Sunday 20 March 2016

முக்குலத்தினர் தேவர் இன மக்கள் யார் ?

===================================

எங்க நாடு இந்தியா - 

===================
அவனவன் வியாபாரம்,விவசாயம், ஆங்கில ஆதரவு சுய ஆதாய அரசியல் செய்து தங்களை வளர்த்து கொண்ட போது, சில  பயலுகளுக்கு  தங்கள் தீண்டாமை  விடுதலைக்கு, கோவில் நுழைவுக்கு,வறுமைக்கு போராடிகிட்டு இருந்தபோது, எங்கள் இன மக்கள் கூட்டம் கூட்டமா உயிரை உடமையை கொடுத்து  இந்த  தேசத்தின் விடுதலைக்கு போராடினோம், அடங்க மறுத்து எதிர்த்து நின்ற கொற்ற பரம்பரை  முக்குலத்தை ஆங்கிலேயன்  குற்றபரம்பரை என்று சட்ட அடுக்குமுறை செய்தும் தோற்றுபோனான், கைரேகை வைக்க மறுத்து தங்கள் கைவிரல்களை வெட்டி எறிந்தனர், அதிர்ந்து போனான் ஆங்கிலேயன்,
ஒரு  INA நேதாஜி படையில்  இல்லாத முக்குலத்து மக்களை இனம் காண்பது அரிது, ஆங்கிலேயர்களால் மலேயாவின் பினாங்கு தீவுக்கு  நாடுகடத்தப்பட்ட  குறிப்பாக அகமுடைய குல முக்குலத்து மக்கள்  மாமன்னர்  மருதுபாண்டியர்கள்  வாரிசுகள்  உடபட, மற்றும் தாங்களாக நாடுவிட்டு  நாடுபோய் வாழ்ந்த சிங்கபூர், மலேயா நாடுகளில் கூட INA படையில் எங்கள் பெண்கள் கூட பங்குகொண்டனர், நேதாஜி  படையின்  துணை  பெண்  கமாண்டர்  முக்குலத்து பெண் "புவான் ஸ்ரீ ஜானகி தேவர்" என்பது குறிப்பிடத்தக்கது,

http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/05/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF-/article2218354.ece

 இவ்வாறு எங்கள் இன மக்கள் பர்மா காடுகளில், கொட்டும் மழையில், இந்திய எல்லையில் சேற்றிலும் சகதியிலும், விஷ பாம்புகள் அட்டை பூச்சி கடியிலும் நின்று பிரிடிஷ்காரர்களுடன் மல்லுகட்டினோம், வா.வூ.சி சுதேசி கப்பல் வாங்க பணம் கொடுத்து உதவியவர் வள்ளல் பாண்டிதுரை தேவர், பிறகு கப்பல் கம்பனி நொடித்தபோது அந்த நஷ்டத்தை ஏற்றுக்கொண்டவர் வள்ளல் பாண்டிதுரை தேவர்,


தேசிய ஒருமைப்பாடு இறையாண்மையை காக்கும் தேவர்கள் - 
=====================================================
விடுதலைக்கு பின்னும் இன்றுவரை நாங்கள் "உடல் மண்ணுக்கு உயிர் தேசத்திற்கு" என்ற பசும்பொன் சித்தர் வழியில் நாட்டின் விடுதலைக்கு பின்பும் இந்த தேசத்தின் இறையாண்மை பாதுக்காப்பில் தேவர் சமூகம் அளப்பெரிய பங்கு உள்ளது, பாகிஸ்தான்  தீவிரமாக பிரிவினையை எதிர்த்தார் தேவர், காந்தி வாங்கிய இந்திய சுதந்திரத்தை மூளி சுதந்திரம் என்று சாடினார் தேவர், பாகிஸ்தானில்  பிரிவினையின் போது  வெட்டி கொலை செய்தபோது கொத்தித்து எழுந்தவர் தேவர்,பாகிஸ்தான் பிரிவினைக்கு C. R. formula  திட்டம் வகுத்து கொடுத்தவர்களில் ஒருவரனான ராஜாஜியை நண்பர் என்றும் பாராமல் சட்டசபையில் கேள்விகளால் துளைத்து எடுத்தார், இன்றும் சட்டசபை குறிப்பில் உள்ளது,
https://en.wikipedia.org/wiki/C._R._formula
அண்ணாதுரையின் திராவிட தனி நாடு  கோரிக்கையை வழுவாக எதிர்த்தவர் பசும்பொன் தேவர்,
நாட்டின் சட்டம் ஒழுங்கை, எல்லையை காக்க காவல்துறை,துணை ராணுவப்படை, ராணுவத்தில் எம்மவரே  அதிகம் பங்களிப்பு  செய்கிரனனர், கடந்த மாத பாகிஸ்தான்,சீன  எல்லையின் சியாச்சின் பனி சரிவில் சிக்கி உயிர் துறந்தவர்களில்  தேனியை சேர்ந்த  கணேசன் என்ற எம் இனத்தவர் உண்டு,
======================================

எங்கள் தாய் மொழி செம்மொழி செந்தமிழ் - அதற்க்கு எம்மவர்களின் பங்கு !!!

=====================================================

மொழியை வளர்க்க எம்மவர்கள் ஒருநாளும் சகோதர இந்திய மொழிகளை பழித்தோ, அல்லது வெறுப்புணர்வை தூண்டியோ, வெற்று வீர சூர மேடை பேச்சுகளை செய்தவர்கள் அல்லர், மாறாக ஆக்கபூர்வமான உலகம் ஏற்கும் அறிவியல் ரீதியான ஆய்வுகள் மூலம் எம்மவர்கள் தமிழ் மொழியை வளர்த்தார்கள், அதில் தமிழர்களால் என்றும் நன்றியோட பார்க்க பட வேண்டிய சேது மன்னர்கள்,
உலகின் தொன்மொழி, தேன்மொழி,செம்மொழி தமிழ் மூத்த மறக்குடி என்பதில் பெருமை கொள்வோம், சங்கம் வச்சு தமிழ் வளர்த்தனர் எங்கள் மக்கள் கடைசியாக நான்காம் தமிழ் சங்கத்தை  நிறைவு செய்தவர்  வள்ளல் பாண்டிதுரை தேவர், தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார் தேவர்,
சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய-  தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், இரா.ராகவையங்கார், மு.ராகவையங்கார், அரசன் சண்முகனார், ராமசாமிப்புலவர், சபாபதி நாவலர், சிங்காரவேலு முதலியார், நாராயண அய்யங்கார், சுப்பிரமணியக் கவிராயர், சிவஞானம் பிள்ளை, சிவகாமி ஆண்டார், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், புலவர் அப்துல்காதிர் ராவுத்தர், எட்டயபுரம் சாமி அய்யங்கார், பரிதிமாற்கலைஞர், அரங்கசாமி அய்யங்கார், சி.வை.தாமோதரம் பிள்ளை - ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான 'செந்தமிழ்' ஏடே உதவியது.

சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவரையே  சாரும்! தேவரின் ஆதரவுடன் அவர் அமைத்த மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்ற பரிதிமாற்கலைஞர் மூலம் ஊக்கமளித்து தமிழ் காத்தவர் தேவர் என்பது  குறிப்பிடத்தக்கது. "தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள்.

எங்கள் மதம் இந்து -

=================
தேசியமும் தெய்வீகமும் எங்கள் இரு கண்கள் என்று சொன்ன தேவர் அய்யா வழியில் காலம் காலமாக இந்து மத வளர்ச்சியில் இராமாயண புராண காலத்தில் இருந்தே இருந்துள்ளோம், தேவர் என்ற  ராஜகுல வடமொழி பட்ட சொல் தூய தமிழ் மறகுடிக்கி கிட்டியதே இதற்க்கு சான்று,
ராமர் சேது பாலம் காக்கும் சேதுபதி அதாவது தமிழில் சேது பாலத்துக்கு காவலர்கள் பொறுப்பானவர்கள் என்று இன்றும் உள்ளது,
இந்துமாகா சங்கம் ஸ்தாபகர் வீர சாவகர்கர், RSS கோல்வால்கர் போன்ற இந்துமத தலைவர்களை தமிழகத்தில் விழா எடுத்து பணமுடிப்பும் கொடுத்து காத்தவர் தேவர் அய்யா, மதுரையில் மீனாச்சி அம்மனை இழிவு செய்து  ஆத்திக பிரச்சாரம் செய்த  அண்ணாதுரையை விரட்டியவர் தேவர், ராமசாமி நாயகனின் பூணூல் அறுப்பு கூவலுக்கு அடைக்கலம்  நாடிவந்த பிரமானர்களை காக்க பூணூலில் கைவைத்தால் ராமசாமி  நாயக்கன் வெண் தாடி அறுக்கப்படும் என்று கர்ஜித்தவர் தேவர் அய்யா,
https://www.youtube.com/watch?v=Y5risk29esI

அமெரிக்காவில் இருந்து தனக்கு வந்த ஆன்மீக சொற்பொழிவு அழைப்பை முக்குலத்து சேது சீமை மன்னர் பாஸ்கர சேதுபதி  சென்னை வந்திருந்த  விவேகானதரிடம் கொடுத்தபோது அவர் செல்ல மறுத்தார், நம் கலாச்சாரம் பண்பாடு  உலகம் அறிய வேண்டும் அதை என்னைவிட  சிறப்பாக  உங்களால் செய்ய முடியும் என்று வற்புறுத்தி சம்மதிக்க வைத்து விவேகானந்தர் வரலாற்று சிறப்புமிக்க "சிகாக்கோ " உரைக்கு பின்புலம் எம்மவர்கள், அங்கேதான் உலகம் இந்திய மத கலாச்சார பண்பாடு எவ்வளவு மென்மையானது என்பதை உணர்ந்துகொண்டது, மொத்த இந்திய தேசத்தை விவேகானதர் என்ற மகான் மூலம் பெருமை படுத்திய பெருமை எம்மவர்க்கு உண்டு , மேலும் அதன் மூலமே  விவேகானந்தர்  இந்தியா முழுதும் அறியப்பட்டார்,
----------------------------------------------------
சமூக நீதி -
==========
பொதுவுடைமை, சமூகநீதி என்று பிழைப்பு அரசியல் நடத்தாமல் செயல்வடிவில் செய்தவர் தேவர் அய்யா,
அரிசனசேவக சங்கத்தின் தலைவராக திகழ்ந்த மதுரை நகர காங்கிரசு தலைவர் வைத்தியநாதய்யர் தலித் இனத்தினர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நுழையத் தடை என்றொரு நிலை இருந்து பின்னர் 1939ல் ஆலய பிரவேசப் போராட்டம் நடந்த பாதுகாப்புகொடுத்தவர் தேவர்,
https://www.youtube.com/watch?v=3PPyNrHS1VM
அவர் தலித் மக்களுக்கு தன் சொத்துக்கள் அ னநைத்தையும் எழுதிகொடுத்து, செயலால் பொதுஉடமையை செய்து காட்டியவர்,
மாற்று ஜாதியை சேர்ந்த காமராஜர் உட்பட பல தலைவர்களை அரசியில் ஜோளிக்கவைத்த எம்மவர்கள்
http://www.dinamani.com/tamilnadu/2015/11/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-/article3135399.ece




மதநல்லிணக்கம் - 

================
இஸ்லாமிய மக்கள் -

இஸ்லாமிய அடிப்படை வாதி பழனி பாபா தேவர் பற்றி
https://www.facebook.com/1641549492726982/videos/1643516332530298/
========================================

தேவர் என்றால் ஜாதி இல்லை சரித்திரம் !!!

No comments:

Post a Comment