : The programme my Fencing and figure exercises with long sticks of iron-wood (Mesua ferrea). Figure exercises with sticks bearing flaming rags at each end. Various acrobatic Feats tricks. with heavy weights, rice-pounders, and pounding stones. Long jump. Breaking cocoanuts with the thrust of a knife or the closed fist. Crunching whiskey-bottle glass with the teeth. Running up, and butting against the chest, back, and shoulders. Swallowing a long silver chain. Cutting a cucumber balanced on a man's neck in two with a sword. Falconry. SHANAN One 374 of the good qualities of Sir Thomas Munro, formerly Governor of Madras, was that, like Rama and Rob Roy, his arms reached to his knees, or, in other words, he possessed the kingly quality of an Ajanubahu, which is the heritage of kings, or those who have blue blood in them. I This particular anatomical character have met with myself only once, in a Shanan, whose 173 21 cm.). height was (-{- and span of the arms 194 cm. Rob Roy, it will be remembered, could, cm. without stooping, tie his garters, which were placed two inches below the knee. For a detailed account of demonolatry among the Shanans, I would refer the reader to the Rev. R. Tinnevelly (afterwards Bishop) Caldwell's now scarce Shanans (1849), written when he was a young and impul' ' sive missionary, and the publication of which I believe that the learned and kind-hearted divine lived to regret. Those Shanans who are engaged in the palmyra (Borassus flabellifer) forests in extracting the juice of the palm-tree climb with marvellous activity and dexterity. a proverb that, if you desire to climb trees, you must be born a Shanan. A palmyra climber will, it has been calculated, go up from forty to is There fifty trees, each forty to is The story told by high, three times a day. Bishop Caldwell of a man who was fifty feet sitting upon a leaf-stalk at the top of a palmyra palm in a high wind, when the stalk gave way, and he came down to the ground safely and quietly, sitting on the leaf, which served the purpose of a natural parachute. Woodpeckers are called Shanara kurivi by birdcatchers, The Hindus," because they climb trees like Shanars. the Rev. (afterwards Canon) A. Margoschis writes,* * Christianity " and Caste, 1893. 375 " SHANAN observe a special day at the commencement of the palmyra season, when the jaggery season begins. Bishop Caldwell adopted the custom, and a solemn service church was held, when one set of all the implements used in the occupation of palmyra-climbing was brought to the church, and presented at the altar. in Only the day was changed from Hindus. that observed by the The perils of the palmyra-climber are great, fatal and there are many accidents by falling from trees forty to sixty feet high, so that a religious service of the kind was particularly acceptable, and peculiarly appropriate to our people." The conversion of a Hindu into a Christian ceremonial rite, in connection with In the dedication of ex votos, is not devoid of interest. a note * on the Pariah caste in Travancore, the Rev. Mateer narrates a legend that the Shanans are descended from Adi, the daughter of a Pariah woman at Karuvur, who taught them to climb the palm tree, and S. prepared a medicine which would protect them from The squirrels also ate some falling from the high trees. of it, and enjoy a similar immunity. It is recorded, that in the Gazetteer of " the Madura Shanan toddy-drawers employ Pallans, Paraiyans, and other low castes to help them transport the liquor, but Musalmans and Brahmans have, in district, several cases, sufficiently set aside the scruples enjoined by their respective to liquor own Musalmans at least) to serve their customers with their own hands." In a recent note,t it has been stated that " against dealings in potent retail shops, and (in the case of some faiths L.M.S. Shanar Christians have, in many cases, given up tapping the palmyra palm for jaggery and toddy as a * Journ. Roy. As. Soc., XVI. t Madras Mail, 1907. SHANAN ; 376 profession beneath them and their example is spreading, so that a real economic impasse is manifesting itself. The writer knows of one village at least, which had to send across the border (of Travancore) into Tinnevelly to procure professional tree-tappers. Consequent on this want of professional men, the palm trees are being cut down, and this, if done to any large extent, will impoverish the country." In the palmyra forests of Attitondu, in Tinnevelly, I came across a troop of stalwart Shanan men and boys, marching out towards sunset, to guard the ripening cholum crop through the night, each with a trained dog, with leash made of fibre passed through a ring on the neck-collar. The leash would be slipped directly the dog scented a wild pig, or other nocturnal marauder. Several One of the dogs bore the marks of encounters with pigs. of the party carried a musical instrument ' ' made of a bison The horn picked up in the neighbouring jungle. Shanans have a great objection to being called either Shanan or Marameri (tree-climber), and much prefer Nadan. By the Shanans of Tinnevelly, whom I visited, the following five sub-divisions were returned 1. : Karukku-pattayar (those of the sharp sword), which is considered to be superior to the rest. In the Report, 1891, the division Karukku-mattai (petiole of the palmyra leaf with serrated edges) was Some Shanans are said to have assumed the returned. Census name of Karukku-mattai Vellalas. Kalla. Said to be the original servants of the Karukku-pattayar, doing menial work in their houses, 2. and serving as palanquin-bearers. 3. Nattati. Settled at the village of Nattati near Sawyerpuram. 377 



4. SHANAN Derived from kodi, a flag. Standard-bearers of the fighting men. According to another Kodikkal. version, the word means a betel garden, those who were betel cultivators. 5. in reference to Mel-natar (mel, west). Those who in live in the western part of Tinnevelly and Travancore. At the census, 1891, Konga (territorial) and Madurai were returned as sub-divisions. The latter apparently receives its name, not from the town of Madura, but from a word meaning sweet juice. At the census, 1901, Tollakkadan (man with a big hole in his was taken as being a sub-caste of Shanan, as who returned it, and sell husked rice in Madras, used the title Nadan. Madura and Tinnevelly are eminently the homes of dilated ear-lobes. Some Tamil traders in these two districts, who returned ears) the people themselves as Pandyan, were classified as Shanans, as Nadan was entered as their title. In Coimbatore, some Shanans, engaged as shop-keepers, have been to adopt the title known name of Chetti. In Coimbatore, too, the title, or elder, meaning headman Ambalakaran, Valayan, and other castes. In the Sudarman, Senaikkudaiyan, Tanjore Manual, the Shanans are divided into Tennam, Panam, and Ichcham, according as they tap the cocoa- Muppan is occurs. This also used by the nut, palmyra, name or wild date (Pkcenix sylvestris). The Enadi for Shanans is derived from Enadi Nayanar, a Saivite saint. But it also means a barber. The community has, among owners, and graduates in the arts. Nine-tenths of the Native clergy in Tinneare said to be converted Shanans, and velly Tinnevelly claims members, landtheology, law, medicine, and its Native missionaries working Natal, Mauritius, and the Straits. in Madagascar, occupations The SHANBOG of those 37 8 I whom saw at Nazareth were merchant, culti- vator, teacher, village munsif, organist, cart-driver, and cooly. The Shanans have established a school, called Kshat- This is a riya Vidyasala, at Virudupati in Tinnevelly. free school, for attendance at which no fee is levied on the pupils, for the benefit of the Shanan community, It is but boys of other castes are freely admitted to it. maintained by Shanans from their mahimai fund, and the teachers are Brahmans, Shanans, etc.

பள்ளர் வேறு? பறையர் வேறு இனமா?


பள்ளர்களும் பறையர்களும் தொன்று தொட்டு தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் தமிழக சாதிய வகைபட்டியலில் தாழ்த்தபட்ட வகுப்பாக உள்ளனர்.இவர்களை பள்ளுபறை என்றே சேர்த்து அழைப்பதை தொன்றுதொட்டு அழைத்து வருகின்றனர்.இவர்கள் இருவரில் பறையரை பற்றியே கல்வெட்டு மற்றும் குறிப்புகள் வருகிறது ஆனால் பள்ளர்களை பற்றி அதிக கல்வெட்டுகுறிப்புகள் இல்லை.இதில் பள்ளர்கள் தம்மை மள்ளர் என புதிதாக ஒரு பெயரை புனைந்து தம்மை மூவேந்தர் இனம் என கூறிவருகிறார்கள்.இருவரும் வேறு வேறு இனத்தவர்களா அல்ல ஒரே இனத்தவர்களா என இக்கட்டுரையில் பார்ப்போம்.

பறையர்(விக்கிபீடியா):
முதலில் பறையரை பார்ப்போம் இவர்களை பற்றியே அதிக குறிப்புகள் வருகிறது.உன்மையில் மள்ளர் என்பவர்கள் தொல் குடியான பறையர்களே இவர்களை துடியன்,பானன்,வள்ளுவன்,வேளாளன் என்று அழைப்பது வழக்கம்.அவர்களே கவனியுங்கள்,இவர்கள் மருத நிலத்து உழுகுடியான் வேளாளர்கள். அவர்களை பற்றி தென் தமிழகத்தில் சாம்பவர் என்றும் அழைக்கப்பட்டாலும், இவர்கள் தங்களை [மறையர்] வள்ளுவ வேளாளர் /ஆதி திராவிடர் என்றே அறியப்பட விரும்புகின்றனர். 
உழப்பறையர், தேவேந்திரப் பறையன்
என்ற உட்பிரிவுகளையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.காலடிப்பறையன்(வடஆர்க்காடு,செங்கள்பட்டு மாவட்டம்)சோழர் கால கல்வெட்டுக்களிலும் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Castes and Tribes of Southern India: Volume III—K

  1. www.gutenberg.org/files/42993/42993-h/42993-h.htm   Cached
    Project Gutenberg's Castes and Tribes of Southern India, ... 
  2. Kalti (expunged).—A degraded Paraiyan is known as
  3.  a Kalti.


பறைச்சேரி (தெ.இ.க;4,க.எ.529;52,81,83) (தெ.இ.க;26, க.எ.686)
மேலைப்பறைச்சேரி (தெ.இ.க. தொகுதி2, க.எ.5)
என்று வரும் வரிகள் இதற்குச் சான்றாகும். மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686) பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151) என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. மன்னராட்சிக்காலத்தில் ஒவ்வொரு சாதியினரும் தனித்தனிக் குடியிருப்புகளில் வசித்து வந்ததையும் அதற்கு தலித்துகளும் விதிவிலக்கல்ல என்பதும், சேரி என்ற சொல் இழிவான பொருளில் வழங்கவில்லை என்பதும் இக்கல்வெட்டுச் சான்றுகளால் தெரியவருகின்றது.

தீண்டாச்சேரியும் பறைச்சேரியும் என்று சோழர்காலக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. (தெ.இ.க.II;4) இதனால் பறையர்கள் அனைவருமே தீண்டப்படாதவர்களாகக் கருதப்படவில்லை என்று கருத இடமுள்ளது. சிலர் இன்த தீண்டாச்சேரி என்பது பிறரை தீண்டா(தாக்காத) மக்கள் வாழுகிற சேரி என பொருள் கொள்வோரும் உண்டு.


இந்திரன் எனற தேவேந்திரன் தமிழ் கடவுளா? 
பள்ளர்கள் அனைவரும் வேளாளர்களை போல் இந்திரக் கடவுள்இனத்தவர் என்று தற்போது கூறுகிண்றனர்.இந்திரன் தமிழ் கடவுளா என்பதை முதலில் பார்ப்போம்.சில தமிழ் அடிவருடிகள் அரைகுரை புத்தக ஞானத்தில் இந்திரன் தமிழ் கடவுளே என்று கூறுவர்.இதற்கு ஆதாரமாக திருக்குறளில் வரும் "இந்திரனே சாலும் கரி" என்று சாட்ச்சியம் காட்டுவர்.அதே போல் மனிமேகலை,சிலப்பதிகாரத்திலும் இந்திரன் பற்றிய குறிப்பு வரும்.இம்மூன்றும் சமன,பவுத்த காவியமாகும். இம்மூன்றின் காலம் 2300 ஆண்டுகள் என சிலர் கூறலாம்.ஆனால் அதற்கு முன்னே ஆரியர்களின் வேதங்களான ரிக்,யஜுர்-ல் இந்திரன் பற்றி குறிப்பு வரும் இது 4000 வருடங்கள் உடையதாகும்.ஆரியர்கள் இந்தியாவுக்குள் வரும்போது சிவ,சக்தி,விஷ்னு தெய்வங்களை கொண்டுவரவில்லை. ஆரியர்களின் முழு முதற் கடவுளாக இந்திரனே இருந்துள்ளார். எனவே இந்திரவழிபாடு மேற்கு உலகத்தில் இருந்து வந்தது தெரியவருகிறது. அப்போது இந்திர வழிபாடு மேற்கு உலகத்தில் என்ன முறையில் வழிபட படுகிறது என பார்ப்போம்.
ஜீயூஸ்(ZEUS):
இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான்.இவரே கடவுள்களுக்கெள்ளாம் தலைவன்.இவர் ஆயுதமாக இடிமின்னலை கொண்டவர் ஆதாவது இந்திரன்(வஜ்ராயதம்) போல.இந்திரனின் கதைகளில் வருவதைப்போல பிற கடவுள்களின் மனைவியரை கவர்வது.பல கன்னியரை புனர்ந்து பல பிள்ளைகலை பெறுவது போல கதைகள் கிரேக்க புரானங்கள் கூறுகிறது.பள்ளர்கள் கூறுவது போல நெல் விவசாயமோ(அ)நாகரிகமே அறியாத நாடு கிரேக்கம்.இது மலைகளும் காடுகளும் உடையது.எனவே தமிழர்களோ வேளாளர்களோ இந்த பகுதியில் வாழ்ந்ததுக்கு எந்த சாட்ச்சியம் கிடையாது.கிரேக்கநாகரிகம் 4000 வருடம் பழமையானது.
ஜூப்பிடர்(JUPITER):
இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான் ரோமானிய கடவுள் ஜூப்பிடர்.இங்கும்.நெல் விவசாயமோ(அ)நாகரிகமே அறியாத நாடு கிரேக்கம்.இது மலைகளும் காடுகளும் உடையது நாடுதான்.ரோம நாகரிகமும் கிரேக்க நாகரிகம் ஒன்று தான்.
தோர்(THOR):
இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான் ஜெர்மானிய கடவுள் தோர்.இங்கும் நெல் விவசாயமோ கிடையாது. எனவே நாம் மேற்க்கோள் காட்டிய ஐரோப்பிய நாடுகளில் கிறித்துவம் பரவும் முன்னர் இந்திரவழிபாடு தான் இருந்தது என்றும்.ஆரியர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதில் இந்திர வழிபாட்டை இந்தியாவிற்கு அறிமுக படுத்தியவர்கள் ஆரியர்களே என்று உறுதியாகிறது. இந்திரன் மழைக்கான கடவுளாக கருத்ப்படுகிறான்.இந்திரன் வஜ்ராயதம்(இடி) தாக்கி மழை வருவதாக நம்பபடுகிறது.எனவே உழவர்களான விவசயிகள் இந்திரனை வழிபடும் வழக்கம் இருந்தது.வேளாளர்கள் பிரபுக்களான் முதலி,ஆண்டை,பன்னையார் போன்ற நிலப்பிரபுக்களிடம் பன்னை அடிமையாக தொழில் பார்த்தவர்கள் பள்ளர்கள் எனவே தம்மை பன்னாடி என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது.பள்ளர்களும் வேளாள்ர்கள் போல தான் இந்திரனை மூலாதாரமாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைத்து கொண்டுள்ளனர்.வேளாளர்கள் தம் பண்ணைகளில் பள்ளர்களையே கூலிக்கு அமர்த்தியிருந்~ தனர் என்றும் இவர்஖ளைப் பாண்டிய மண்டலத்திற்கு வேளாளர்களே கொண்டு வந்து குடியமர்த்தினர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதைக் கூறுபவர் எட்கார்தர்ஸ்டன் The Pallans are said by some to have sprung from the intercourse of a Sudra and a Brahman woman. Others say Devendra created them for the purpose of labouring in behalf of Vellalans. Whatever may have been their origin, it seems to be tolerably certain that in ancient times they were the slaves of the Vellalans, and regarded by them merely as chattels, and that they were brought by the Vellalans into the Pandya-mandala." Some Pallans say that they are, like the Vellalans, of the lineage of Indra, The name is said to be derived from pallam, a pit, as they were standing on low ground when the castes were originally formed. It is further suggested that the name may be connected with the wet cultivation((caste anda tribes of edgar thurston))
பள்ளர்கள் என்பவர்கள் மட்டுமே சுத்த தமிழினமா? 
பள்ளர்களும் பல்வேறு மாநிலத்தில் பல்வேறு பகுதியில் அந்த மாநிலத்தின் குடிகளாக மாநில மொழியே பேசுகின்றனர்.
ஆந்திர பள்ளர்கள்:
அந்திர மாநிலத்தில் பள்ளர்கள் மலாஸ் என்ற மள்ளா இனத்தவராக அறியப்படுகின்றனறர்.Mala or Malla (different from the family/last name Malla from Andhra) is a social group or caste mostly from the south Indian state of Andhra Pradesh
, Paraiyar and Pallar, tend to claim the inter-relation with the Malas, Mahars and Pulayas.
வடுக பள்ளர் 
==============

பள்ளர்கள் தங்களை வடுக பள்ளர் எனவும் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் எனவும் பழனி கோவில் செப்பேட்டில் தங்களை கொணர்ந்து பழனிக்கு குடியேறியது பழனி நாயக்கர்கள் தான் என குறிப்பிட்டுள்ளனர்

கேரள பள்ளர்கள்:
கேரள மாநிலத்தில் பள்ளர்கள் செருமார்கள் என்ற சேரிமார்கள் என அறியப்படுகின்றன.
கர்நாடகா பள்ளர்கள்:
கர்நாடகா மாநிலத்தில் பள்ளர்கள் கோலியாஸ் என்று அறியப்படுகின்றனர். Malas(pallars), who were considerable in number, were mostly agricultural workers like Holeyas in Karnataka. And it has been pointed earlier, some of them were employed village messengers (Maskoori or Elodu) and some as watchmen of the village chavadi by the middle of Twentieth century.
மராட்டிய பள்ளர்கள்:
மராட்டிய பள்ளர்கள் மகர் என்ற பெயரில் அறிய படுகிண்ரனர்.here is a strong ethnic, cultural and linguistic relation with Mahar in neighboring Maharastra state and with Pallan -similar to Madiga and Paraiyan -similar to MALA community of Tamil Nadu and Kerala, Karnataka states as well.
நாம் மேற்க்கோள் காட்டிய இனம் எல்லம் அந்த மாநிலத்தில் தாழ்த்தபட்ட வகுப்பாகவே உள்ளது.எனவே பள்ளர்கள் தமிழ் இனத்தவர்கள் என்பது கட்டுக்கதையே.

மூவேந்தரில் யார் பள்ளர்கள்? 
இன்று மூவேந்தரும் பள்ளர்கள் என கூறிவரும் இவ்வேளையில் மூவேந்தரில் யார் பள்ளர்கள் என்பதை பார்ப்போம்.
சேரன்:
சேரனை மலையன்,வானவன்(வானைமுட்டும் மலையினை உடையவன்),வெற்பன்,சேரன்(மலைநாட்டிற்கு சிகரத்தை போன்றவன்) போன்ற பல பெயர்களில் கூறுகிறார்கள்.சேரனின் முத்திரை வில்.உலகத்தில் உள்ள அனைத்து வில் மலை  மக்களின் சின்னமும் வில் தான்.வேளிர் என்ற சேரர்குடி குறுனிலை மன்னர்களும் வில் மன்னர்கள் தான்.சேரநாடு மலை வளங்களும் மலைப்பொருட்களும் அதிகமாக கிடைக்கும் நாடு அங்கு நெல் விவசாயம் குறைவே.சேரன் ஏர்பூட்டி உழுததாக எந்த இலக்கியமும் கூறவில்லை.என்வே சேரர்களுக்கும் பள்ளர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
பாண்டியன்:
பாண்டியனை மாறன்,கடற்க்கோமான்,மீனவன்,கடலன் வழுதி,தென்னவன்,வைகைதுறையன் போன்ற கடல் ஆளுமை சார்ந்த பெயர்களாகவே சங்க இலக்கியத்தில் குறிப்பிடபட்டுள்ளது.பாண்டியன் சின்னம் மீன். மேலே சொன்ன அனைத்தும் நெய்தல் நிலத்தை குறிப்பவை என்வை இங்கும் விவசாய்த்திற்கு வழியே இல்லை.நெய்தல் நிலத்திற்கும் பள்ளகுடிக்கும் சம்பந்தமே எங்கும் கான கிடைக்காது. எனவே பாண்டியனும் பள்ளனாக இருக்க் வாய்ப்பில்லை.

சோழன்:
இறுதியாக சோழன் இவை அதிகமாக் செம்பியன் ,சூரிய குலத்தை சார்ந்ததாக குறிக்கபட்டுள்ளது.சூரிய குல பள்ளர்கள் எங்கும் இருப்பதாக தெரியவில்லை.மேலும் சூரியன் தேவேந்திரகுலத்தவனாக புரானமும் கூறவில்லை எனவே சோழனும் பள்ளனாக இருக்க வாய்ப்பில்லை.எனவே மேலே எ-டு காட்டி உள்ள மூவரும் பள்ளனாக எவரும் இது நாள் வரை கருதவில்லை.

சோழர் காலத்திலேயே பள்ளர் வரி தொடங்கி விட்டது:

TANJAVUR BRIHADHISWARA TEMPLE INSCRIPTIONS
INSCRIPTIONS ON THE WALLS OF THE CENTRAL SHRINE
No. 95. On the outside of the north enclosure.[1]
This record begins with the prasasti Tirumannivalara, etc., of the king.
It records the gift of 150 cows to the temple of Tirukkalatti-mahadeva by Chalukkiyakalakalan Kalappiriyan, the kankani-nayakam of Arrur-nadu.  The cows were distributed in the presence of Velipak-kilan Koyilmarayan, the Srikaryam and devarkanmigal of the temple, at the instance of the donor, among the shepherds Pallan Sattan, Pallan Sanan, Totti Madhavan . . . . . . . . . . tta-kon, and Sangan Alinjil, 30 a piece, stipulating the daily supply by each of them of 1 ulakku of ghee measured by Arumolidevan nali.  And another (2) endowment of 9 anradu narkasu, paid into the temple treasury by Vallan Kilan Sadangavi Soman of Pungunram in Tirumunaippadi for the supply of 1 alakku of ghee out of the interest on the endowed amount for mantradipam, andikkappu and tiruvalatti.
 [To the shepherd Pallan[29]].................. [residing] at Sri-Parantaka-chaturvedi[mangalam], a free village in Rajendrasimha-valanadu, were assigned ninety-six ewes in all, (viz.) seventy-two cases out of the ewes given by the [Pe]rundaram Lokamarayan for the sacred lamps (which he) had (vowed) to put up “(in case) no filth was thrown (on) him in the war of the lord Sri-Rajarajadeva at Kori ;” and twenty-four ewes, (which could be got) for the eight kasu given out of the money deposited, for sacred lamps, by the royal secretary, Karayil Eduttapadam, the headman of Rajakesarinallur. From (the milk of these ninety-six ewes) he himself and his dependents, (viz.) his uterine brothers Pallan Kuttan and Pallan Kiran ; his nephew Mugatti Eruvan ; and the shephered Modan Tiran, living at Sri-Parantaka-chaturvedimangalam, a free village in Rajendrasimha-valanadu, have to supply (oneurakku of ghee per day, for one sacred lamp, by the Adavllan (measures).
மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686)

பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151)

என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சோழர் காலத்தில்பள் வரி, பறை வரி
என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்துவிலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து

பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.

விக்கிரம கேசரி சதுர்வேதி மங்கலம்:
முதற்குலோத்துங்கனின் கல்வெட்டு(117)
விக்கிரம கேசரி சதுர்வேதி மங்கலத்தின் பிராமணர் ஒருவர் விளக்கு எரிப்பதற்கு 64 காசுகள் கொடை வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகின்றது.சிதைந்த நிலையில் காணப்படும் இரண்டாம் பாண்டிய பேரரசின் கற்ப்பொருப்பில்(கல்வெட்டு550)
"இப்பிரமதாயத்தின் புறஞ்சேரியிலிருக்கும் பள்ளரும்,பிடாகையிளிருக்கும் பள்ளரும் கற்றளேரி குளத்தை
செப்பனிடும் பணியை மேற்கொண்டமைக்காக சபையார் அன்னர்க்கு வழங்கிய பரிசில்" கூறப்படுகின்றது.
இதற்க்கு பின்னர் காணப்படும் சக ஆண்டு 1227 மற்றும் ஸ்க ஆண்டு 1313 இரு கல்வெட்டுகளிலும்(687,777) சபா குறித்த செய்தி காணப்படவில்லை.


புதுக்கோட்டை மாவட்டம்:

13-ஆம் நூற்றாண்டுக்குரிய திருவரங்ககுள கல்வெட்டு(434) மற்றும் குலசேகர பாண்டியன் பெருஞ்சுனையூர்
கல்வெட்டு(561)...
" ஆலயத் திருப்பனி செய்ய நிதிப்பற்றாக்குறை காரணமாக குடிநீங்காத் தேவதனமாக விற்க்கபட்ட நிலத்திற்கு பள்ளிப்பேறு பள்ளர் பெற்ற பண்டம் ஆகிய செலவினங்கள் பொதுவில் இட்டு(நில உடைமையளரும் உழுகுடியும் சமமாய் செலவிட்டு) ஐந்தில் மேல்வாரம் அளக்க வேண்டும்"

In the Thiruthuraipoondi inscription No.204, (Tamil Nadu Archaeology Department) pertaining to cholas period says as follows :-

"வண்ணார் பள்ளர் பறையர் உள்ளிட்டாரும்"

In the Madurai, Melur (keeranur) inscription (S.I.I. Vol-V, No.273) pertaining to Kulotunga chola-III says as follows :-

" இட்ட நிலம் கொங்கூர் குளத்துக் கிழைத்தூம்பில் எல்லைகளில் 
பள்ளக் கவருக்கு தெற்கும் மன்றாடி சோழ கொந் செய்க்கு வடக்கும்" 

In the Thiruthuraipoondi inscription No.1, (Tamil Nadu Archaeology Department) pertaining to pandiyas period says as follows :-

"வடபாற் எல்லை பள்ளன் ஓடை"

During the Kulasekara Pandiya period of 13th century, the inscriptions says as follows :

"இவ்வூர் குடும்பரில் பெரிய தேவப் பள்ளன்"



(Seminar on Hero-stones, Editor R. Nagaswamy (page-77) published by the State Department of Archaeology, Govt of Tamil Nadu - 1974).

In 1229 A.D., (Maravarman Sundara Pandya) the Nadu of Kana-nadu, the Nagaram, the Grama, Vanniyar and the Padaipparru's agreed to levy per capita on all the land holders as given below :-

For Brahmins, Chettis, Vellalas 1/2 Panam
for Minors 1/4 Panam
for Garrisons 1/4 Panam
for Parayars & Pallars 1/8 Panam 

It shows Brahmins, Chettis and Vellalas were held equals and from the manual labourers like Pallas and Paraiyas 1/4 of what was levied from others (Kudumiyamalai) was collected.

"பறையர் பள்ளர் பெர் ஒன்றுக்கு பணம் அரைக்காலும்"

(Tamil Coins a study, Dr. R Nagaswamy, Page - 107 & 108. Published by Institute of Epigraphy, Tamil Nadu State Department of Archaeology - 1981) &
Inscriptions of the Pudukottai State (I.P.S), Inscription No.561. (Kudumiyanmalai Inscription).

In the Thiruvallur District, Kuvam thirupuranthaka Eswarar koil inscription (1296 A.D), pertaining to "Thiribuvana Vira Ganda Gopala Devar (Telugu Chola) says as follows :-

"வைத்தாந் பள்ளநும்"
"இவை பள்ளன் எழுத்து" (S.I.I. Vol-XXVI, No.354).

In the Trichirapalli District Tiruppalatturai inscription says as follows :-

"புலை அடியாரில் முன்னால் நங்கைபுரத்தில் பாட்டத்தில் நின்ற 
புலை அடியாராய் உடையார் கம்பண உடையார் காரியப்பெர் 
சந்த்ரசர் விற்க நான் கொண்டு உடையெனான சாதனப்படியால் 
உள்ள பள்ளன் பிறவியும் இவன் பள்ளி அழகியாளும் இவன் மகன் நம்பாளும் இவன் தம்பி 
வளத்தானும் இவன் தம்பி தாழியும்" (S.I.I. Vol-VIII, No.590). 

In the Pudukkottai Thirumayam, Karaiyur Sundara Raja Perumal koil inscription pertaining to the king "Virupakshirayar" of 14-15th century A.D says as follows :-

"வலையர் ஆடிக்கு ஒரு கூடு முசலும் காத்திகைக்கு 
ஒரு கூடு முசலும் இடையர் பால் நெய்யும் பறையர் 
ஆடிக்கு இரண்டு கொழியும் காத்திகைக்கு இரண்டு 
கொழியும் பள்ளர் ஆடிக்கு இரண்டு கொழியும் 
காத்திகைக்கு இரண்டு கொழியும்" (I.P.S. Ins. No. 715)

In the Pudukkottai Thirumayam, Ilambalakudi Madavira Vinayagar koil inscription of 16th century says as follows :-

"இலம்பலக்குடியில் பள்ளற்கும் பறையற்கும் 
விருது சண்டையாக காஞ்சிபுரத்துக்குப் போய்
கல்வெட்டுப்"

"இலம்பலக் குடியில் பறையற்கும் 
பள்ளற்கும் சண்டை" (Avanam-15, July-2004, Page-31&32)

In the Pudukkottai Thirumayam, Karaiyur Thirumanganeeswarar koil inscription of 16th century says as follows :-

"காத்திகைக்கு இடையன் ப.ல் நெய்யும் ..
வலையன் முசலும் பள்ளன் கொழியும்
பரையன் கொழியும் ஆக இந்த சுவந்திரம்" (I.P.S. Ins. No.843)

In the Pudukkottai Thirumayam, Thekkattur Agatheeswarar koil inscription of 16th century says as follows :-

"தெற்காட்டூராக அமைந்த ஊரவரொம்
மேற்படியூற் பள்ளற்கும் பறையற்கும் 
பள்ளற்கு தவிலும் முரெசும் செமக்கலமும் 
நன்மை தின்மை பெருவினைக்குங்கொட்டி 
பொக கடவராகவும் பறையர் அஞ்சு கா" (I.P.S. Ins. No. 956)

In the Pudukkottai Thirumayam, Mellathanayam Mariamman koil inscription of 16th century says as follows :-

"வீர சின்னு நாயக்கரவர்கள் பள்ளருக் குச்சிலா 
சாதனங்கட்டளையிடப்படி பள்ளர் பறையர் 
இருவகைப் பெருக்கும் வெள்ளானை 
வாழை கரும்பு உண்டில்லை யென்று
விபகாரம் நடக்குமிடத்தில் பள்ளர் இந்த 
விருது தங்களுக் யெல்லாமல் பறையருக்கு 
இல்லை யென்று நெய்யிலெ க்கை பொடுமிடதில்
பள்ளருக்கு க்கைக்கு சுடாமல் வெற்றியான 
படியினாலெ" (I.P.S. Ins. No. 929)

In the above said inscriptions, the "Pallar Community people" and "Paraiyar Community People" were placed together. In one of the inscription, the "Pallar Community People" referred as "Pulai Adiyars"

பெருவாயில் நாட்டு பெருஞ்சுனையூரில் உள்ள கல்வெட்டு:
கல்வெட்டு(561)

"பெருவாயில் நாட்டு பெருஞ்சுனையூரில் சிவாலயத்திருப்பனிக்குரிய செலவிற்கு ஒற்றி வைக்கப்பட்ட தேவதான நிலத்திற்கு மேல்வார அளவு கூறுகையில் பள்ளி பேறு பள்ளன் பெறும் பண்டம் ஆகியன் பொதுவில் ஏற்று கொள்ளப்பட வேண்டும்" என கூறப்படுகின்றது.இங்கு பள்ளித்தியர் பள்ளர் ஆகிய வேளான் தொழிலாளர்கள் சுட்டப்படுகின்றனர்.வர்மன் குலசேகர பாண்டியனின் வாராப்பூர் கல்வெட்டு மற்றும் மேலூர் கல்வெட்டு:


நாம் மேலே காட்டிய பள்ளர்கள் வரியிலிருந்து அவர்கள் சேரி வாழ் தாழ்த்த பட்டவர்கள் என்பது சோழர்கள் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருப்பது தெள்வாகின்றது எனவே ராஜ ராஜ சோழ தேவந்திரர் என்பது கட்டுக்கதையே..
நாயக்கர் கால பள்ளுபறை வரி:

நாயக்கர் காலத்திலும் அதன் பின்பு சேதுபதி தொண்டைமான் செப்பேடுகளில் பள்ளுப்பறை இறை என்ற பொது வரியே பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் வித்திக்கபட்டது.புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர். 3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)பள்ளுப்பறை...சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது(மேலது, 142)13-ஆம் நூற்றாண்டு 

கண்டதேவி ஹிஜிரா கல்வெட்டு புலையர்,பாணர்,பள்ளர்,பறையர் ஆகிய கீழ் சாதிகள் என குறிப்பிடபட்டுள்ளது.
ஹிஜிரா கல்வெட்டு எண் : 771(கிபி 1300 இல் இருந்து 1330 க்குள்)
இடம் : கண்டதேவி படி எடுக்கப்பட்ட ஆண்டு அல்லது பதியப்பட்ட ஆண்டு -1921
மதுரையில் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி 1290 களில் துவங்குகிறது.(சுந்தர பாண்டிய தேவர்) சுல்தான்கள் மதுரையை தாக்கி பாமினி ஆட்சியை நிறுவுகிறார்கள்.பாண்டிய மன்னர்கள் தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்ய துவங்கிறார்கள். ஆனாலும் காரைக்குடி,திருப்பத்தூர்,தேவகோட்டை பகுதி கள்ளர்களில் சிலர் , ஆங்காங்கே சுல்தான்களின் படையை தாக்கியும்,சூறையாடியும் பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கோபம் கொண்ட சுல்தான் மறவர் படைகள்  வாழ்ந்த கண்டதேவியை ஆண்ட சூரைக்குடி என்னும் விஜயாலயத்தேவரின் வன்னிய சூரைக்குடியை தாக்கி பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கத்தி முனையில் இனிமேல் சுல்தான் ஆட்சியை எதிர்த்து தாக்குதல்,சூறையாடல் நடத்த மாட்டோம் என்று கள்ளர், கருமார்,உள்ளிட்டோர் முன்னிலையில் ஒப்பந்தம் கல்வெட்டாக பெறப்படுகிறது.அப்படி ஒப்பந்தத்தை மீறினால் கீழ்காணும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம் என்பது தான் கல்வெட்டு. 1) எங்கள் மீசையை மற்றும் தாடியை மழித்து கொள்கிறோம். 2) எங்கள் மனைவியை ஒப்படைக்கிறோம். 3) புலையர்,பாணர்,பள்ளர்,பறையர் உள்ளிட்ட
கீழ்சாதியினர் எங்களை பெண் ஓவியமாக வரைந்து அவர்களின் குழந்தைகளின் காலில் கட்டி சுத்தட்டும். என கல்வெட்டு முடிகிறது.
என கல்வெட்டு முடிகின்றது.








புலையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல்தேடல்
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புலையர் எனும் பழங்குடியின மக்கள் வாழுகின்றனர். இவர்கள் வேட்டையில் கிடைக்கும் இறைச்சி, மற்றும் காய், கனி, கிழங்கு வகைகளை உண்பர். புலையரது தலைவனுக்கு கணியன் என்று பெயர். இவர்களிடையே குடும்பி, குள்ளன், மல்லன், குடியன் என்னும் பிரிவுகளும் உள்ளன. சித்திரை மாத முழுநிலவு நாளில் விழா கொண்டாடுகின்றனர். திருமணவிழாவில் கற்பூரவல்லி என்று வாசமுள்ள செடிக்கொத்தொன்று மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. பெண்களிடம் பித்தளை மோதிரமும், கண்ணாடி வளையல்களும் அணியும் வழக்கம் பரவலாக உள்ளது

பள்ளரின் பட்டங்கள்:குடும்பன் இங்கே குடும்பி என்றுள்ளது.
மல்லன் மள்ளன் என்ற பட்டமும் பள்ளரிடம் உள்ளது அதையும் அறிவோம்.குடியன் குடி அடிமை என்றும் அறிவோம்.ஆனால் இந்த குள்ளன் யார்?
குள்ளன்=பள்ள்ன்?கணியர் என்பது பறையரில்  வள்ளுவரைக் குறிக்கும்.

பறையர்களின் பல்வேறு பிரிவுகள்:
பறையர்கள் பற்றியே பல்வேறு செய்திகளும் குறிப்புகளும் நமக்கு கிடைக்கின்றன.முற்காலத்தில் பறையர்கள் தீண்டதகாதவர்களாக சமூகம் கருதவில்லை அவர்கள் பல்வேறு தொழில் செயிது வந்தனர்.இன்று பறையரில் பல்வேறு பிரிவினர் புதிய இனமாக மறுவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கோலியப் பறையர்:
இவர்கள் தற்போது செங்குந்த முதலியார் என்ற நெசவாளர் வகுப்பாக அறியப்படுகின்றனர்.
சாலியப்பறையர்:
இவர்களும் தற்போது சாலியர் என்ற என்ற நெசவாளர் வகுப்பாக அறியப்படுகின்றனர்.
இலங்கையை பொருத்தவரை பள்ளர்கள் சிங்களர்களின் உட்பிரிவாகவும் பிரதேமெடுத்தல்,பாணிய வழங்குதல் போன்ற கரும காரியங்களை செய்வதாகவும் இந்திரனான சிங்கள விஜயனை மூதாதயராக கூறும் இவர்களை பாவணர் போன்ற (பாதிபள்ளர்) இணத்தவரின் முயற்சியில் தான் இன்று தமிழர் என கூறிவருகின்றனர் என்பது தமிழ் ஈழ கருத்து.


உழுப்பறையர்:
இவர்கள் தான் தற்போது பள்ளத்தாக்குகளில் வாழும் விவசாய கூலிகளான பள்ளர்கள் என தெரிய வருகிறது.Pallans say that they are, like the Vellalans, of the lineage of Indra, The name is said to be derived from pallam, a pit, as they were standing on low ground when the castes were originally formed.இருவருக்கும் பொதுவாக காலடி,மூப்பன்,குடும்பன்,பன்னாடி,தேவேந்திரன் போன்ற பட்டங்கள் கானப்படுகின்ரனர்.இருவருக்கும் பொதுவாக பள்ளுப்பறை இறை என்ற பொதுஇறைதான்.இருவரில் பெரும்பாலும் விவசாயக்கூலிகளாகவே உள்ளனர்.உன்மை என்னவனில் மூப்பர் என்று ஜாதிகளில் ஒரு நிலையை குறிப்பிடுகின்றனர்.ஆதாவது பறையர் மாடு உரித்து உன்னும் பழக்கம் உடையவர்.பறையர்களின் ஒரு பிரிவினரான(உழுப்பறையர்) விவசாயகூலிகளான காலமாற்றத்தால் மாடு உரித்து உன்பதில்லை.இது புதிய நிலையே ஆனால் பறைய மூப்பர்கள் இன்னும் தம் வழக்கத்தை மாற்றாமல் பாரம்பரியத்தை கடைபிடித்து வருகிறார்கள் இது தான் இன்றைய நிலை. இப்படி பறைய மூப்பர்களுக்கும் பள்ளர்களுக்கும்(உழுப்பறையர்களுக்கும்) பிற்காலத்தில் வயல்வெளிகளீல் யார் விவசாய கூலிகளாக வேலை பார்ப்பத்ற்கு காவிரி மண்டலத்தில் ஒரு கலவரமே 19 நூற்றாண்டில் நடைபெற்றது. In connection with disputes between the right-hand and left-hand factions, it is stated t that " whatever the origin of the factions, feeling still runs very high, espe- cially between the Pallans and the Paraiyans. The violent scenes which occurred in days gone by * no longer occur, but quarrels occur when questions of precedence arise.எனவே பள்ளர் என்பவர் பறையரில் இருந்து தோண்றிய புது இனமே.
இராஜ ராஜ சோழனை பள்ளர்கள் கோறுவது எத்தகைய தன்மையுடையது:
இன்று இராஜ இராஜ சோழனை பள்ளர்கள் தங்கள் இனத்தவர்கள் தங்கள் இனத்தவர்கள் எனக்கூறுகின்றனர்.ஆனால் சோழர்களைப் போல் பல்லவர்களைப் போல் பள்ளர் பறையரை கசக்கி வதக்கி அவர்கள் உழைப்பை குடித்தவர்கள் யாரும் இருந்த்ததில்லை. இதற்க்கும் ஆதாரம் இருக்கிறது.
தஞ்சை பெரிய கோயிலை கட்டும் போது நடந்த நிகழ்ச்சி.வெட்டிக் குடிகளைக் கொண்டு கட்டப்-பட்ட கோயில்கள்தானே! கூலி எதுவும் கேட்காமல், பெற்றுக் கொள்ளாமல் வேலை செய்துவிட்டுப் போக வேண்டியவர்கள் வெட்டிக் குடிகள் எனப்பட்டனர். உதாரண-மாக ஆடு, மாடுகள் மேய்ப்பதற்காக 100,50 எனக் கால் நடைகளைக் கொடுத்துவிட்டு இந்த அளவு நெய் கொடுக்கவேண்டும் என நிர்ணயம் செய்துவிடுவார்கள். அதனைக் கொடுத்துவிட்டு, எஞ்சியிருப்பதைக் கொண்டு கால் வயிற்றுக் கஞ்சியினைக் குடிக்கவேண்டிய-வர்கள் வெட்டிக் குடிகள். உழுது பயிரிட்டு வரிகளைக் கொட்டிக் கொடுத்துவிட்டு அரைவயிற்றுக் கஞ்சி குடித்தவர்கள் உழுகுடி-கள்(பள்ளுபறை). இந்த இரண்டுவகைத் தரித்திர நாராயணர்களுக்குள் பகை, சண்டை. நாராயணனும் அதைப்பற்றிக் கவலைப்பட-வில்லை. நாராயணனின் அவதாரம் என்று புருடா விட்டுக் கொண்டிருந்த சோழ மன்னர்களும் கவலைப்படவில்லை. அதன் விளைவாக, கோயில்களுக்கும் வெட்டிக் குடிகளுக்குமான உறவு கெட்டது. கோயிலுக்-கும் உழுகுடிகளுக்குமான உறவும் கெட்டது. இதற்குக் காரணம் முதுகு முறியும் அளவு சுமத்தப்பட்ட வரிச்-சுமை.
விளைவு _ உழுகுடிகள்(பள்ளுபறை) கோயிலைத் தீ வைத்துக் கொளுத்தினர்
மகேந்திர சதுர்வேதிமங்கலக் கல் வெட்டு இதனை விவரிக்கிறது. அத்தகைய கொடு-மைகளுக்குக் காரணமான கோயிலுக்குத்-தான் 1000 ஆம் ஆண்டு நிறைவு விழா!
எனவே தன் இனத்தை வாட்டி வதக்கி உரிமைகளை சுரண்டிய மன்னனை தன் இனத்தவன் என்று கூறுவது வேடிக்கையை.
பள்ளர்களின் இந்த திடீர் முயற்ச்சிகள் எதனால்? 
ஒவ்வொரு இனமும் தன்னை கால மாற்றத்தால் முன்னேற்றத்திற்கு முயற்ச்சி செய்வது இயல்பே.ஒடுக்கப்பட்ட இனமான நாடார்(சானார்) கிறித்துவ மதப்புத்துனர்ச்சி காரனமாக பல முயற்ச்சிகளின் பின் இன்று வர்த்தக இனமாக உருவெடுத்துள்ளனர்.19-ஆம் நூற்றாண்டு பிற்பகுதியே அந்த இனம் தன்னை மூவேந்தர் இனம் என கோரியுள்ளது.எனவே தம்மை போலவே ஒடுக்கபட்ட இனமான் நாடார்களைப்போல் முன்னேற்றம் கண்டதை முன்மாதிரியாக எடுத்து செயல்படும் பள்ளர்கள் முன்னேற்றத்திற்க்காக கலவரங்களை முன்னெடுத்தும் பயன் தராத்தால் தான் தனது ஜாதிப்பெயரைபள்ளர்(தேவந்திரர்) என்று மாற்றிக்கொண்டு புதியவரலாறுகளை படைத்து அரங்கேற்றி வருகிறது.சோழர் பாண்டியரின் வரலாறுகலை தெளிவாக பண்டாரத்தாரும் சேதுராமனும்(வரலாற்று ஆசிரியர்கள்) 60-களில் எழுதி வைத்து சென்று விட்டநிலையில் இன்று புதிதாக புதிய செய்திகள் கூறுவது அதிசயமாக உள்ளது காரன்ம் இந்த செய்திகளை வெளியிட்ட ஆசிரியர்கள் அந்த சமூகத்தை சார்ந்தவர்கள் தான்.இன்று ஒவ்வொறு சாதியும் தம்மை போலியாக வரலாறு கூறுவதற்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் உள்ளனர் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.
"திருவள்ளுவர் கிறித்துவ மதத்தினர்" என்றும் அதற்க்கான செப்பேடு தான் கண்டுபிடித்தாக ஒரு பாதிரியார் கூறி பின்பு அது போலி என கண்டுபிடிக்கபட்டு அவர் மன்னிப்பு கோரினார் என்ற செய்தி நாடு அறிந்த ஒன்ரே.எனவே  உன்மையை எவராலும் தகர்க்கமுடியாது.

REFERENCE:

CASTE AND TRIBES OF EDGAR THURSTON.
டாக்டர். இரா. நாகசாமி எழுதிய கல்வெட்டில் பறையர்
PARAIYAR(WIKIPEDIA)


புதுசா சாதிகளை ஒழிப்போம் தமிழராக ஒன்று கூடுவோம் என ஒரு பேக் ஐ.டி மூதேவி தேவர்களையும் இதர சாதிகளான மக்களையும் கேவல படுத்த வழிதேடி வேறு வழி இல்லாமல் தங்களைப்போல் போலி சொத்திரியர் என சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டத்தின் புத்தகத்தை எடுத்து எத்தனை சாதிய கேவல படுத்தி இருக்கிறான். ஏன்யா உன் ஜாதி பெயர் என்ன அந்த பெயரை வெளிய சொல்ல முடியுமா? ஆயிரம் அரிதாரம் பூசினாலும் பன்னிக்குட்டி கன்னுக்குட்டி ஆகுமா. இதுகளூக்கு இயற்கை வழங்கிய ஜாதி பெயர் என்ன அதை மாற்ற இயலுமா? எவ்வளவு நினைத்தாலும் அது முடியாது அந்த பெயர் ஒன்னு போதும்? நீங்க எங்க போனாலும் எத்தனை பேக் ஐடி. தொடங்கினாலும் முடியாது.

ஏன் உன் ஜாதியை அந்த நாடார் என்ன சொன்னாருன்னு போடலீயே தம்பி கொஞ்சம் கூட இரக்கமில்லாம இத்தனை ஜாதியை ஆதாரமில்லாம கேவலபடுத்திருக்கான் பாரு.

 http://idangaivalangai.blogspot.in/2015/05/blog-post.html

பள்ளர்
கள்ளர்
மறவர்
வலையர்
உடையார்
இடையர்
பரதர்
குறவர்
வலையர்
சக்கிலியர்


எனப்படும் சமூகத்தில் பெண்களான

பள்ளி
கள்ளச்சி
 மறத்தி
வலையச்சி
உடையாச்சி
இடைச்சி
பரத்தி
குறத்தி
வலையச்சி
சக்கிலியச்சி

ஏண் அதுல ஒரு ஜாதிபெயரு விட்டு போகுதே ஏன் அது பெண்பாலோட சேத்துருக்கோம்னு ஜாதிய தப்பிக்க விட்டுட்டியா? உன் ஜாதி பொம்பலைக மேலாட போட்ட சொத்திரியனுங்கன்னு சேக்காம விட்டுட்டு ஒரு வள்ளுவன் எழுதுனதுபோல போட்டு வெள்ளாளன் மேல பழியை போட்டு தப்பிச்சுட்டதாம். அந்த புத்தகத்துல முக்கால்வாசி உன் ஜாதி பொன்னுகளைதான் கேவல படுத்திருக்காங்க.

மேலாடை இல்லாம சென்ற நூற்றாண்டு எந்த எந்த இனத்து பெண்கள் இருந்தார்கள்னு கொஞ்சம் கூகுல் புத்தகத்துல போய் தேடு தெரியும். ஒரு நாடார் எழுதுன புத்தகத்தை எடுத்து போட்டு இருக்கு.

இந்த புத்தகம் தமிழக ஆவண இலாக்கவில் வெளியான புத்தகமல்ல. இது தமிழ இலாகவில் ஜாதிகளின் புத்தகங்கள் என கடந்த நூற்றாண்டு முதல் பலரின் புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளனர். அதில் நாடார் ஜாதியால் எழுதப்பட்ட அவர்கள் சரித்திரம். 

தமிழக ஜாதிய ஆவண காப்பக புத்தக கூடத்தில் அதிகம் பள்ளிகள் என்னும் வன்னியர்கள் 40-க்கும் மேற்பட்ட புத்தகங்கள். இதற்க்கு அடுத்து இதற்க்கு நிகராக சாணார்கள் என்னும் நாடார்கள் 38 புத்தக்ங்களுக்கும் மேலா இதற்க்கு அடுத்து 20 புத்தக்கங்களுக்கு மேலாக வெள்ளாளர்கள் இதர சாதிகள் எழுதிய புத்தகங்கள் ஒரிரண்டு மட்டுமே . கள்ளர் சரித்திரம் மட்டுமே உண்டு வேறு இல்லை மறவர் சரித்திரம் புத்தகமும் கானாமல் போனதாம் இது தான் நிலைமை இதர சாதிகளுக்கு புத்தங்களே கிடையாதாம்.

இது சாதிகளால் அவர்கள் வரலாறு என எழுதியதை அவர்கள் எழுதியதை ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த ஆவணத்தில் ஒரு ஆவணம் தான் இந்த வலங்கை மாலை. இது நாடார் ஒருவரான சவுந்திர பாண்டிய நாடார் என்பவரால் சென்ற கலைஞர் ஆட்சியில் செமொலி மானாட்டில் பிரசுரிக்கபட்டதாம். இது நாடார்களின் வலங்கை மாலை இதில் பெண்கள் மேலாடை போடாடதை பற்றிய குறிப்பு இருந்ததாம் கொத்தி "இவன் கோவனம் அவுறுதுன்னு ஊரான் பூராம் அமணம்னு சொன்னானாம்" வரலாற்றில் மன்னர் ஆட்சி பற்றி குறிப்பு இருக்குமா இல்லை மேலாடை போட்டர்களா உள்ளாடை போட்டார்களா என குறிப்பு இருக்குமா?

வலங்கை மாலையில் என்ன சொன்னதாம்?

பாண்டியர் வீழ்ச்சிக்கு பின் மறவர் சேர,சோழ,பாண்டிய மண்டலத்தை விழ்த்தினார்களாம் அது வரைக்கும் மறவர் குல பென்கள் மட்டுமல்ல உடையார்,வலையர்,பரதவர்,கள்ளர் இனப்பென்கள் மேலாடை இல்லாமல் இருந்து பின்பு அனிய அனுமதி பெற்றனராம்.

இந்த வலங்கை மாலை எங்கிருந்தது. இந்த கதைகள் யாருடையது. யாருக்கும் தெரியாதாம் ஏனெனில் கதைவிடவும் கற்பனை அல்லது காப்பி அடிக்க தெரிய வேண்டும். இந்த அளவுக்கு நாடாருக்கு அவ்வளவு புத்தியில்லை.

இந்த வலங்கை மாலை ஓலை சுவடிகள் "மெக்கன்சி கையெழுத்து பிரதி" என்னும் ஓலை சுவடிகளில் இருந்து தான் எடுக்கப்பட்டது. மெக்கன்சியின் சேகரிப்புகளை திரித்து அதை ஏதோ கண்டெடுக்கப்பட்ட ஓலை என புதிதாக கதை விடுகிறது வலங்கை கூட்டத்தினர். 

இதில் மறவர்களை பற்றிய குறிப்புகள் தனியாக வேறு ஒன்றில் மறவர் ஜாதி வர்ணம் என வருகிறது அதில் கொஞ்சம் திரித்து இரண்டையும் ஒன்றாக தங்களது சொந்த கருத்தை போலி ஓலை சுவடிகளாக எழுதி அதை பெருமை என சொல்லிக்கொண்டு திரிகின்றது. இதில் மறவர்களை பற்றிய குறிப்பில் இலங்கையில்ருந்து இராமேஸ்வரத்திக்கு குடியேற்றபட்டனர். இவர்கள் இராமநால் இராமேஸ்வரத்தில் குடியேற்றப்பட்டவர்கள். இவர்கள் பாண்டியனுக்கு கீழ் சேதுபதி என்னும் தலைவனுக்கு கீழ் பாண்டியனுக்கு எதிராக கிழம்பி பாண்டிய வங்கிசத்தை ஆண்ட வெள்ளாளரையும் மூவரசுகளை வீழ்த்தி 647 வருடம் மன்னர்களாக அரசாண்டனர் என கூறுகிறது. கம்பன உடையார் வருகை 13 ஆம்னூற்றாண்டு எனில் அதற்க்கு முன் 647 வருடங்கள் எனில் மூவரசுகள் யார் என சொல்ல தேவையில்லை. இது மெக்கன்சி குறிப்பு.


இது தமிழக ஆவணகாப்பகத்தில் 40 புத்தகங்களை கடந்த நூறு ஆண்டுகளாக எழுதி வரும் நாடார்களின் புத்தகம். இன்று தமிழக ஆவணம் என கடந்த செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்டதாம். இதில் என்ன சொல்கிறார்கள் என்றால் வலங்கை உய்யக்கொண்டார்கள் இலங்கையில் அரசுபுரிந்து வந்தனராம். குறிப்பாக இயக்கர்கள் என்னும் யக்ஷர்கள் என்னும் அரக்க வேந்தன் இராவணனின் அமைச்சரவையில் இருந்த அவணின் மந்திரியாக இருந்தவர் தான் வலங்கை மக்களின் மூதாதயராக இருந்தனராம். கரிகால் சோழன் இலங்கை மீது படையெடுத்து வருகையில் பல்லாயிரக்கணக்கான வலங்கையர்களை பிடித்து கொண்டு வந்தானாம். இவர்களை காவிரிக்கு அனை எடுக்க கல்லனையில் விட்ட போது நாங்கள் காளிபுத்திரர்கள் வலங்கை மன்னர்கள் இராவணன் வழிவந்தோர் என கூடையை தொடமாட்டோம் என ஓடினராம். இவர்களை காத்து அடைக்கலம் கொடுத்தவன் பாண்டியன். அதனால் அவனை வாழ்த்தினர்கள்.பின்பு கன்யாகுமரி பிரதேசத்துக்கு வந்தனராம். இதற்குள் சவுந்தரபாண்டிய நாடார் இன்னும் எக்ஸ்டரா பிட்டு நிறை சேர்த்து மறவர்கள் படையெடுத்து சென்று சோழ பறையன் ஒருவனை கொன்று சோழமண்டலம்,சேரமண்டலம்,தொண்டை மண்டலம் முதலிய பல நாடுகளை ஆக்கிரமித்து அதுவரை இல்லாத சலுகைகளை கைக்கொண்டனர் என கதை விட்டுள்ளார். இது ஓலை சுவடி அல்ல மெக்கன்சி கையெழுத்து பிரதியின் காப்பி.

மெக்கன்சி கையெழுத்து பிரதியில் சொன்ன விஷயம் என்ன கொஞ்சம் மெக்கன்சியின் "வலங்கை மாலை" பார்ப்போம். 

"வலங்கை சரித்திரம்" இந்த ஓலை சுவடிகள் பறையர் சமூகத்தை பற்றிய குறிப்புகளைக் கொண்டது. இருந்தாலும் வேளாளர்களையும் வலங்கையில் அங்கம் வகித்துள்ளனர். 


வலங்கை சரித்திரத்தை எழுதியவர் "வேத நாயக்கர்" மெக்கன்சி பிரபுவின் வற்புறுத்தலால் எழுதபட்டது. இந்த சரித்திரத்தை தொடர்ந்து விஸ்வகர்மா என்னும் தேவலோக தச்சனால் உருவாக்கப்பட்ட இடங்கையை சார்ந்த ஆசாரிகளின் சரித்திரமும் வருகின்றது.

1.முதலில் சாம்புக,பரவித்யா,தீயர் என்னும் மகன்கள் மல்லி பெருமான் என்னும் இராவணனின் அமைச்சராக பதவி வகித்தவரிடமிருந்து தோன்றினர்.
2. ஆதி என்னும் பறையர் மாதா மாரியம்மனுக்கு அம்மையானவள் ஒரு பிராமணர் மூலமாக ஆறு குழந்தைகளை பெறுகிறாள். பென்கள் உருவி,வள்ளி அம்மையார்,அவ்வையார் ஆன்கள் திருவள்ளுவர்,சிலைமான்,கபிலர் போன்றோர் தோன்றினர்.
3.பறையருக்குக்கும்(வள்ளுவருக்கும்) பார்ப்பானுக்கும் ஆன வேறுபாடு. 4.நந்த சோழன் என்னும் பறையன் சோழனுக்கும் பறையர் குல பென்னுக்கும் பிறந்தவன் கும்பகோனம் அருகே பட்டிடீஸ்வரத்துக்கு அருகே அரசாளுகிறான் அவனை கம்மாளர் கொன்றுவிடுகின்றனர். இதனால் இடங்கை வலங்கை சண்டை வருகிறது பறையர்களுக்கும்(பூசாரிகள்) கம்மாளர்களுக்கு(கைவினைகலைங்கர்).
சூத்திரர்கள்
===========
இந்திய அரசாங்கத்தின் புதுக்கோட்டை மானுவலில் சொல்லப்பட்டது யாதெனில் வலங்கை மற்றும் இடங்கையை சார்ந்த தொழிலாலர்கள் மற்றும் கைவினைகலைஞர் என்ற இடங்கை வலங்கை பிரிவுகளில் உள்ளவர்களே சூத்திரர் என குறிப்பிடுகின்றது. வலங்கை இடங்கை பிரிவு இரண்டுமே சூத்திரர் தானாம் அரசாங்க அறிக்கை.
இந்த இடங்கை வலங்கை பிரிவுகளில் வீரர்கள் இல்லை ஆனால் இன்றை நாளில் பூஸ்ட்,ஹார்லிக்ஸ்,பெப்சி முதலிய வணிக மையங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்சர் செய்வது போல் தான் இந்த இடங்கையை சார்ந்த கம்மாளர்களும் வலங்கையை சார்ந்த செட்டியார்களும் வீரர்களுக்கு ஸ்பான்சர் செய்வர். அதையே இடங்கை படைவீரர்கள் வலங்கை படைவீரர்கள் எனப்படுவர். அந்த இரு வீரர்களும் சூத்திரர் அல்ல. சூத்திரரின் ஸ்பான்சரில் அரசருக்கு  பனி புரியும் வீரர்கள்.

வலங்கை இடங்கை பிரிவு இரண்டுமே சூத்திரர் என்கையில் வலங்கையைசத்திரியர் நாங்க வலங்கையில்  குடி சத்திரியர்னு சொல்லிகிட்டு திரிந்தால் அது அறியாமை.

இந்த வலங்கை தலைவனாக வருபவர்கள் யார் என இந்த கையெழுத்து பிரதி படித்தால் புரியும்

வலங்கை உய்யகொண்டார்கள் யாரென இந்த வலங்கை மாலை சரித்திரம் படித்தால் தெரியும் இந்த ஆதி என்னும் பறையர் குல பெண் யாருக்கு மூதாதயர் என எட்கர்தர்ஸ்டன் ஷானார் என எழுதியிருக்கும் படிவத்தில் தெரியும்.

இலங்கையில் இரு இனக்குழுவினர் நாகர்,இயக்கர் என்னும் இரு மரபினர்கள் சிங்கள ஆதிக்கத்தின் முன்னர் இருந்தனர் என வரலாறு கூறுகின்றது. இதில் நாகர் என்போர் நாகரீகம் பொருந்தியவர்கள் என்றும் அவர்கள் வடக்கே அரசாண்டனர். தெற்கே இயக்கர் என்னும் தற்கால 'வேடாக்கள்' அரசாண்டனர். இவர்களை தான் அரக்கர் என புராணம் கூறுகின்றது. இயக்கர் கோமான் தான் அரக்கனாக பாடப்பட்டது. அரக்கர் வேறு அசுரர் வேறு. இயக்க,யக்கா,யக்ஷா என கூறுவர், இசக்கி அம்மன்(யக்ஷி மாதா) என கன்யாகுமரி போன்ற தென்னக பகுதிகளில் வழிபடப்படும் தெய்வம் இன்று பல சமூகங்கள் வழிபட்டாலும் அன்று நாஞ்சில் குறவனின் அன்னையாக வணங்கபட்டதாக கருதப்படுகின்றது.மலையாள தேசங்களில் யக்ஷி என்றால் அழகு மயக்கும் நிறைந்தவள் என பொருள். இசக்கி அம்மன் வழிபாடு என்பது கூட குறத்தி அம்மன் வழிபாடுதான். இதே இனம் தான் இலங்கையில் இயக்கர்கள் என அரசாண்டவர்கள். 




இவர்கள் வழிவந்தவன் தான் இராவணன்,தமிழகத்தில் நாஞ்சில் குறவன் போன்றோர்,நாஞ்சில் வள்ளுவன் எனவும் சங்க இலக்கியத்தில் அழைக்கபடுகின்றான் இவனது நாடு வள்ளுவநாடு அல்லது நாஞ்சில் நாடாக இருந்தது. இதே இயக்கர்கள் மாயா தந்திரங்களையும் நன்கு கற்றிருந்தனர். மலையாள பணிக்கர்கள்,கானிக்காரர்கள்,தாந்திரிகள் இவர்கள் அனைவரும் இவர்கள் வழிவந்தவர்கள் தான். வள்ளுவன்,கனியர்கள் என்னும் ஜோதிடத்தில் சிறந்தவனும் இயக்கன் தான் 

மலையாள தேசத்தில் ஈழவர் என்னும் ஈழத்துமன்னர்கள் என்போர் இந்த இயக்கர்கள் வழிவந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களில் பலர் பணிக்கர்கள் என்றும் ஜோதிடத்திலும்,மாயாவித்தைகளிலும்,நரம்பு வர்மத்திலும் மருத்துவத்திலும் கைதேர்ந்தவர்களாக இன்றும் உள்ளனர்.


இந்த இயக்கர்கள் வழிவந்தவர்கள் குவேனி என்னும் அரசி விஜயன் என்னும் சிங்கபுரத்தை சேர்ந்த ஒருவனுக்கு அடைக்கலம் அளித்து அவனை மணந்து பின்பு அவனால் வஞ்சிக்கப்பட்டு கொல்லப்பட்டாள். இன்றைய சிங்கள மக்கள் வந்த சிங்கபுரத்து மக்களுக்கும் இயக்கர்கலுக்கும் கலந்த கலவை தான். இவர்கள் தற்காலத்தில் 'வேடாக்கள்" என்ற பெயரில் வாழ்கின்றனர்.
நெடுங்குடி கோவில் பாண்டியர் கல்வெட்டுகளில். சாணார் வருகின்றனர். 

"ஆயர் சாணார் இடயர் போன்ற சமுதாய்த்தவரும்"...........


வலங்கை இடங்கை பிரிவுகளின் தலைமை இடம் காஞ்சிபுரமாகும் இங்கேயே வலங்கை இடங்கை கல்வெட்டுகளை அதிகம் காண முடிகின்றன.1449 படைவீடு ராஜ்ஜியம்(சாம்புவராயன் ஆட்சியின் கல்வெட்டுகளிலே முதன் முதலில் வலங்கை இடங்கை மகாஜன்ம  என்ற வாக்கியம் பதிவாகி இருந்தது.

வலங்கை மற்றும் இடங்கை வணிகர்கள்,நெசவாளர்கள்,கொல்லர்கள், தோல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் அடிமைகளான கூலித்தொழிலாளர்களும் இவர்கள் மட்டுமே
வன்னிய பள்ளிகள் தங்களை சத்திரியனாக காட்ட பழைய தொழிலை மறைத்தது.

கைக்கோளர் இறைவனுக்காக தன்னையே அர்ப்பந்தித்தது இடக்கையில் முக்கிய செய்தியாக சொல்லப்படுகின்றது.
வலங்கை இடங்கை இந்த இருபிரிவினருக்கும் காஞ்சிபுரம் காளியே முதன்மையான தெய்வமாக சொல்லப்படுகின்றது. காளியின் புத்திரரான வலங்கை இடங்கையினர்கல்.


இடங்கை வலங்கை சாதி மக்கள் தத்தம் பூர்வீகத்தை தேடவும் முனைப்பாக செயல்பட்டனர்.  இடக்கையை சார்ந்த பள்ளிகள்,பள்ளர்கள் தங்களின் பூர்வீகம் ஆந்திரா,ஒரிசா என பல்லவ,பாண்டிய நாட்டுக்கு வெளியே தேடினர். ஆனால்

பறையர்,நத்தமான்,வேடன்,மலையமான் போனற மக்கள் சோழநாடே தங்களின் பூர்வீகம் என கூறுகின்றனர்.

வலங்கை படையினர்(வலங்கை வேளைக்கார்கள் ):

இவர்கள் மட்டுமே வலங்கை பழம் படையினர் என தங்களை குறிப்பிட்டு கொள்கின்றனர்.
இவர்களுள் பறையர்,நத்தமான்,வேடன்,மலையமான் போன்றவர்கள் தங்களை வலங்கை வேலைக்காரர் என்றும் புது படைகளை சேர்க்கும் போது அதற்க்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இடங்கை படையினர்(இடங்கை வேளைக்காரர் ):

பள்ளிகள்,பள்ளர்கள்,சக்கிலியர்,கன்னட வேட்டுவர்கள் அனைவரும் தங்களை இடங்கை வேலைக்காரர்கள் என குறிப்பிட்டு கொள்கின்றனர்.

இதில் பள்ளி,சக்கிலியர் பெண்கள் வலக்கையை சார்ந்ததாக கூறப்படுகின்றது.

இடக்கையை சார்ந்தவர்கள் சோழர் கலிங்கத்தை வெல்லும்போது அங்கிருந்து தமிழ் நாட்டுக்கு பிடித்து வரப்பட்டவைகள் எனவும் கருத்த்தும் வலுப்படுத்துகிறது.

இவர்கள் தவிர வேறு வலங்கை இடங்கையினர் யாரும் இல்லை 





முற்குகர் என்னும் முற்குக வன்னியர்கள் என்னும் கலிங்க மாகன் படையினரின் ஈழத்தின் ஆதிக்கத்தில் முக்குவர்களால் அழிக்கப்பட்ட அந்த இயக்கர்களின் தலைவர்கள் யார்?

வன்னியர்கள்(முக்குவர்) இலங்கைக்கு வருமுன் அடங்காப்பதியில் வாழ்ந்த மக்களினங் காரணமாகவே அதற்கு அப்பெயரிட்டிருத்தல் வேண்டும். அப்பொழுது அம்மக்கள் யாருக்கு மடங்காதவர்களாய் வாழ்ந்தனர் என்பது இதனால் வெளிப்படையாகிறது. வன்னியர் வருவதற்கு முன், அடங்காப் பதியிலுள்ள ஊர்களாய முள்ளி மாநகரிற் சாண்டார்(சானார்) அரசாண்டனர் என்றும், கணுக்கேணியில் வில்லிகுலப்பறையர் அரசு செலுத்தினர் என்றும் தனிக்கல்லிற் சகரன் என்றும், கிழக்கு மூலையில் “இராமருக்குத் தோற்றேயகன்ற ராட்சதர்” ஆட்சி செலுத்தினர் என்றும், மேற்கு மூலையில் அவர்களுள் இழிந்தோராட்சி நடந்ததென்றும் வையாபாடல் கூறும். எனவே, அடங்காப்பதியில் வாழ்ந்த ஆதிக்குடிகள் இவர்களெனல் சாலும். இவர்கள் அப்பொழுது அப்பகுதியைத் தனிக்கல்,கணுக்கேணி, முள்ளிமாநகர், கிழக்கு மூலை, மேற்கு மூலை எனவைந்து பகுதிகளாகப் பிரித்தரசாண்டனர் என்பதும் இவற்றாற் புலனாகும்.

இளஞ்சிங்கவாகு இராட்சதரோடு போர் செய்து வெற்றி கொண்ட போதும், அவர்களை அவனால் முற்றாக அடக்கிவிட முடியாதிருந்தது. அதனால் அவ்வசுரர்களை அடியோடு அழித்து விட வேண்டுமென்று ஐம்பத்துநாலு வன்னியர்கள்(முக்குவர்) ஒன்று சேர்ந்து அவர்களை எதிர்த்துப் போராடினர். அப்போரிலே அசுரர்கள் பெருஞ் சேதமடைந்து சிதைந்தனரெனினும் அவர்களுக்கெதிராய்ச் சமர்விளைத்த ஐம்பத்து நான்கு வன்னியரும் அப்போரிற் பட்டொழிந்தனர். அதன் பின் எஞ்சியிருந்த ஐந்து வன்னியரும் அடங்காப்பற்றை ஐந்து பற்றாகப் பிரித்தரசாண்டனர்.

முற்குகர் என்னும் இராட்சதரை அழித்தவர்கள் குகன் குலம் என்னும் சிவ மறவர் குலம்.


அயோத்தி நகரதற்குப் புகழேயோங்க வரிய திருச்சபையோர்கள் வரிசைகூற மெய்செழிக்க விச்சபையில் வந்திருங்கள் விருதுடனே குலங்கோத்திர மரசுரிமைவேந்தர் பேரும் வையத்தில் வந்தவாறுடனே யந்தமன்னனிருவரன் முறையும் வழுத்துவீராய் பொய்யுரைகள் கூறாமல் வரிசை பெறும் பொருள் தெரியாதாகிலிந்தச் சபையின் பின் போவீரே வீரனென்னும் பரதிகுல யிரகுமுன்னாள் வேட்டை சென்றெங்கள் குலமெல்லிதன்னை மாரனென்றணைத்தீன்ற சவலையர்க்கு வருஇரகு நாடனென நாமமிட்டு பூருவத்தி லயோத்தி யுரிமையீந்து போன பின்னர் சிறிராமர் துணைவராகி
தீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்த சிவமறவர்குலம் நானும் வரிசைகேட்டேன் 

திருப்படைக் களஞ்சியம் முற்றிற்று
நன்றி மட்டகளப்பு மான்மியம்
தீரர் என்னும் அரக்கர் குலத்தை அழித்த மறவர்கள் என மட்டகளப்பு மான்மியம் கூறுகின்றது.

இதே இயக்கர்கள் தான் ஈழவர்கள் என கேரள நாட்டிற்கு இடம் பெயர்ந்தவர்கள் இங்கு சொல்லபட்ட வேடாக்கள் என்னும் இயக்கர்கள் கோவை வேடாக்கள் எனவும் கருதப்படுகின்றது. வள்ளி என்னும் முருகனை மனந்த மனையாள் இவர்களின் நம்பி என்னும் வேடா தலைவன் என்று கதிர்காமம் கோவில் வரலாறு கூறுகின்றது.

சி.எஸ்.ரி என்னும் வரலாற்று ஆய்வு மையத்தை சார்ந்த வலங்கை மக்களின் ஆய்வாளர் தெலுங்கு பிராமணர் எஸ்.இராமசந்திரன் நாஞ்சில் குறவன் யார்? என ஒரு கேள்வி வைத்திருப்பார். காரணம் இதே மக்களே வள்ளுவ நாடாள்வான் நாஞ்சில் நாடாள்வான் என புதிதாக ஒரு தியரி வைத்து சேரனை கோர தலைபடுகின்றனர்.ஈழத்து சாண்டார் என்ற சண்டாளர்களும் இராமானுஜர் காலத்தில் பறையரில் பிராமணராக உயர்ந்த வடுகர் வழிவந்த திருக்குளத்து பிராமணர்களும் பல கதைகளையும் செப்பேடுகளையும் சொந்தமாக செய்து கொள்கிறார்களாம் இது sishri.org போன்ற தலங்களில் பார்த்தால் தெரியும். வலங்கை பறைய சாண்றோரை மூதாதயராக கூறும் கூட்டத்தினர்கள் ஏதோ திரிவிக்கிரமன் அவதாரக்கதைகள் என கதைவிடவும் தங்களுக்கு தெரிந்த கைக்கூலிகளுக்கு செப்பேடுகளையும் தருகின்றது.

நாஞ்சில் வள்ளுவன் நாஞ்சில் நாட்டில் குடியேறிய வெள்ளாளர்களில் பென் கேட்டானாம் அதற்க்கு வெள்ளாளர்கள் சூழ்ச்சி செய்துகொன்றுவிட்டனராம். நாஞ்சில் வள்ளுவன் நாட்டு மொத்த இனமும் அழிந்தா போய்விட்டதா? வள்ளுவன் என்றால் ஜோதிடம்,வாணசாஸ்திரம் என்னும் கலைகளில் நிபுனர்கள் என்றும் தமிழ் கூறுகின்றது. ஈழவ பணிக்கர்களும்,கனியார்களும் இதே திறமையுடன் இன்று திகழ்கின்றனர்இன்றைய நாஞ்சில் நாட்டில் இரு சமூகத்தினர் தான் பெரும்பான்மையோர். ஒன்று நாடார் இன்னோரு சமூகம் வெள்ளாளர்கள். எனவே வாசகர்கள் கவனத்திற்கே விட்டு விட்கின்றேன். யார் நாஞ்சில் வள்ளுவன் வழியினர் என. கோவை பகுதியில் வேடாக்களின் செப்பேடான வெள்ளை நாடார் செப்பேட்டை இராமசந்திரன் ஆராய்ந்தது இந்த காரணங்களுக்கு தான். அதில் வேடாக்கள் வெள்ளை நாடன் என குறிப்பு இருந்தது. நாஞ்சில் நாட்டில் வெள்ளை நாடார் வெள்ளாளர் இடையே ஒரு சண்டை நடந்ததற்க்கு கல்வெட்டு உண்டு.
ஆனால் இதை குறவர்கள் கூட ஏற்றுகொள்ளமாட்டார்கள். ஆனால் சிங்கள கலப்பு ஏற்பட்டதால் கொஞ்சம் வித்தியாசம் தெரியும் இருந்தாலும் ஊர் ஊராக குடியேறுவது. வேறு வேறு ஊருக்கு சென்று வியாபாரம் செய்வது. பாய்முடைதல் கருக்குமட்டை கூடை வேய்வது என அவர்களின் குனங்கள் இவர்களிடமும் காணப்படும.எட்கர் தர்ஸ்டனின் நகரத்தார் குறிப்புகலில் சில வருகின்றது. http://www.gutenberg.org/files/42995/42995-h/42995-h.htm#pl5-257 By other castes, the Nāttukōttai Chettis are said to be the descendants of the offspring of unions between a Shānān and a Muhammadan and Uppu Korava women. நகரத்தாரும் யாரென. ஆனால் தங்களின் மூதாதயர் இராவணன் அரசவையில் அமைச்சராக இருந்துள்ளர் என கோறுகின்றனர். ஆனால் எஸ்.இராமசந்திரனிடம் கேட்டால் தாளஜங்கா மரபினர்,யதுவமிசத்தார் அல்லது மிதிலை ஆண்ட சீதையை பெற்ற ஜனகன் மரபினர்,நேபாள மன்னர் பரம்பரை,சேர,சோழ,பாண்டியர் வலங்கையர் சரித்திரம் என கதை விடுவர். ஏன் நாஞ்சில் வள்ளுவன் வம்சாவளியை கோரவேண்டியது தானே. அப்புரம் எப்படி சத்திரியன் சொல்ல முடியும் என சுத்தி வலைகின்றனர்.

இது தான் ஈழ நாட்டின் இயக்கர்கலும் அவர்களின் தமிழ்நாட்டில் குடிபெயர்ந்தவர்களின் வலங்கை சரித்திரங்கள்.

Paraiyar and Brahmin connection

All the Paraiyars have Y-chromosome haplogroupHaplogroup G,specificallyHaplogroup G2a3b1 (Y-DNA). This shows the Paraiyar males are Caucasians. This Haplogroup G2a3b1 is also found in 10% of Iyer and 13% of Iyengar Brahmins.[13][14]. The Aryan Brahmins have Haplogroup R1a & Haplogroup R2[13][15].
In a note on the Paraiyans of the Trichinopoly district, Mr. F. R. Hemingway writes as follows.[16]
They have a very exalted account of their lineage, saying that they are descended from the Brahman priest SalaSambavan, who was employed in a Siva temple to worship the god with offerings of beef, but who incurred the anger of the god by one day concealing a portion of the meat, to give it to his pregnant wife, and was therefore turned into a Paraiyan. The god appointed his brother to do duty instead of him, and the Paraiyans say that Brahman priests are their cousins. For this reason they wear a sacred thread at their marriages and funerals.At the festival of the village goddesses, they repeat an extravagant praise of their caste, which runs as follows.
‘The Paraiyans were the first creation, the first who wore
the sacred thread, the uppermost in the social scale, the
differentiators of castes, the winners of laurels. They
have been seated on the white elephant, the Vira
Sambavans who beat the victorious drum.’
It is a curious fact that, at the feast of the village goddess, a Paraiyan is honoured by being invested with a sacred thread for the occasion by the pujari (priest) of the temple, by having a turmeric thread tied to his wrists, and being allowed to head the procession. This, the Paraiyans say, is owing to their exalted origin.
From Castes and Tribes of Southern India. Vol. VI. EdgarThurston and Rangachari, K. 1909.(Page.81,82.) [17]
Mr. Stuart mentions that the Valluvans(Paraiya priests) were priests to thePallava kings before the introduction of the Brahmans, and even for some time after it.
The following- extract is taken from a note on the Paraiyans of Travancore by Mr. N. Subramani Aiyar.[16]
In the Keralolpathi, they are classed as one of the sixteen hill tribes. Concerning their origin the following tradition is current. They were originally Brahmans, but, on certain coparceners partitioning the common inheritance, the carcase of a cow, which was one of the articles to be partitioned, was burnt as being useless. A drop of oil fell from the burning animal on to one of the parties, and he licked it up with his tongue. For this act he was cast out of society, and his descendants, under the name of Paraiyas, became cow-eaters.
Castes and Tribes of Southern India. Vol. VI. EdgarThurston and Rangachari, K. 1909.(Page.88,89.) [18]
The facts, taken together, seem to show that the Paraiyan priests (Valluvans), and therefore the Paraiyans as a race, are very ancient, that ten centuries ago they were a respectable community, and that many were weavers. The privileges they enjoy are relics of an exceedingly long association with the land. The institution of the paracheri points to original independence,and even to possession of much of the land. If the account of the colonisation of Tondeimandalam by Vellalans in the eighth century A.D. is historic, then it is possible that at that time the Paraiyans lost the land, and that their degradation as a race began.
In very early days how ever the separation between the Parayas and others do not appear to have been so marked as at present. Though relegated to the lower grade in the social scale Parayas were not then placed absolutely outside and beyond the line of demarcation between them and the Sudras being almost imperceptible and they are even today considered to be direct descendants of the better class of agricultural labourers. The Tamil Vellalas and the Vockalikas (Vockaliyar) do not disdain to call them their children.
From the above genetic connection and other quoted evidence it is clear that once Paraiyars were a race who were Buddhists.[original research?] The Aryan Brahmins converted some of them as Brahmins, the rest who are staunch and radical Buddhists were punished to bemcome as Outcastes or Untouchable low castes.[improper synthesis?]


இந்த சரித்திரத்தை தான் அந்த தரித்திரம் பேக்.ஐ.டி வரலாறு என இட்டுள்ளது. இதில்
https://www.google.com/search?tbm=bks&q=upper+cloth+revolt+in+tamil+nadu

The Spirituality of Basic Ecclesial Communities in the ... - பக்கம்77

https://books.google.com/books?isbn... - மொழிபெயர்
They are widely found in the States of Tamil Nadu and in Kerala. Most of the Nadars are settled in ... The Nadar women revolted in 1859 for the right to wear Melmundu (upper cloth) as any other Brahmin women. The revoltwas known as ...

Temple Entry Politics in Colonial Tamil Nadu - பக்கம்134

https://books.google.com/books?isbn... - மொழிபெயர்
G. Rengaraju - 2006 - ‎துணுக்குக் காட்சி
Jezer Jebanesan, 'A Human Rights Perspective of Upper Cloth Movement, in South Travancore' in Shodhak, Vol.35, Jaipur, September 2006.. Kumaran, R., Travancore Temple Entry Proclamation and its Impact in Tamil Nadu' in Singaravel ...

History of Christianity in India: pt. 2. Tamilnadu in the ... - பக்கம்209

https://books.google.com/books?id... - மொழிபெயர்
Joseph Thekkedath, ‎Church History Association of India - 1990 - ‎துணுக்குக் காட்சி - ‎மேலும் பதிப்புகள்
To the 'higher' castes this appeared to be sheer arrogance, and thus the 'upper-cloth controversy' convulsed the region at the heights of its course through almost half a century. Those heights represent three stages of thecontroversy.

Proceedings of the ... Annual Conference ...

https://books.google.com/books?id... - மொழிபெயர்
the Tamil areas of Travancore with Tamilnadu.18 Eventhough the T. T. N. C. leaders sought the help of the Tamilnadu ... 343 2 S. S. Hector, "TheUpper cloth Revolt in South Travancore," SIHC Proceedings of the First Annual Congress, ...
Upper breast cloth revolt seach google books என கூகுலில் தேடினால் தெரியும் எந்த சமூகத்தின் பெயர் திரும்ப திரும்ப வருகின்றது என சொந்தமாக கதைவிட்டால் அதில் மத்த சமூகத்தையும் கேவலப்படுத்தவேண்டும் என மற்ற இனத்து பென்களும் சங்கை அனியும் பழக்கம் கிடையாதாம். உன் பின்னாடி பாரு மத்தவனுக்கு அமணக்கோலத்த புகுத்திருக்காங்க.

நாடார் இன பென்கள் பற்றி புகைப்படம் ஏராளம் உண்டு. அவை கான்வே கூசுகிறது அவர்களின் வேதனை முலைவரி கட்டியது என நடந்த கொடுமை இங்கு விமர்சிக்கவே வருந்துகிறேன்.

இத சொல்ல கூடாது மறவர் இன பென்கள் எப்படி ஆடை அனிந்தனர் என கூகுலில் தேடினால் தெரியும் இந்தியா என்சைகிலோபீடியாவில் கூகுல் புத்தகத்தில்
சாதாரனமாக 20 அடி புடவைகள் மற்ற இனத்து பென்கள் அனிவர் ஆனால் மறவர் குலத்தோர் பென்கள் 30 அடி சேலை மேலாடை அனிவர் என கூறியிருக்கிறார்கள் மற்ற கூகுல் புத்தகத்தில் தேடினாலும் இதே விடைதான்.

https://books.google.co.in/books?id=FUjzWFsz5fwC&pg=PA3257&dq=Maravar+women+wearing&hl=ta&sa=X&redir_esc=y#v=onepage&q=Maravar%20women%20wearing&f=false

Cyclopædia of India and of Eastern and Southern Asia, Commercial ..., Volume 3





https://books.google.co.in/books?id=zoJRAAAAcAAJ&pg=RA2-PA153&dq=Maravar+women+wearing&hl=ta&sa=X&redir_esc=y#v=onepage&q=Maravar%20women%20wearing&f=false

The Indian Encyclopaedia: India (Central Provinces)-Indology

 edited by Subodh Kapoor



இந்த புத்தகங்களில் எந்த எந்த சாதி எந்த எந்த மூலம் என குறிப்பிட்டுள்ளனர். இது என்சைக்கிலோபீடியா. இதில் ஒவ்வோர் சமூகமும் எப்படி வாழ்ந்தனர் என குறிப்பு வருகின்றது.

Search Results

The Indian Encyclopaedia: India (Central Provinces)-Indology

    https://books.google.co.in/books?isbn=
    8177552686
    Subodh Kapoor - 2002 - ‎Preview

இதில் நாடார் போட்டுள்ள குறிப்பை வைத்து இத்தனை சமூக பென்களையும் ஒருதே கேவலபடுத்தியுள்ளான் அந்த பேக்.ஐ.டி.



பள்ளி
கள்ளச்சி
 மறத்தி
வலையச்சி
உடையாச்சி
இடைச்சி
பரத்தி
குறத்தி
வலையச்சி
சக்கிலியச்சி

நான் எங்களை விமர்சிப்பவரை தவிர எந்த ஜாதி பெண்களையும் விமர்சித்ததில்லை. இதற்க்கு அந்த பெண்பால் பெயர் கொண்ட ஜாதிக்கு துனை நின்றது அகமொடையர் வேலி என்னும் கூட்டமைப்பை சேர்ந்த ஒரு நபரின் ஆவணங்களாம்.இதற்க்கு இயற்கையே சரியான தண்டனை வழங்கும். இந்த சமூகத்தவர்களும் சிந்திப்பீர். இந்த விஷயம் ஆதாரமானது தானா? என என்னுங்கள் இதற்க்கு உங்களின் பதில் என்ன?.

நன்றி:மெக்கன்சி கையெழுத்து பிரதி

யாழ்பாண வைபவமாலை 

2 comments:

  1. டேய் தேவடியாளுக்குப் பிறந்தவனே,திருட்டு சாதிக்குப் பிறந்தவனே,உனக்கு ஏதாவது ஒரு கல்வெட்டு இருக்கா?தேவர்னு பொதுப்பட்டத்த சாதியாக்குன கள்ள சமுதாயம் உன் ஈன சமுதாயம்.பாலைகள்ல திருடி நாயக்கன்ட்ட படுத்த சமுதாயம் தான் நீ? மாடு திருடிப்தே பிழைச்ச நாயே,குற்றப் பரம்பரை நாயே தேவர்னு பட்டம் எல்லா சாதிலயையும் இருக்குடா தேவடியா பயலே. எழும்புத் துண்டு பாளையத்துக்கு ஆசைப்பட்டு நாட்டுக்குத் துரோகம் செய்த நாயக்கருக்கு உன் கள்ளச்சிகளை இன்று வரை கூட்டிக் கொடுக்கற கேடுகெட்ட சமுதாயம்..உனக்கு வரலாறு 13ம் நூற்றாண்டுக்குப் பின் தான்.ஏன்னா அப்பத்தான் நாயக்கன நக்க ஆரம்பிச்சான்.ஆனா மருதநிலத்தை உருவாக்குனர்கள் மள்ளர்கள் வரலாறு 10000 ஆண்டு பழைமை.உன்னால ஒரு மயித்தையும் புடுங்க முடியாது.பொட்ட நாயே

    ReplyDelete
  2. உனது ஜாதிபுத்தி தெரியுதே "நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
    குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்"

    ReplyDelete